tag:blogger.com,1999:blog-2970456069088937083.post2560122257940695570..comments2024-01-02T23:18:36.679-08:00Comments on நிறப்பிரிகை: வாத்திச்சி என்றால் கேவலப்படுத்துவது ஆகாதா?Ravikumarhttp://www.blogger.com/profile/08228553986560225040noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2970456069088937083.post-86074073629800141242012-12-10T08:00:22.427-08:002012-12-10T08:00:22.427-08:00நாஞ்சில் நாட்டில் பொதுவாக வாத்தியார், வாத்திச்சி எ...நாஞ்சில் நாட்டில் பொதுவாக வாத்தியார், வாத்திச்சி என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. இவைகள் மரியாதையான சொற்களாகதான் பாவிக்கப்பட்டு வந்தது. இப்பொதைய நிலமைத் தெரியாது.naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-6469806867731704762012-12-09T21:10:23.753-08:002012-12-09T21:10:23.753-08:00அன்புள்ள ரவி,
சேமித்த கவிதை நன்றாக இருக்கிறது. சி...அன்புள்ள ரவி,<br /><br />சேமித்த கவிதை நன்றாக இருக்கிறது. சில சமயம் நாம் எல்லோருமே பறக்கத் துணிவில்லா நீர்ப்பறவையாகத் தான் இருக்கிறோம். வண்ணதாசன் கடிதங்கள் உங்களிடம் மூட்டிய ஆத்திரத்தை என்னுள்ளும் மூட்டியுள்ளன அவை புத்தக வடிவில் வெளிவந்தபோது. ஆனால் அவர் மிக நல்ல கதைகள் பல எழுதியிருக்கிறார். ’தனுமை’ அதில் ஒன்று. வண்ண நிலவனும் மிகச் சிறந்த எழுத்தாளர்தான். சு.ராவுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?<br /><br />பல ஆசிரியர்கள் ஆரம்ப கால கல்வி இயக்கத்தில் கிறித்துவர்களாகவே இருந்ததால்தான் வாத்திச்சி என்ற சொல் வந்தது என்று நினைக்கிறேன். டீச்சர் என்ற சொல் வந்தது அப்புறம்தான் என்று தோன்றுகிறது. <br /><br />அன்புடன்,<br /><br />அம்பை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2970456069088937083.post-12710706172441748552012-12-09T21:09:52.451-08:002012-12-09T21:09:52.451-08:00எனக்குத் தெரிந்தவரை "வாத்திச்சி" என்ற சொ...எனக்குத் தெரிந்தவரை "வாத்திச்சி" என்ற சொல் கேவலப்படுத்துவது இல்லை. நான் நெல்லை மாவட்டத்தில் பிறந்தவள். அங்கே என் முந்தைய தலைமுறை உறவினர் இந்தச் சொல்லை "ஆசிரியை" என்ற பொருளில் பயன்படுத்தியது உண்டு. அதனால் நானும் என்னைத் 'தமிழ் வாத்திச்சி' என்று சொல்லியிருக்கிறேன். அது கேவலம் என்றால் எனக்கு விளக்கத் தெரியாது! :-) <br />இன்னும் சில பயன்பாட்டையும் நினைத்துப் பார்க்கலாம். "வடமா, வாத்திமா" "வடமாக் கட்டு, வாத்திமைச் செட்டு" என்று. இதெல்லாம் என் பெரியம்மாப் பாட்டி (அம்மாவின் பெரியம்மா) சொல்லிக் கேள்வி. அந்தச் சிறு வயதில் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கத் தெரியவில்லை! :-) <br /><br /><br /><br /><br />வீ .எஸ்.ராஜம் Anonymousnoreply@blogger.com