Tuesday, September 6, 2022

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

 மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்

‘நிகரி சமத்துவ ஆசிரியர் விருது ’

=============

 

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணத்தால் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020, 2021 ஆண்டுகளுக்கான விருதுகளும்; 2022 ஆம் ஆண்டுக்கான விருதும் இப்போது அறிவிக்கப்படுகின்றன. 

 

2020 ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு. க.பாரி , அரசு மேல்நிலைப்பள்ளி, விராட்டிக்குப்பம்

கல்லூரி பேராசிரியர் - திருமதி இரா.தமிழரசி சற்குணம், அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆட்டுப்பாக்கம், ராணிப்பேட்டை

 

2021 ஆம் ஆண்டுக்கு

பள்ளி ஆசிரியர் - திரு சு.அருணகிரி, அரசு உயர்நிலைப்பள்ளி, சென்னகுணம்

கல்லூரி பேராசிரியர் - முனைவர் இரா.செங்கொடி , சர் தியாகராயா கலைக்கல்லூரி, சென்னை

 

2022 ஆம் ஆண்டுக்கு 

பள்ளி ஆசிரியர் - திருமதி கே.வி.ஜெயஸ்ரீ , அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோயிலூர்

கல்லூரி பேராசிரியர் - திரு த. ரமேஷ் , அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்

 

 

நிகரி சமத்துவ ஆசிரியர் விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

 

2019 ஆம் ஆண்டுக்கான விருது தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு அ.அன்சார் அலி அவர்களுக்கும்; தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, முதல்வர் முனைவர் வெ.செந்தமிழ்ச் செல்வி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

 

2018 ஆம் ஆண்டு விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இரா.மோகனசுந்தரம்; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் வரலாறு மற்றும்கடல்சார்தொல்லியல் துறையின் பேராசிரியர் சு.இராசவேலு ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2017 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் திரு அறவேந்தன், நெல்லை மாவட்டம் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய  பள்ளி ஆசிரியர் இளங்கோ கண்ணன் ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2016 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி ந.சாந்தி ; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு சா.உதயசூரியன் ஆகியோர் விருதுபெற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை இராமச்சந்திரன் அவர்கள் விருதுகளை வழங்கினார். 

 

2015 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை க.பாஸ்கரன் விருதுகளை வழங்கினார். 

 

2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும்; கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப் பள்ளியின் முதல்வர்  'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். கல்வி உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணி விருதுகளை வழங்கினார். 

 

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் ,  கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். கல்வியாளரும் ,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கினார்.

 


முனைவர் து.ரவிக்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர்

ஆசிரியர், மணற்கேணி ஆய்விதழ்

No comments:

Post a Comment