Tuesday, December 15, 2015

மழை வெள்ளம்: நூலகங்களைப் புனரமைப்போம்! - ரவிக்குமார்




சென்னையில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும் பொதுநூலகங்கள் பல மூழ்கிப்போயின. அவற்றை சீர்படுத்தவும் சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நூலகங்களுக்குப் புதிய புத்தகங்களை வழங்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். 

சேதமடைந்த நூலகங்கள்: 

முதல்கட்டமாக இந்த மாவட்டங்களில் சேதமடைந்த நூலகங்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. சென்னை புதுத் தெருவில் உள்ள நூலகக் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. சில நூலகங்களில் புத்தகங்களை வைப்பதற்கான அடுக்குகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நூலகங்கள் அனைத்துக்கும் நூல்கள் தேவைப்படுகின்றன. 

சுத்தப்படுத்தப்பட்ட நூலகங்கள்: 

சென்னை அசோக்நகர், சிஐடி நகர் நூலகங்கள் சேறும் சகதியும் நிரம்பிக் கிடந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை என நான் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளைப் பார்த்து பலர் தொடர்புகொண்டனர். எனது வேண்டுகோள் தந்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. அதன்மூலமும் பலர் சென்னை மாவட்ட நூலக அலுவலதைத் தொடர்புகொண்டனர். அறுபது தன்னார்வலர்களின் பங்கேற்புடன் இரண்டு நூலகங்களும் சுத்தப்படுத்தப்பட்டு இப்போது செயல்படத் தொடங்கிவிட்டன. 

தேவைப்படும் உதவிகள்: 

சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு புத்தக அடுக்குகளும், புதிய புத்தகங்களும் தேவைப்படுகின்றன.  

அறிவுப் பசி போக்குங்கள்: 

மழை வெள்ளப் பாதிப்பை அறிந்து தன்னார்வத்துடன் உணவும் உடைகளும் பிற பொருட்களும் கொடுத்து உதவியவர்கள் தன்னார்வலர்களும் நிறுவனங்களும்தான். வயிற்றுப் பசி போக்கியதைப்போல அறிவுப் பசி போக்குவதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

தொடர்புக்கு: 

உதவிசெய்ய முன்வருவோர் 94430 33305 என்ற கைபேசியிலோ, manarkeni@gmail.com என்ற மின்னஞ்சலிலோ என்னைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி

No comments:

Post a Comment