Saturday, September 29, 2012

தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பேராசிரியர் மாதையன்


  
30 Sep 2012 05:09:11 AM IST

 
புதுச்சேரி, செப். 28: தமிழுக்கான சொற்பொருள் அகராதிகளை உருவாக்கும்போது, பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மாதையன் வலியுறுத்தினார்.
 மணற்கேணி இதழ் சார்பில் "தமிழும் சமஸ்கிருதமும்' எனும் தலைப்பில் ஆய்வரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
 தமிழில் தொல்காப்பியம் தரமான ஓர் காப்பியம். அதில் ஒரு குறைகூட காணமுடியாது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் இதுபோல் ஒரு காப்பியத்தை எழுத முடியாது.
 சங்ககால இலக்கியங்களுக்கு சொற்பொருள் அகராதிகளைத் தற்போது உருவாக்கும்போது சிலர், பொருள் பிழைகளுடன் உருவாக்குகின்றனர். தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
 இதுபோன்ற தமிழுக்கான ஆய்வரங்கங்கள் நடத்த, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.
 இது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ் ஆய்வுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதுமாகச் செலவிடப்படாதபோது, அது வடமொழி இலக்கிய ஆய்வுகளுக்கு மாற்றப்படுகிறது.
 எனவே தமிழ்மொழி ஆய்வுக்கான நிதியை முழுவதுமாகச் செலவிட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் மணவாளன்:
 சமஸ்கிருதம் ஒரு பண்பாட்டு மொழி. அது பேச்சு வழக்கில் உள்ள மொழி கிடையாது. எனவே சமஸ்கிருதத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. கி.மு.4-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் முதலியவை தோன்றின. இந்த ராமாயணம் வட இந்தியாவில் இருப்பதுபோல், தென்னிந்தியாவில் இல்லை.
 இதிலேயே சில வேறுபாடுகள் உள்ளன. ராமாயண சமஸ்கிருத நடையிலும், மகாபாரத சமஸ்கிருத நடையிலுமே வேறுபாடுகள் உள்ளன.  அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி:
 தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆராயம்போது ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர் ஆராயக் கூடாது. இரு மொழிகளையும் நன்கு தெரிந்தவர் ஆராயும் போதுதான் அப்பணி சிறப்பானதாக இருக்கும்.
 பல தமிழ் சொற்கள் சமஸ்கிருத சொற்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக நீலமாக இருக்கும் விண்(வானம்) வழிபாடுதான் விஷ்ணு வழிபாடாக மாறியதாக நான் கருதிகிறது.
  விண் என்ற சொல்லில் இருந்துதான் விஷ்ணு என்ற சொல் வந்துள்ளது. இதுதொடர்பாக, வளரும் இளம் தலைமுறையினர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 இந்த ஆய்வரங்கத்தை மணற்கேணி ஆசிரியர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  ஆய்வரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வுப் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=668706&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ்%20அகராதிகளில்%20பிழைகள்%20ஏற்படுவதைத்%20தவிர்க்க%20வேண்டும்:%20பேராசிரியர்%20மாதையன்

“Tamil contributed to Sanskrit too”


Published: September 30, 2012 00:00 IST | Updated: September 30, 2012 05:05 IST


Staff Reporter
Language talkOne of the speakers at the Tamil and Sanskrit conference here on Saturday— Photo: T. Singaravelou
Language talkOne of the speakers at the Tamil and Sanskrit conference here on Saturday— Photo: T. Singaravelou
Speaking against the popular belief that only the language Tamil borrowed usages and terms from Sanskrit, writer Indira Parthasarathy said there are many words in Sanskrit that were taken from Tamil.
Even the word ‘Vishnu’ comes from the Tamil word ‘Vin,’ he said speaking at the Tamil and Sanskrit conference here on Saturday.
Delivering the keynote address at the function, Tamil writer A.A. Manavalan said Sanskrit is a static language and has not changed through the years.
Even the Bhagavat Gita was added to the Mahabharatha at a later stage, he said.
It is possible that even Panini was influenced by Tholkappian’s Tamil, he said.
The Tamil and Sanskrit conference was organised by Manarkeni and featured 13 scholars including C.T. Indra, K. Rajavelu and others who presented papers through the day.
More In: TAMIL NADU | NATIONAL
Printable version | Sep 30, 2012 11:20:59 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tamil-contributed-to-sanskrit-too/article3951028.ece

Friday, September 28, 2012

காவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்



வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி இன்று வறண்டு கிடக்கிறது. தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டன. குறுவை சாகுபடி இல்லை, இப்போது சம்பாவும் காய்கிறது.

