Wednesday, March 2, 2016

பண்டங்களா தலைவர்கள்? நூகர்வோரா வாக்காளர்கள்?



( 27.02.2016 இரவு சன் டிவி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் முன்வைத்த கருத்துகளின் சாரம் ) 

தலைவர்கள் பண்டங்களா? வாக்காளர்கள் நுகர்வோர்களா? இப்போது வெளியிடப்படும் விளம்பரங்கள் தனி மனிதர்களை அரசாங்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்தும் தலைவர்களாக அல்லாமல் brand களாக வர்த்தகப் பெயர்களாக மாற்றுகின்றன. இதனால் அரசியல் களம் வணிகப் போட்டிக்கான இடமாக ஆக்கப்படுகிறது. 

அன்புமணியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தில் பாமக என்ற பெயரே இல்லை. ஓரமாக சின்னம் மட்டும் உள்ளது. அவரது கடந்த காலமும் கட்சி சார்பும் துடைக்கப்பட்டு புத்தம் புது product ஆக அவரை முன்வைக்கிறார்கள். இது வாக்காளர்களை விழிப்புணர்வுபெற வைப்பதா? ஏமாற்றுவதா? என்பதை மக்கள்தான் முடிவுசெய்யவேண்டும். 

வாக்காளர்களை விழிப்புணர்வுகொண்ட குடிமக்களாக உணரச்செய்வதுதான் இன்றைய தேவை, ஆனால் இந்த விளம்பரங்கள் அவர்களை செயலூக்கமற்ற நுகர்வோர்களாக ( passive consumers ) மாற்ற முயற்சிக்கின்றன. 

இந்த விளம்பரங்களுக்கு சமூக வலைத்தளங்களில் எப்படியான எதிர்வினைகள் வருகின்றன என்பதைப் பாருங்கள். ஒவ்வொரு இளைஞரையும் இந்த விளம்பரங்கள் டிஸைனராக மாற்றிவிட்டன. அவர்கள் இவற்றைக் கேலிசெய்வதன்மூலம் தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

virtual reality க்கு மாற்று இன்னொரு virtual reality ஐ உருவாக்குவதல்ல, நாமும் மெய்நிகர் யதார்த்தத்தில் சஞ்சாரம் செய்வதல்ல இதற்கு மாற்று. வேர்க்கால்மட்ட அரசியல் செயல்பாடுதான் இதற்கான தீர்வு. அதைத்தான் மக்கள் நலக் கூட்டணி மூலமாக முன்னெடுத்துள்ளோம்.

No comments:

Post a Comment