Saturday, January 11, 2014

UNHRC கூட்டமும் இந்திய பொதுத் தேர்தலும்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 25ஆவது கூட்டம் மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 28 வரை நடக்கவிருக்கிறது. விவாதத்துக்கென நிரல் படுத்தப்பட்டிருக்கும்  74 பொருள்களில் 23 ஆவதாக இலங்கைப் பிரச்சனை இடம்பெற்றிருக்கிறது. அதைவைத்துப் பார்த்தால் 14 ஆம் தேதிக்குமேல் அது விவாதத்துக்கு வரலாம். இந்தக் கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான தயாரிப்பில் இருக்கிறது. 


திருமதி நவநீதம்பிள்ளை குறிப்பிட்ட காலக் கெடு முடியப்போகிறது. அதையேதான் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனும் காமன்வெல்த் மாநாட்டின்போது சொல்லிவிட்டு வந்தார். 

ஆனால் இலங்கை அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே இம்முறை சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை நோக்கியே அமெரிக்கத் தீர்மானம் இருக்கும் எனத் தெரிகிறது. 


ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும் நேரத்தில் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும். தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


அமெரிக்காவை முந்திக்கொண்டு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவே சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்க முடியும். இல்லாவிட்டால் அது தமிழ்நாட்டில் தனது கோஷ்டிகளுக்குள்ளாகவே கூட்டணி அமைத்து திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

No comments:

Post a Comment