Sunday, February 23, 2014

எழுத்தாளர்களின் தேர்தல் அறிக்கை 2014 (வரைவு)



1. எந்தவொரு நூலும் தடை செய்யப்படக்கூடாது.


2. எழுத்தாளர்கள் எவரும் அவர்களின் எழுத்தைக் காரணம்காட்டிக் கைதுசெய்யப்படக்கூடாது.


3. கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153 A மற்றும் 295 A ஆகியவைத் திருத்தப்படவேண்டும்.


4.மத்திய/ மாநில அரசின் விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் ஊதியம் / ஓய்வூதியம் பெறுபவர்களாக இல்லாவிட்டால் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படவேண்டும். அவர்களது ஆக்கங்களை வெளியிட அரசு நல்கை வழங்கவேண்டும். 


4. சாகித்ய அகாடமி உள்ளிட்ட தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படை தன்மையோடும் ஜனநாயகத்தன்மையோடும் திருத்தியமைக்கப்படவேண்டும். 


5. பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களை இறுதிசெய்யும் குழுக்களில் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும். 


6. வட்ட/ மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு பொதுநூலகங்களில் நூல்கள் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும்.


7. அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படவேண்டும். 


( இந்த அறிக்கை மீதான கருத்துகளையும் மேலும் சேர்க்கப்படவேண்டிய ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.)

No comments:

Post a Comment