அண்மையில் பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து அக்டோபர் 15ம் தேதி வரை நாளொன்றுக்கு தமிழ்நாட்டுக்கு இரண்டு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டார். அதை கர்னாடகம் ஏற்கவில்லை. தினம் ஒன்பதாயிரம்  கன அடி தண்ணீரை  கர்னாடகம் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் உத்தரவிட்டார். அதை கர்னாடக அரசு நிராகரித்தது. எனவே தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. பிரதமர் உத்தரவிட்டதுபோல் ஒன்பதாயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என இப்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதை கர்னாடகம் நிறைவேற்றுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. ஆனால், காவிரி நடுவர் மன்றம் நீதிமன்ற அதிகாரம் கொண்டது.  அது தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டுமென்று கூறியிருந்தது. 419 டி எம் சி எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கர்னாடகா தரவேண்டியது 192 டி எம் சி மட்டுமே.மீதமுள்ள 227 டி எம் சி தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து கிடைக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளதுகர்னாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில்  50, செப்டம்பரில் 40., அக்டோபரில் 22, நவம்பரில் 15., டிசம்பரில் 8, ஜனவரியில் 3, பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஒரு ஆண்டுகூட கர்னாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை.

 காவிரிப் பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்படடது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்

1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த சிக்கலை விசாரிக்க கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது.’’ மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்

கிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறையில் இருக்குமென்று தீர்மானித்தார்கள்மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபிறகு காவிரி சிக்கல் மேலும் தீவிரமடைந்தது

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு சற்று முன்பு மத்திய அரசு ''காவிரி உண்மை அறியும் குழு'' ஒன்றை அமைத்தது. 1972ல் அக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் பின் வாங்கிக்கொண்டன. அதன் பிறகு 1990ல் மத்திய அரசு அமைத்தது தான் 'காவிரி நடுவர் மன்றம்' ஆகும்அது வழங்கிய இறுதித் தீர்ப்பையும்கூட கர்னாடகம் ஏற்கவில்லை. அதனால்தான் காவிரி சிக்கல் இன்றும் தொடர்கிறது.

தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று கர்னாடகத்தில் இருக்கும் இனவெறி

 அமைப்புகள் ஏற்கனவே போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதற்குப் போட்டியாக

 தமிழகத்தில் உள்ள அமைப்புகளும் களமிறங்கலாம். தமிழகத்தின் நதிநீர் உரிமைக்கான

 போராட்டம் ஒருபோதும் அண்டை மாநில மக்களுக்கு எதிரான இனவெறியாக

 மாறிவிடக்கூடாது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 ( மணற்கேணி 14 ஆவது இதழில் இடம்பெற்றிருக்கும் தலையங்கம் )

Tuesday, September 25, 2012

‘சமஸ்கிருதம் திராவிட மொழியா?' - இந்திராபார்த்தசாரதி




                           

சில ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி,தட்சிணபிராகிருத்த்தோடு அதிக தொடர்பு கொண்ட மொழி மராத்தி. இந்தியவில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் திராவிடர்கள்' என்று. அண்மையில் மாக்டொனால்ட் எழுதிய ‘சமஸ்கிருத மொழியின் வரலாற்றை'ப் படிக்கும்போது, நிமாடே கூறியது என் நினைவுக்கு வந்தது.

