Thursday, May 14, 2015

மனிதனுக்கு முன்னால்


 - கே.சச்சிதானந்தன்
தமிழில்: ரவிக்குமார்
=======
மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் 
மிருகங்கள் பேசின
மிருகங்களுக்கு முன்னால் மரங்கள் பேசின, மரங்களுக்கு முன்னால் மலைகள் பேசின, மலைகளுக்கு முன்னால் சமுத்திரங்கள் பேசின, சமுத்திரங்களுக்கு முன்னால் ஆகாயம் பேசியது

பிறகு, பேசத் தொடங்கினான் மனிதன், 
அந்த கணத்தில் அற்றுப்போனது அனைத்தின் பேச்சுகளும் 
அவற்றின் மௌனத்தின் மீது உருண்டது மனிதனின் எஃகு போன்ற குரல்

விடியலின்போது நீங்கள் பார்ப்பதில்லையா எல்லாவற்றின்மீதும் படிந்திருக்கும் ரத்தத்தை?

No comments:

Post a Comment