Showing posts with label war crimes. Show all posts
Showing posts with label war crimes. Show all posts

Sunday, March 10, 2013

இலங்கை ஈராக்கும் அல்ல, ராஜபக்சே சதாமும் அல்ல.



தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக சுயேச்சையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தித் தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும், தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மிகவும் பொறுப்போடும் ஆதாரபூர்வமாகவும் இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசியதைக் கேட்டபோது நமக்கும் கூட நம்பிக்கையின் ஒளிக்கீற்று கண்ணில் தெரிந்தது. இன்றுவரை அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதுபற்றி இந்திய அரசு வாய்திறக்கவில்லை என்றபோதிலும் அது தனது நிலையை ஓரிரு நாட்களில் தெளிவுபடுத்திவிடும். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்ப்படும்போது இந்தியாவின் மௌனம் கலைந்துதான் ஆகவேண்டும் .

தமிழ்நாட்டிலும் உலகநாடுகளிலும் இருக்கிற தமிழர்கள் இந்தப் பிரச்சனைகுறித்து ஒன்றுபட்டுக் குரல் எழுப்பவில்லை என்ற போதிலும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றனர் எனக் கூறலாம். அவர்கள் முனவைக்கும் கோரிக்கைகளை இரண்டு தலைப்புகளில் அடக்கலாம்:

1. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.
2.ஈழத் தமிழர்களின் ரசியல் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி உலகமெங்கும் பரவி வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை உள்ளடக்கி ஈழத்தில் இருக்கும் தமிழ்மக்களிடமும் ஐ.நா.மேற்பார்வையில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு இவற்றைச் செய்வதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பது முதல் கேள்வி. ஒரு நாட்டின்மீது போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலுக்குத்தான் இருக்கிறது.யூகோஸ்லேவியா, ருவாண்டா ஆகிய நாடுகளின்மீது அத்தகைய விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்  இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா அப்படியொரு விசாரணைக்கு உத்தரவிடும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரலாம். அப்படி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும் சீனாவும் தோற்கடித்துவிடும்.எனவே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் வழியாக இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இல்லை.

போர்க்குற்ற விசாரணையை நடத்தும் அதிகாரம் கொண்ட இன்னொரு அமைப்பு இருக்கிறது. அதுதான் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் . அந்த நீதிமன்றத்தில் ஒரு நாட்டின்மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமெனில் குற்றம் சாட்டப்படும் நாடு அந்த சர்வதேச கிரிமினல் கோர்ட்டை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டும். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாட்டையும்கூட அந்த கோர்ட் விசாரிக்க முடியும். ஆனால், அதற்கு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அந்த நாட்டின்மீது புகார் அளித்திருக்கவேண்டும். அந்த நீதிமன்றமேகூட தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிடலாம். ஆனால் அதற்கு அந்த நாடு ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவேண்டியது அவசியம். இலங்கை ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் புகார் அளித்தால் மட்டுமே இலங்கைமீது போர்க்குற்ற  விசாரணை  நடத்த முடியும்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு வேறு என்ன அதிகாரம்தான் இருக்கிறது ? என்ற கேள்வி நமக்கு எழலாம். அது ஒரு விசாரணைக் குழுவை அமைக்கலாம். அந்தக் குழு போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து அறிக்கை அளிக்கும். அதன்பின்னர் மீண்டும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலுக்குத்தான் செல்லவேண்டும். இப்போது சிரியா விவகாரத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு அங்கு எழுந்த வெகுசனக் கிளர்ச்சியின்போது சுமார் எழுபதாயிரம்பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் விசாரணைக் குழு கண்டறிந்திருக்கிறது. போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை  அக்குழு கண்டறிந்திருக்கிறது என்றாலும் அக்குற்றத்தைச் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. எனவே அந்த வழக்கை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட்டுக்கு அனுப்ப ஆவன செய்யவேண்டும் என்று இப்போது அந்த விசாரணைக்குழு கோரிக்கைவிடுத்துக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது இலங்கையின் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை தண்டிப்பதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்ற செய்திதான் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்கா நினைத்தால் அவர்களை வெகு விரைவாகத் தண்டிக்கலாம். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலுக்கு செல்லவேண்டிய தேவையே இல்லை. சதாமைத் தண்டித்த அதே வழியில் ராஜபக்சேவைத் தண்டிக்கலாம். முதலில் ஆட்சி மாற்றம், அதன்பிறகு அந்த நாட்டு நீதிமன்றத்தை வைத்தே விசாரித்து தீர்ப்பு வழங்குவது. அமெரிக்கா அந்த வழிதான் என முடிவுசெய்துவிட்டால் அதன் திட்டத்துக்கு உதவ ரணிலும், சரத் பொன்சேகாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க அந்த நிலையை எடுக்க இலங்கை எண்ணை  வளம் கொண்ட ஈராக்கும் அல்ல, ராஜபக்சே அமெரிக்க டாலர் மதிப்பைக் குறைப்பதற்கு முயற்சித்த சதாமும் அல்ல.

