Monday, February 10, 2014

ரவிக்குமார் கவிதை

நமக்குத் தெரியும்
பிரபஞ்சத்தின் எல்லையைத்தாண்டி நீளும்
இப்பாதை எங்கும் முடியாதென்பது

நமக்குத்தெரியும்
இந்த தேவாலயத்தில் சாத்தான்களும் இல்லையென்பது

நமக்குத் தெரியும் 
இந்தக் கருந்துளைக்குள் வீழ்ந்தவர்களின் பெயர்கள்கூட கிடைக்காதென்பது

நமக்குத் தெரியும்....

எனினும் 
மீண்டும் மீண்டும் 
நாம் நடக்கிறோம்
ஒருவர் கையில் இன்னொருவர்
இதயத்தை ஒப்படைத்து

மீண்டும் மீண்டும்  
நாம் கிடக்கிறோம்
புன்னகை மொய்க்க 
பூக்கள் நெரிய
வானத்தைப் பார்த்தபடி

No comments:

Post a Comment