Monday, June 30, 2014

மணற்கேணி 23



மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும்விதமாக ஒவ்வொரு இதழிலும் ஒருவர் குறித்த சிறப்புப் பகுதியை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த இதழில் ஆ. பூவராகம் பிள்ளை குறித்த சிறப்புப் பகுதி. அதில் அவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் மற்றும் அவரைப் பற்றி அவரது மாணவர்களான இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் பதிவுகள். 

சிலப்பதிகாரம் குறித்த விவாதத்தை முன்மொழிந்து இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கும் கட்டுரை, அதுகுறித்து  வீ.எஸ்.ராஜம், நாக.இளங்கோவன், கி.நாச்சிமுத்து,க.பஞ்சாங்கம் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்

ஜார்ஜ் ஹார்ட் முதலான அயல்நாட்டுத் தமிழறிஞர்களின் முடிவுகளை மறுக்கும்விதமாக சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை குறித்த தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் ஆய்வுத் தொடரின் இறுதிப் பகுதி. 

பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் தமிழ் இலக்கணம் தொடர்பாக எழுதிவரும் தொடர்க் கட்டுரை

ஊடகத் தமிழ் குறித்த திரு. மாலன் அவர்களின் கட்டுரை

தமிழில் அதிகம் அறியப்படாத கலை வரலாறு என்னும் துறையில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் ஜான் எஃப். மோஸ்டெல்லரது ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்படும் சிரியாவைச் சேர்ந்த கவிஞர் நிஸார் கப்பானியின் ஒன்பது கவிதைகள்

இவற்றோடு நீதியரசர் கே.சந்துரு எழுதிய 'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் 'இந்து' என்.ராம், ஞாநி, தொல். திருமாவளவன் ஆகியோர் ஆற்றிய உரைகள் சந்துரு அவர்களின் ஏற்புரை

தனி இதழ்: 70/- ஆண்டு சந்தா : 420/-

கோவையில் விஜயா பதிப்பகத்திலும், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், சென்னையில் பனுவல் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளிலும் மணற்கேணி கிடைக்கும். மணற்கேணி பதிப்பக நூல்களையும் இந்தக் கடைகளில் வாங்கலாம். hillkart.com மூலமாகவும் பெறலாம்


இதழ் வேண்டுவோர் பின்வரும் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு முகவரியைத் தெரிவிக்கவும். 

Account details: 

Manarkeni publication
Syndicate Bank ,
Pondicherry Branch 
Current account number : 96013070002032
IFSC code : Synb0009601


No comments:

Post a Comment