பாதிக்கப்பட்ட தரப்பு தனக்கான நீதியை வழங்குங்கள் என்று கையேந்திக்கொண்டிருந்தால் அதற்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது. "குற்றம் செய்தவரூக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் மூன்றாவது தரப்பாக ஏன் நீதிமன்றத்தை நாம் அனுமதிக்க வேண்டும் ? பாதிக்கப்பட்டவருக்குத்தான் நீதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, அதுதான் வெகுஜன நீதி. அது காலதாமதம் அற்றது" என்றார் மிஷெல் ஃ பூக்கோ . ஈழத்தமிழர் பிரச்சனையில் வெகுஜன நீதி குறித்து ஃ பூக்கோ சொன்னதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தெரிகிறது.

Saturday, February 23, 2013

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்யப்போவது என்ன ?





ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாக  அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வாக்களிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அந்தப் பிரச்சனையும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதி அளித்திருப்பதாகச்  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் இந்தியா செய்யாது . அதற்கு மாறாக இலங்கையை இயன்றவரைக் காப்பாற்றவே அது முயற்சிக்கும். இந்தியாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்று சிந்திக்கும்போது பினவரும் சாத்தியங்கள் நமக்குத் தென்படுகின்றன: 

1. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் அந்தத் தீர்மானம் எப்படியிருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றக்கூடும் . கடந்த முறை, தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததைப்போல இம்முறையும் இந்தியா  மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படலாம்.அதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. புலிகளால் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு இந்தியத் தூதர் அசோக் கே. காந்தாவும்  இலங்கை ராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கேவும்  கூட்டாக அஞ்சலி செலுத்தியிருக்கும் நிகழ்வு அதற்கொரு சான்று. 

கடந்தமுறை செய்ததுபோல அமெரிக்க தீர்மானம் வெளியானபிறகு அதில் மாற்றம் செய்ய முற்படாமல் தீர்மானம் வெளிவருவதற்கு முன்பே அதில் இந்தியா தலையீடு செய்யலாம். அதற்கான வேலைகள் இப்போதே நடந்துகொண்டிருக்கலாம். 

2. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் அளித்திருக்கும் 18 பக்க அறிக்கையின் இறுதியில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க 'சுயேச்சையான சர்வதேச விசாரணை ' வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இப்போது நம் எதிரில் இருக்கும் கேள்வி : சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? அல்லது மேலும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா ? என்பதுதான். இந்தியாவின் யுக்தி இலங்கைக்குக் கால அவகாசம் பெற்றுத் தரும் வகையிலேயே இருக்கக்கூடும் . 

3. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் சிலவற்றை இந்தியா தனது ராஜீய உறவுகளின் மூலமாக நிர்ப்பந்திக்க முடியும். எனவே அவற்றைத் தனது நிலைக்கு ஆதரவாக செயல்படவைத்து அமெரிக்காவின்மீதும், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின்மீதும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மறைமுகமாகத் திணிக்கமுடியும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கியூபாவை அப்படித்தான் இந்தியா பயன்படுத்தியது. 

4. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் ஜப்பான்,நைஜீரியா, ரொமேனியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களிடம் சில நாட்களின் முன் கையளிக்கப்பட்டிருக்கும் 'ரகசிய அறிக்கை' தற்போது  பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. இப்படியொரு சந்திப்புக்கு பான்  கி மூன் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க,அக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிக்கை செய்தி இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த 'ரகசிய அறிக்கையின்' பின்னணியில் இந்தியா இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரியதாகும். 

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இந்தியாவின் அணுகுமுறை   எப்படியிருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை நீர்த்துப்போகவைத்து இலங்கைக்கு மேலும் கால அவகாசம் பெற்றுத் தருவது என்பதாகவே அது அமையும். இதைச் செய்வதற்காக இந்தியா சில பொருளாதார பலன்களை இலங்கையிடம் கேட்டுப் பெறக்கூடும். 13 ஆவது சட்டத் திருத்தம் குறித்தும் , வடக்கு  கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது குறித்தும் இந்தியா இப்போது பேசுவது,  இலங்கையோடு மறைமுகமாக நடைபெற்றுவரும் பேரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத்தானே தவிர இந்தியாவுக்கு அதில் உண்மையான அக்கறை எதுவும் இல்லை என்பதை கடந்தகால நிகழ்வுகள் காட்டியுள்ளன. 

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டியது அவசியம். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல் இந்தியா மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கைகளை அடையாளம் காணவேண்டும். 

"இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தமது ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.ஆனால்,  ஊடகக் கவனத்தைக் கவர்வதற்காக சிறு குழுக்கள் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது இத்தகைய கருத்தொற்றுமையை  உடைப்பதாக இருக்கிறது. இப்படியான சிறு குழுக்கள் ஈழத் தமிழ் அமைப்புகளின் மறைமுக ஆதரவோடு செயல்படுகின்றன என்பதை அறியும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது: தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலை சிதைத்து இலங்கை அரசைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை ஈழத் தமிழ் அமைப்புகள் சில ஏன்  ஊக்குவிக்கின்றன ?  என்பதே அந்த கேள்வி. இதற்கு அந்த அமைப்புகள்தான் பதில்சொல்லவேண்டும்.

Friday, July 29, 2011

ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என ஐ.நா அவையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் கோரிக்கையை ஏற்று பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரித்துத் தருவதென விடுதலைச் சிறுத்தைகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாகக் கடந்த 26.07.2011 அன்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. காமராசர் சிலை அருகில் பிலால் உணவகம் எதிரில் நடைபெற்ற அந்த இயக்கத்தில் நானும் தலைவரோடு கலந்துகொண்டேன். இரண்டுமணி நேரத்தில் சுமார் ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து கையொப்பமிட்டனர். பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.



Tuesday, April 26, 2011

எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது" : முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளி


[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 09:39 GMT ] [ தி.வண்ணமதி ]
விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அனைத்துலக சஞ்சிகையான Time [Sunday, Apr. 24, 2011] வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

நன்றி : http://www.puthinappalakai.com/view.php?20110426103702




ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது அவள் பதற்றத்துடன் தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள்.

இந்த முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளியுடன் நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது அவளது கைகளில் இருந்த அழகாக மடிக்கப்பட்ட லேஞ்சி எங்களது உரையாடல் முடிவுக்கு வந்த வேளையில் ஏதோ துணிக்கத்தையினைப் போல் கசங்கியிருந்தது.

