tag:blogger.com,1999:blog-2970456069088937083.post6304739604455583347..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: கலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-44901485439674723222010-10-29T13:42:17.469-07:002010-10-29T13:42:17.469-07:00மிக அருமையான கட்டுரை ரவிக்குமார்!
பகிர்ந்தமைக்கு ந...மிக அருமையான கட்டுரை ரவிக்குமார்!<br />பகிர்ந்தமைக்கு நன்றி.<br /> <br />கீழே நீங்கள் பதித்த அயோத்திதாசர் கருத்து அருமை! <br /> <br />// 'தையல் சொற்கேளேல்' என்பதற்கு பெண்ணின் வார்த்தைகளைக் கேட்கக் கூடாது என்ற பொருளே பலராலும் கூறப்பட்டு வந்தது. அதை மாற்றிப் புதிய கோணத்தில் அயோத்திதாசர் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். எதிரியால் உன்னைத் தைக்கக்கூறுமொழிக்கு செவி கொடுப்பாயாயின் கோபம் ஏற்பட்டு அவனுடன் போர்ச் செய்ய நேரும் அதனால் துக்கம் பெருகும். எனவே எதிரியின் அந்த மொழிக்கு செவி கொடுக்கவேண்டாம் என்று விளக்கம் அளிக்கிறார் அயோத்திதாசர். //<br /> <br />வேறுசில இடங்களில் கருத்து மாறுபாடு உண்டு. பெய்யெனப் பெய்யும்<br />மழை என்பது சங்க இலக்கியத்திலும் பயின்று வந்துள்ளது என்று<br />பி.எல் சாமி எங்கோ குறிப்பிட்டதைப் படித்த நினைவு உள்ளது.<br />அதாவது இப்பொழுது மழை பெய்தால் நன்றாக இருக்கும்<br />என நினைத்தால் அப்பொழுதே மழை பெய்தால் எத்தனை<br />இன்பம் பயக்குமோ அத்தனை இனியள் என்று பொருள் என்றும்.<br />பெய்யெனப் பெய்தல் என்பது ஒரு மரபுத் தொடர் என்றும் படித்த<br />நினைவு. தொழுதெழல் என்பது கூடி, சேர்ந்து எழுதல். தொழு என்பது<br />சேர், கூடு. தொழுதி என்றால் கூட்டம். தொழுவம் என்றால் மாடுகள்<br />சேர்ந்து கட்டியிருக்கும் இடம். தொழுகை என்றால் பலர் கூடுவது மட்டும்<br />இன்றி உள்ளத்துள் ஒன்றித்து (சேர்ந்து) இருத்தல். கை இரண்டும் கூப்புவதும்<br />(சேர்த்தி இருப்பதும்) தொழுதலைக் குறிக்கும்.<br /> <br />பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் சேறல் என்பதும் பிற குறள்களும்<br />கலைஞரின் கருத்தோடு ஒத்து உள்ளதா?<br /> <br />உங்கள் கட்டுரையால் கலைஞரின் உரையைப் படிக்கவேண்டும் எனத்<br />தூண்டுகின்றது. நன்றி.<br /> <br />அன்புடன்<br />செல்வாAnonymousnoreply@blogger.com