tag:blogger.com,1999:blog-2970456069088937083.post7905340929324460635..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: ”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார் Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-24427893549664747572012-12-08T20:38:42.035-08:002012-12-08T20:38:42.035-08:00இல்லாத சாதிக்காக மண்டையைக் கசக்குவதை விட, இருக்கிற...இல்லாத சாதிக்காக மண்டையைக் கசக்குவதை விட, இருக்கிற சாதிக்கு மண்டை<br />உடைப்பது மேல். ஆண், பெண் என இரு சாதிகள் இருப்பது கண்கூடு. அதிலே<br />பெண்சாதிக்குச் சற்று அல்லது அதற்கும் கீழான நிலை. முதலில் நாம் நம்<br />வீட்டுப் பெண்களுக்கான உரிமைகளைக் கொடுக்க முன் வருதல் வேண்டும்.<br /><br />அப்படிக் கொடுக்கிற போது, அண்டை வீட்டாரும் கொடுத்தாக வேண்டிய சூழல்<br />வரும். அப்படியாக பெண் சாதி மேம்படுகிற போது எல்லாமும் மேம்படும்.<br />இந்தியா என்கிற நாடு தழைக்க அதுதான் இன்றியமையாதது.<br />-பழமைபேசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-53226106945264604562012-12-08T20:37:43.536-08:002012-12-08T20:37:43.536-08:00சற்று நேரத்திற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் சுப...சற்று நேரத்திற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் சுப.வீரபாண்டியன் அவர்கள் 9 மணி நிகழ்ச்சியில் தர்மபுரிக் கொடுமை பற்றிப் பேசினார். 278 கான்கிரீட் கட்டிடங்கள் ஆறு மணி நேரத்திற்குக் காவல்துறைகூட தடுக்காமல் திட்டமிட்டு எரிக்கப்பட்டன என்று கூறினார். பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, பட்டுப்புடவை போன்றவை கொள்ளையடிக்கப்பட்ட பின் எரிக்கப்பட்டது திட்டமிட்ட நடவடிக்கை என்பதற்குக் காட்டு என்றார். இது உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஒரு கணத்தில் எழுந்ததன்று என்றும் சொன்னார்.<br />பாடப்புத்தகங்கள் எரிக்கப்பட்டது கல்வியை அழிக்க என்று அவர் சொல்லியது மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றியது. கொள்ளை அடித்தவர்களுக்குப் பிற பொருட்கள் பற்றி என்ன கவலை இருந்துவிடப்போகிறது. புத்தகம் அவர்களுக்குப் பயன் இல்லாதது. அவவளவுதான்.<br />பேச்சில் ஒரு தெளிவு இதுவரை இருந்தது. ஆனால் இறுதியில் முத்தாய்ப்புக் குரலில் இதன் முடிவு திராவிடம் வெல்லும்; சாதியம்தோற்கும் என்று அவர் முடித்ததின் பொருள் தான் புரியவில்லை!<br />தொல்.திருமாவளவன் அவர்கள் பேட்டியிலிருந்து திராவிட தேசிய கட்சிப்பாகுபாடில்லாமல் ஆதிக்க சாதிகள் கூட்டு என்று அறியமுடிந்தது.<br />இவர் திராவிடம் வெல்லும் சாதியம் தோற்கும் என்கிறார்! எல்லோரும் கூட்டுச் சேரும்போது சாதியம் தோற்கும் என்பது பேச்சோடு நிற்கவேண்டியதுதான்.<br />அன்புடன்<br />சொ.வினைதீர்த்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-55625316748553633862012-12-08T20:36:21.000-08:002012-12-08T20:36:21.000-08:00இன்றைய இந்தியாவுக்கு அத்யாவசிய தேவை. ‘டார்ட்’ சட்ட...