நான் அவளது உண்மைப் பெயரைப் பயன்படுத்துவதை அவள் விரும்பவில்லை. பதிலாக தன்னைச் செல்வி என அழைக்குமாறு அவள் கூறினாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல பெண் போராளிகளைப் போலவே இவளும் தானாக அமைப்புடன் இணையவுமில்லை, கட்டாயத்தின் பெயரில் இணைக்கப்படவுமில்லை. தற்போது புலிகளின் கிளர்ச்சி என்பது இல்லையென்றாகிவிட்டது. இவர்களது இராணுவ பலம் மே 2009ன் பின்னால் சிறிலங்கா அரச படையினரால் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

1998ம் ஆண்டு செல்வி 18 வயதினை அடைந்திருந்த வேளையில் இவளது சகோதரனைத் தேடி கிழக்கே மட்டக்களப்பிலுள்ள இவளது வீட்டுக்குப் புலிகள் வந்திருந்தார்கள். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும் என்ற கொள்கையினைப் புலிகள் கொண்டிருந்தார்கள். புலிகளின் இந்த விதி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்திலும் கடுமையுடன் அமுல்படுத்தப்பட்டது எனலாம்.

இவளது குடும்பத்தினைப் பொறுத்தவரையில் வயதில் குறைந்த சகோதரன் அமைப்பில் இணையவேண்டும் அல்லது இரண்டு மூத்த பெண் பிள்ளைகளில் ஒருவர் இணையவேண்டும்.

வயதில் மூத்தவளாக இருந்த செல்வி புலிகளமைப்புடன் இணைந்துகொள்வதற்குத் துணிந்தாள். அன்று முதல் எட்டு ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றினாள். புலிகளமைப்பு சிறிலங்கா அரச படையினரின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த வேளையில் அவள் அமைப்பினை விட்டு வெளியேறினாள்.

இன்று விடுதலைப் புலிகள் என்றொரு அலகுமில்லை, போருமில்லை என்றாகிவிட்டது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் கையில் ஆயுதம் என்பவற்றுடன் தனது இளமைக்காலத்தினைத் தொலைத்துவிட்ட செல்விக்கு தற்போது ஒரு சில தேர்வுகளே உள்ளன.

"நான் எதனைச் செய்யமுடியும். நான் போதிய கல்வியறிவினைப் பெற்றிருக்கவில்லை, பணமும் இல்லை பணியும் இல்லை" எனத் தளதளத்த குரலில் இவள் கூறுகிறாள். "எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது"

இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த போருக்குப் பலிக்கடா ஆகிப்போன இதுபோன்ற பெண்களின் கதைகள் இதேபோன்றவைதான்.

சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்குவந்துவிட்ட போதிலும் இரண்டு தரப்பிலுமுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னமும் அமைதியின் சிறுதுளிப் பலாபலனைக் கூடப் பெறவில்லை.

"போரின் விளைவாக வெளியே தெரியாமல் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக தனித்துநின்றோ அன்றி கூட்டாகவும் குரல் எழுப்புவது கடினமென இவர்கள் உணர்கிறார்கள்" என பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பினது அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பாளர் அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நாடுதழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்த அமைப்பு அண்மையில் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வியைப் போல சந்தர்ப்ப சூழமைவாலோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ புலிகளமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஏராளம் பெண்கள் இங்குள்ளனர்.

சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் 11,000 உறுப்பினர்களில் 3,000 பேர் பெண்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்களில் அரைப் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதவிர போரின் இறுதிநாட்களில் இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல்களின் நடுவே சிக்கி பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட கணவனை இழந்தோராக்கப்பட்ட பிறிதொரு தொகுதியினர் உள்ளனர். அத்துடன் கொல்லப்பட்ட, மாற்று வலுவுடையோர் ஆக்கப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினரின் மனைவிமார் குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"சமூகத்தின் மத்தியில் தனித்து விடப்பட்டிருக்கும் இந்த வகையினரில் அதிகமானோர் தங்களது இருபதுகளில் இருக்கும் அதேநேரம் பொருத்தமான தொழில்வாய்ப்பினையோ அல்லது தொழில்வாய்ப்பினைப் பெறக்கூடிய கல்வியறிவு மற்றும் தொழில்சார் பயிற்சிகளையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை" என அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார்.

