Wednesday, May 13, 2015

லோட்டஸ் கட்சியும் லோட்டஸ் டவரும் - ரவிக்குமார்



பிரதமர் மோடியின் சீனப் பயணம் குறித்து பல்வேறு 'ப்ரமோஷனல்' கட்டுரைகள் இந்திய ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. ஆனால் கொழும்பில் சீன நிறுவனங்களால் கட்டப்படும் 'லோட்டஸ் டவர்' குறித்து தற்போது சீனப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் சீன அதிபரிடம் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பாரா? என்ற கேள்வியை ஏனோ நமது ஊடகங்கள் சரியாக எழுப்பவில்லை. 

ஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள ஈஃபில் டவரைவிட உயரமாகக் ( 350 மீட்டர் )கட்டப்படும் லோட்டஸ் டவர் தென் ஆசியக் கடல் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் ராணுவ நோக்கம் கொண்டது எனவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது எனவும் பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ( http://www.southasiaanalysis.org/node/1753) அதை இந்தியப் பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை. 

இந்திய சமூகத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் பிரிட்டிஷார் காரணம், இந்திய அரசியலில் காணப்படும் குறைகளுக்கு காங்கிரஸ் காரணம் எனப் பழிசுமத்தும் அரசியலில் பதுங்கிக்கொண்டிருக்கும் பாஜக உண்மையிலேயே இந்திய நாட்டின் இறையாண்மைமீது அக்கறைகொண்டிருந்தால் கொழும்பு நகரில் கட்டப்படும் லோட்டஸ் டவரைத் தடுத்து நிறுத்தவேண்டும். 

இலங்கையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி அமைப்பதையே தடுத்து நிறுத்திய பிரதமர் ஒருவர் இருந்தார், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்! 

No comments:

Post a Comment