Friday, November 27, 2015

அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டமும்:



தந்தி டிவியின் 'ஆயுத எழுத்து' விவாதத்தில் பங்கேற்றேன்
~~~~~~~~~~~~~~~~~~
அரசியலமைப்புச் சட்டம் குறித்த தந்தி டிவியின் ஆயுத எழுத்து விவாதத்தில் இன்று பங்கேற்றேன். அதில் நான் தெரிவித்த சில கருத்துகள்: 

Riddles of Rama and Krishna என்ற அம்பேத்கரின் நூலைத் தடைசெய்யவேண்டுமென்று போராடியவர்கள், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர்கள், 2000 ஆவது ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி எழுதுவதற்காகப் பாராளுமன்றத்தில்கூட தீர்மானம் நிறைவேற்றாமல் நிர்வாக ஆணையின் மூலம் வெங்கடாசலையா கமிஷனை அமைத்தவர்கள், இந்தப் பாராளுமன்ற முறையே வேண்டாம், அதிபர் ஆட்சிமுறை வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள் இன்று அரசியலமைப்புச் சட்ட தினம் கடைபிடிக்கிறார்கள். 

இன்று பிரதமர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. 

மகராஷ்டிர மாநில அரசு அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளியிட்டுவந்தது. அதை இப்போது நிறுத்திவிட்டார்கள். தற்போது பாஜக அரசுதான் அங்கு உள்ளது. உண்மையிலேயே அம்பேத்கர்மீது அக்கறை இருந்தால் அந்தத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியிட பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பது உண்மைதான் தனியார் துறைக்கும், இதுவரை இட ஒதுக்கீடு இல்லாத துறைகளுக்கும், மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளுக்கும் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தவேண்டும். அத்தகைய மாற்றம் வரவேண்டும். 

இட ஒதுக்கீட்டுக்கு காலவரம்பு விதிப்பதற்கு முன்பு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். கூட்டுகிற பெருக்குகிற வேலையைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறையாக்கப்படவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தபோது அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கும்கூடத்தான் பத்து ஆண்டு என கால நிர்ணயம் செய்தார்கள். 65 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக கல்வியறிவைக்கூட தர இயலாத அரசாங்கம் சமத்துவத்தை எப்படி வழங்கப்போகிறது? 1947 ல் நடந்ததைவிட இப்போது தலித்துகள்மீது அதிகமான தாக்குதல்கள் நடக்கின்றன. 

ஹிட்லருடன் பாஜகவுக்கு கருத்தியல்ரீதியில் நெருக்கம், காங்கிரசுக்கு நடைமுறை ரீதியான நெருக்கம். 

அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டுமுறை ஐந்தாண்டுத் திட்டங்களில் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் அதை செயல்படுத்தவில்லை. பாஜகவாவது அதைச் செய்ய முன்வரலாம்.

No comments:

Post a Comment