Wednesday, April 2, 2014

திருவள்ளூரில் தலித் மக்களின் கல்வி பின்னடைவுக்குக் காரணம் என்ன?



திருவள்ளூர் மாவட்டம் தொழில் வளர்ச்சி நிறைந்ததாக இருந்தாலும் கல்வியில் பின்னடைவாகவே இருந்துவந்துள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்தான் அது மேம்பட்டிருக்கிறது. 1991 இல் 66.22% ஆக இருந்த கல்விகற்றோர் எண்ணிக்கை 2001 இல் 76.54% ஆகவும் 2011 இல் 86.73 % ஆகவும் உயர்ந்திருக்கிறது. கல்வி நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் 10% வித்தியாசம் இருக்கிறது. அதைவிடவும் அதிர்ச்சி தரும் செய்தி இந்த மாவட்டத்தில் 

இருக்கும் SC/ST மக்களில் கல்வியறிவு பெற்றோர் 52.7% மட்டுமே என திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறையின் இணையதளம் சொல்கிறது. இந்த அளவு இடைவெளி வேறு எந்த மாவட்டத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. 


இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 37 லட்சம் என்பதைக் கவனத்தில் கொண்டால் இந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள் போதாது. துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் (1397 ) உயர்நிலை/ மேனிலைப்பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் (148 + 454) இடையில் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது இங்கே இடைநிறுத்தம் ( drop out ) அதிகமாக இருக்குமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது. 


திருவள்ளூரில் நான் வெற்றி பெற்றால் எனது முன்னுரிமை இந்த மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்துவதுதான். அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கும் தலித் மக்களின் கல்விக்கும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏழை எளிய மக்கள் தரமான கல்விபெறுவதை உறுதிசெய்யவேண்டும். 


No comments:

Post a Comment