Monday, July 27, 2015

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் ! தமிழ் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கூட்டறிக்கை

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் !

தமிழ் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கூட்டறிக்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தடா  நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாக்கூப் மேமோனின் கருணை மனுவை ஏற்று பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அவருக்குத் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டுமென மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்துகிறோம். 

1. யாக்கூப் மேமோனின் தண்டனை தற்போது காலாவதியாகிப்போன தடா சட்டத்தின்கீழ் போலீஸாரால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்க வழிசெய்வது நீதிக்குப் புறம்பானது என்பதால்தான் தடா சட்டமே ரத்து செய்யப்பட்டது. 

2 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட தாவூத் இப்ராஹிமையோ டைகர் மேமோனையோ இந்திய அரசு இதுவரைக் கைதுசெய்யவில்லை. 

3. யாக்கூப் மேமோன் மனநிலைப் பிறழ்வு ( ஷிநீலீவீக்ஷ்ஷீஜீலீக்ஷீமீஸீவீணீ ) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். அத்தகைய நோயாளிகளை தூக்கிலிடக்கூடாது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. 

4. . யாக்கூப் மேமோன் சரணடைவதற்கு ஏற்பாடுசெய்த ஸிகிகீ உளவுப்பிரிவின் அதிகாரி காலஞ்சென்ற பி.ராமன் யாக்கூப் மேமோனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என எழுதியுள்ளார். 

5. இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுபவர்களில் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

6. அண்மையில் இந்தியாவின் சட்ட ஆணையத்தின் உதவியோடு டெல்லி சட்டப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தூக்கு தண்டனைக் கைதிகளில் நான்கில் மூன்று பங்கினர் ஏழைகள் என்பது தெரியவந்துள்ளது. 

7. உலகம் முழுவதும் 140 நாடுகள் மரணதண்டனையை முற்றாகக் கைவிட்டுள்ளன. 

8. உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையைக் கைவிடவேண்டும் என 
ஐ. நா சபை வலியுறுத்திவருகிறது. 

9. சுமார் இருபது ஆண்டுகளாக சிறையிலிருக்கும் யாக்கூப் மேமோனைத் தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு முரணானதாகும். 

10. இந்த மரண தண்டனையைக் கைவிடவேண்டுமென ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும்; மார்க்கண்டேய கட்ஜு, எச்.சுரேஷ்,கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளும்; பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே தங்களிடம் முறையீடு செய்துள்ளனர். 

தேசத்தின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் யாக்கூப் மேமோனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கவேண்டும் என வேண்டுகிறோம். 

இவண்

இந்திரா பார்த்தசாரதி - எழுத்தாளர்
ஞாநி- மூத்த பத்திரிகையாளர்
பேராசிரியர்  சுபவீ
பாலபாரதி- எழுத்தாளர், ச.ம.உ
ப்ரசன்னா ராமசாமி - நாடக இயக்குனர்
வெ.ஶ்ரீராம்- மொழிபெயர்ப்பாளர்
ரவிக்குமார்- எழுத்தாளர்
இளங்கோவன் - மூத்த பத்திரிகையாளர் 
இரா. நடராசன் - எழுத்தாளர்
ஜெயரஞ்சன் - பொருளாதார நிபுணர்
கவிதா முரளிதரன் - ஊடகவியலாளர் 
குமரேசன் - மூத்த பத்திரிகையாளர்
லக்ஷ்மி சரவணகுமார் - எழுத்தாளர் 
பனுவல் அமுதரசன் - இலக்கிய ஆர்வலர்
தமயந்தி - எழுத்தாளர் 
தளவாய் சுந்தரம் - எழுத்தாளர் 
இரா. முருகன் - எழுத்தாளர்
பெருந்தேவி- எழுத்தாளர்
மருதன்- எழுத்தாளர்
யுவன் சந்திரசேகர் - எழுத்தாளர் 
தியாகச் செம்மல் - ஊடகவியலாளர்
பேராசிரியர் டாக்டர் விஜய பாஸ்கர்
குமரன் வளவன் - நாடகக் கலைஞர் 
முரளி சண்முகவேலன்- ஆராய்ச்சி மாணவர்
கிராமியன் - எழுத்தாளர்
மனோன்மணி - எழுத்தாளர்
மணி மணிவண்ணன் - எழுத்தாளர் 
நெல்சன் சேவியர் - ஊடகவியலாளர் 
அ.ராமசாமி- பேராசிரியர் 
முனைவர் ம. இராசேந்திரன் - முன்னாள் துணைவேந்தர் 
கவின்மலர் - ஊடகவியலாளர்
ரவிகார்த்திகேயன்- எழுத்தாளர் 
பா. செயப்பிரகாசம்- எழுத்தாளர்
அய்யநாதன்- ஊடகவியலாளர் 
அபிமானி- எழுத்தாளர்
உ. நிர்மலாராணி - வழக்கறிஞர், எழுத்தாளர்

( கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு : ரவிக்குமார். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம்o தொலைபேசி மூலம் ஒப்புதல் பெறப்பட்டது)

No comments:

Post a Comment