Sunday, November 2, 2014

ரவிக்குமார் கவிதை


வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
சிலநேரம்
இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும் 
எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
சிலநேரம்
மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது


வானை நோக்கி விட்டெறியும் கனவு
நட்சத்திரமாக மாறுவது 
எப்போதோதான் நடக்கும்.
என்றபோதிலும் மனந்தளராதே 
உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

No comments:

Post a Comment