போர் இடம்பெற்ற முன்னாள் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் வன்னிப் பிராந்தியத்திலுள்ள 110,000 குடும்பங்களில் 30 சதவீதமானவை பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகும்.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் கனகநேசன் சிவகௌரியின் குடும்பமும் ஒன்று.

2009ம் ஆண்டு ஏப்பிரலில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டு இவளது கணவன் உயிர் நீத்தான். இதன் பின்னர் போதிய கல்வி அறிவினைப் பெறாத 33 வயதுடைய சிவகௌரி தனது வயது முதிர்ந்த பெற்றோரையும் ஐந்து பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப்பதற்கு தையல் தொழில்செய்து வருகிறாள்.

கண்பாற்வையற்ற தாய், முழங்கால் பாதிக்கக்பட்ட்ட தந்தையுடன் அதிக சிரமப்படுகிறாள் இவள். அதிகளவு வேலை வரும் நாளில் வெறும் இரண்டு டொலர்களையே (200 ரூபாய்) இவளால் சம்பாதிக்க முடிகிறது. "எனது வாழ்வில் தினமும் போராட்டம்தான். வேலை எதுவுமற்ற நாளில் குடும்பம் அதிகம் அல்லலுறும்" எனத் துயரத்துடன் கூறுகிறாள்.

சிறிலங்காவினது கிழக்குப் பிராந்தியத்தில் போர் 2007ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49,000 கணவனை இழந்தோர் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. அதுவும் இவர்களில் பலர் தங்களது இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கிறார்கள். குடும்பத்தலைவன் மடிந்துவிட்ட நிலையில் புதிய சுமைகளையும் பொறுப்புக்களையும் சுமக்கும் இந்த துணையிழந்த பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டும் என இன்னமும் சமூகம் கட்டளையிடுகிறது.

"இங்குள்ள சமூகக் கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருக்கிறது" என்கிறார் அருந்ததி சந்திரதிலகே.

பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பானது இதுபோன்ற குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதோடு சுயதொழில் திட்டங்களையும் முன்னெடுக்கிறது. தவிர, பெண்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கான உதவிகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

"நாடு பூராகவும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் தேவை என்பதை நாங்கள் மெதுவாக உணர்கிறோம்" என்கிறார் அருந்ததி. இந்தப் பெண்கள் தமக்கான தொழில்வாய்ப்பினைப் பெறுகின்றபோதும் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர்கள் வேறுபட்ட கோணத்திலேயே இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். "இங்கு ஏராளம் பிரச்சினைகள் உள்ளன" என அருந்ததி கூறுகிறார்.

தான் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி செல்வியும் நன்கறிவாள். "என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள்?" என்ற கேள்வியினைத் தொடுக்கிறாள் செல்வி. "எனது கிராமத்தவர்கள்கூட என்னிலிருந்து சற்று எட்ட விலகியிருக்கவே விரும்புகிறார்கள். தீண்டத்தகாத ஒருத்தியா, வேண்டப்படாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவளாகவே என்னை அனைவரும் பார்க்கிறார்கள்" என்கிறாள் செல்வி.

Sunday, April 17, 2011

ோர்க்குற்ற அறிக்கையை வெளியிடக்கோரி பான் கீ மூனுக்கு கடிதம் அனுப்புங்கள்: ஆம்னஸ்டி இண்டர்ேஷனல்



இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரின் போது  மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இப்ோது முனைப்பு காட்டி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற ோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்த ஐ.நா மன்றம் அதுகுறித்த அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. நிபுணர் குழு ஒன்றால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை இப்ோது ஐ.நா செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  அந்த அறிக்கை எதிர்வரும் 18 ஆம் ேதி பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு உடனடியாக வெளியிடுமாறு  கோரி ஐ.நா செயலாளர் அவர்களுக்கு மனுக்களை அனுப்பும்படி ஆம்னஸ்டி இண்டர்ேஷனல் அமைப்பு   வேண்டுோள் விடுத்துள்ளது.

ஐ.நாவுக்கு ேண்டுோள் அனுப்ப விரும்புோர் ீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்:


http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka