tag:blogger.com,1999:blog-2970456069088937083.post8465399395600220273..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: சுனாமி பேரழிவு - சேரன் கவிதைகள்Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-76312517484600106002012-12-24T05:26:59.196-08:002012-12-24T05:26:59.196-08:00அன்பு ரவிக்குமார்,
சேரன் என் இனிய நண்பன். அவரது க...அன்பு ரவிக்குமார்,<br /><br />சேரன் என் இனிய நண்பன். அவரது கவிதைகளைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி.<br /><br />அவரது தந்தை தமிழின் மகாகவிகளில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில்<br />தமிழுக்கு நவீனத்துவம் அளித்த கவிஞர்களில் முக்கியமானவர். எத்தனையோ<br />பரிசோதனைகள் தமிழ் யாப்பிலும், கவிதையிலும் செய்தவர் மகாகவி<br />ருத்ரமூர்த்தி (அளவெட்டி).<br /><br />தென்தமிழ்நாட்டில் ஊர்களின் தேரோட்டங்களில் இன்னமும் நிகழும்<br />சாதிப் பிரச்சினை பத்திரிகைகளில் வருகிறது. அதனை முதலில்<br />கவிதையில் சொன்னவர் மகாகவி (சேரனின் தந்தை) தான்.<br />1969-லேயே தமிழர்/திராவிடர் சமூகங்களின் மிகப்பழைய சமுதாயச் சிக்கலைக்<br />கவிதையாய் அம் மகாகவி வசனகவிதையாய்ப் பேசியிருக்கிறார்.<br />http://nganesan.blogspot.com/2009/03/therottam.html<br /><br />----------------------------------------------<br /><br />தேரும் திங்களும்<br />மகாகவி உருத்ரமூர்த்தி (1969)<br /><br />"ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;<br />வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"<br />என்று<br />வந்தான் ஒருவன்.<br /><br />வயிற்றில் உலகத்தாய்<br />நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்<br />பெற்ற மகனே அவனும்.<br />பெருந் தோளும்<br />கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை<br />உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.<br /><br />வந்தான். அவன் ஒரு இளைஞன்;<br />மனிதன் தான்.<br />சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே<br />முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு<br />மீண்டவனின் தம்பி<br />மிகுந்த உழைப்பாளி!<br /><br />"ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்<br />வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு<br />வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.<br /><br />"நில்!" என்றான் ஓரான்<br />"நிறுத்து!" என்றான் மற்றோரான்.<br />"புல்" என்றான் ஓராள்<br />"புலை" என்றான் இன்னோராள்<br />"சொல்" என்றான் ஓராள்<br />"கொளுத்து" என்றான் வேறோராள்.<br /><br />கல்லொன்று வீழ்ந்து<br />கழுத்தொன்று வெட்டுண்டு<br />பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு<br />சில்லென்று செந்நீர் தெறிந்து<br />நிலம் சிவந்து<br />மல் லொன்று நேர்ந்து<br />மனிசர் கொலையுண்டார்.<br /><br />ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்<br />வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்<br />பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ<br />உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற<br />மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.<br /><br />முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு<br />வந்தவனின் சுற்றம்<br />அதோ மண்ணிற் புரள்கிறது!<br /><br />----------------------------------------<br /><br />கனடாக் கவிஞர் சேரன் 20 ஆண்டு முன்னர் என்னிடம்’அளித்த<br />மகாகவி (ருத்ரமூர்த்தி) புஸ்தகங்களில் இருந்து.<br /><br />இலங்கைத் தமிழர்கள் நூலகம் போன்ற தளங்களில்<br />மகாகவி போன்ற ஈழக்கவிதைகள் எல்லாமும் தட்டெழுதி<br />வெள்ளுரையாய் (ப்லைய்ன் - டெக்ஸ்ட்) வைக்க வேண்டும்.<br />நேற்று தான் பேரா. ந. தெய்வசுந்தரம் ஐயாவுக்கு<br />தான் அனுப்பும் எம்எஸ் வொர்ட் கட்டுரைகள் செழியுரையாய்<br />(ரிச்-டெக்ஸ்ட்) அனுப்புவதுடன், அவரே ஒரு வலைப்பதிவில்<br />அவரது முக்கியமான கட்டுரைகளை வெள்ளுரையாய்<br />இட்டுவந்தால் தமிழ் மாணவர்களுக்கு என்றும் பயன்தரும்<br />என்று சொன்னேன். பேரா. ந. தெ. அவர்களும் ஒப்புக்கொண்டார்.<br />சிந்தனையாளர்கள் ரவிக்குமார், முனைவர் தெய்வசுந்தரம், ...<br />போன்ற இன்னும் பலர் தமிழ்நாட்டில் இருந்து வலைப்பதிவில்<br />எழுத வேண்டும். அப்போது தான் தமிழ் வளரும்.<br /><br />நா. கணேசன்Anonymousnoreply@blogger.com