Sunday, November 2, 2014

முத்தம் - கே.சச்சிதானந்தன் தமிழில் :ரவிக்குமார்



நீங்கள் நம்பவில்லை
இரண்டுபேர் முத்தமிட்டுக்கொண்டால்
உலகமே மாறிவிடும்
எனக் கவி ஒருவன்  சொன்னபோது

பாருங்கள் ; ஒரு ஆண் ஒரு பெண்
அவர்கள் முத்தமிட்டுக்கொள்கிறார்கள்
ஒரு ஆண் ஒரு பெண் அல்ல
பல ஆண்கள் பல பெண்கள்

கைகோர்த்து நடந்து சென்றாலே 
சட்டத்தின்,  ஒழுக்கத்தின் காவலர்கள்
எங்கு புருவங்களை நெரித்தார்களோ
அதே சதுக்கத்தில்

ஒரு ஆண்  ஒரு பெண்
பல ஆண்கள் பல பெண்கள்

முன்பு முத்தங்களின்
சிறைச்சாலையாக இருந்த
சதுக்கத்தில்

அவர்கள் உடைக்கிறார்கள் :
இப்போதிருக்கும் சாவின் சட்டத்தை
அவர்கள் படைக்கிறார்கள்
வாழ்வுக்கான எதிர்கால சட்டத்தை  

ஆத்திரமூட்டும் விதத்தில்
பொது இடத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தம்தான் கவிதை

( 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரபு வசந்தம் என அழைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான போராட்டத்தின்போது துருக்கியில் இருக்கும் தக்ஸின் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் முத்தமிட்டு அடக்குமுறைக்கான தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதேபோன்று இன்று கேரளாவில் நூற்றுக் கணக்கானோர் முத்தமிட்டு மத அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தக் கவிதை துருக்கிப் போராட்டம் குறித்து 2013 இல் எழுதப்பட்டது. மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் :கே .சச்சிதானந்தன் . மணற்கேணி இதழுக்கென அவரால் அனுப்பப்பட்டது. )

No comments:

Post a Comment