இன்றைய இந்தியாவுக்கு அத்யாவசிய தேவை. ‘டார்ட்’ சட்டம் தர்மத்தின் அடிப்படையில். வினையறுத்தவனை வினை அறுக்கும். வினை தீர்த்தான், அரசு இயந்திரம். இந்தியாவில் மனுஸ்மிருதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் காணக்கிடைக்கிறது. அது இங்கிலாந்தில் வித்திட்டதே 17ம் நூற்றாண்டில். நல்ல சட்ட திட்டங்கள். இந்தியாவில் 1860லிருந்தே ஐ.பி.சி.யில் அதனுடைய வித்து இருந்தாலும், பல தீர்ப்புகள் இருந்தாலும், நமது அரசியல் சாஸன ஷரத்து 300ல் அதற்கு ஆதரவு இருந்தாலும், இன்றளவும் அதை நாம் சரியாக பரிசோதிக்கவில்லை. நான் மாணவனாக இருந்த காலத்தில் சென்னை சட்டக்கல்லூரியில் டார்ட் சட்டத்துக்கு ஆதாரத்துடன் பாடம் எடுத்த பேராசிரியர் அருணாசலம் அவர்களை நினைத்துக்கொள்கிறேன். என் குறிப்புக்கடுதாசிகளையும், கையில் உள்ள சட்டநூல்களையும் நோக்கினேன். பல மணி நேர வேலை இருக்கிறது. மற்ற எல்லா வேலையும் நின்று விடும்.ஆகவே, ஒரு சின்ன முன்மாதிரி கேசை சொல்லி நிறுத்துகிறேன். மற்றவர்கள் காரியத்தில் இறங்கப்போவது இல்லையானால், நான் மேலும் எழுதுவது வியர்த்தமாகப் போகலாம்.<br />உங்களுக்கு தனி மடலில் இணைய தளத்தில் கிடைக்கும் கட்டுரைகளை அனுப்பலாம். பிடிபடுவது முதலில் கஷ்டம். பிறகு எளிது. வசதி எப்படி?<br /><br />இங்கிலாந்து வழக்கு:Donoghue v. Stevenson. (1932) A.C. 562.)<br />‘Single most important decision in the history of the law of torts'? but even as the "most important decision in all the common law...’<br /><br />டோனாக்ஹ் மாமி வாங்கிய ஜிஞ்சர் பீர் பாட்டிலில் நத்தை. குடித்த அருவருப்பு: வயிறு கோளாறு. நஷ்ட ஈடு கேட்டார். ஜெயித்தார்.<br />கடந்த 60 வருடங்களில் சட்டம் மேன்மை ஆகியிருக்கிறது. இந்த வழக்கு சின்னது. கோட்பாடு அதர்மபுரியில் அமல் ஆகக்கூடும்.<br />இந்தியா:<br />1860 ஆண்டில் இயற்றப்பட்ட இ.பி.கோ. 500: ஒருவர் மற்றொருவரை மானநஷ்டம் செய்தால்/ அவமான சுவரொட்டி/ பதிவு செய்தால் இரு வருடம் வரை சிறை. அபராதமும் விதிக்கலாம். <br />கோட்பாடு அதர்மபுரியில் அமல் ஆகக்கூடும். இ.பி.கோ. 357(1) ன் படி ஒரு குற்றவாளியை தண்டிக்கும் போது அவன்/அவள் இழைத்த குற்றத்தால் இன்னல் பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கச்சொல்லலாம். இ.பி.கோ. 357(3) படி இன்னம்பட்டவர்களுக்கு ஆறுதல் ஈடு கொடுக்கச்சொல்லலாம்.<br /><br />நான் சொன்னது அரிச்சுவடி. கணிசமான நண்பர்கள் கேட்டால், தொடர நினைக்கலாம். <br />வர, வர , கை வலி அதிகம். பகிர்ந்து கொள்ள ஆர்வம் கூடுகிறது.<br />நன்றி, வணக்கம்.<br />இன்னம்பூராம்<br />05 12 2012Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-73006880554714567522012-12-04T21:10:34.730-08:002012-12-04T21:10:34.730-08:00மனதில் தைக்கும் ஆழ்ந்த எழுத்து.மனதில் தைக்கும் ஆழ்ந்த எழுத்து.nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.com