மாக்டொனால்ட் கூறுகிறார்:'  சமஸ்கிருதம், வேத காலத்தில் மொழி அறிஞர்களால் உருவாக்கப்பாட்டது. சமூக மரபுச் சட்டங்களை மக்கள் பின்பற்றுவதற்காகப் பாட்டுருவத்தில் உருவான செயற்கை மொழி சமஸ்கிருதம். ‘

அப்படியானால், அக்காலத்து மக்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானியக் குழுவைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் ரிக் வேத காலத்திலேயே, சமஸ்கிருதத்துக்கும், ஜெர்மானிய மொழிகளுக்கும் அடிப்படை
வேறுபாடுகள் தோன்றிவிட்டன.'வேத காலத்திய மொழி(சம்ஸ்கிருதம்) இந்தியாவில் அப்பொழுது பேசப்பட்டிருக்கக் கூடிய மொழிகளோடு( ‘திராவிட மொழிகள்'?) இரண்டறக்
கலந்து பல புதிய வடிவங்களைப் பெற்று, இப்பண்பாட்டுக் கலப்பின் ஒரு குறியீட்டு மொழியாகி விட்டது' என்று பி.டி.சீனுவாச அய்யங்கார் ‘புராதன இந்தியாவில் வாழ்க்கை' என்ற ஆய்வு நூலில் கூறியுள்ளார். இந்தோ-ஜெர்மானிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்குமிடையே வாக்கிய அமைப்பு (Syntax) வேறுபாடுகளை ஊன்றிக் கவனிக்கும்போது இது தெளிவாக விளங்கும். வாக்கிய அமைப்பில் பெரும் பான்மையான இந்திய மொழிகள் அனைத்தும் ஒத்துக் காணப்படுகின்றன. மொழிபெயர்ப்பின் போது இது தெளிவாகப் புலப்படும்.

வளர்ச்சியுறாத குழு மொழிகளைப் பேசிய, இந்தியாவில் குடியேறிய சில ‘ஆரிய' இனங்கள்( ‘ஆரிய' என்ற  இனத்தைக் குறிக்கும் சொல்லாட்சியே பொருத்தமா என்று தெரியவில்லை. மொழி வேற்றுமைகளைக் குறிப்பதற்காக, ‘ஆரிய', ‘திராவிட' என்று சொற்களை குறிப்புச் சௌகரியத்துக்காக  உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் மாக்ஸ்முல்லர்) இந்தியாவுக்கு வந்து, நாகரிகத்தில் முதிர்ச்சியுற்ற ‘திராவிட' இனங்களோடு (மறுபடியும் சொல்லாட்சிப் பொருத்தம் பற்றிய வினா எழுகின்றது!) கலந்துவிட்ட நிலையில் ஒரு புதிய பண்பாடு தோன்றியது. இதுதான் இந்தியக் கலாசாரம். இதில் எது ‘ஆரியம்', ‘எது திராவிடம்' என்று அறுதியிட்டுக் கூறுவது இயலாத காரியம்.

ஹிந்து மதம் என்று அறியப்படும் வைதிக நெறியில் காணப்படும் கடவுளர் அனைவரும் திராவிட வழிப்பாட்டு தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்கள் என்ற ஒரு கருத்தும் காணப்படுகின்றது.'சவிதா', ‘பூஷா', ‘வாயு', ‘சூரியன்', ‘உஷா', ‘சோமா', ‘எமன்', ‘வருணன்', ‘ருத்ரன்', ‘அதிதி', பிரஹஸ்பதி', பிராஜபதி' போன்ற பல வேதகாலத்திய, தெய்வங்களுக்கும், இந்தோ- ஜெர்மானிய இனங்களில் காணப்படும் பழைய கடவுளர்க்கும் எந்த விதமான ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மண்ணில் இந்த தெய்வங்கள் உருவானதற்குப் பண்பாட்டுக் கலப்புதான் காரணம் என்று சொல்லலாம்.

‘விஷ்ணு' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்குத் திருப்திகரமான வேர்ச் சொல் சமஸ்கிருதத்தில் இல்லை.' விண்' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது ‘விட்டுணு'(‘பரிபாடல்') ‘விண்' என்றால் வானம். வானத்தின் நிறம் நீலம். விஷ்ணுவின் நிறம்
நீலம்' அல்லது'கறுப்பு'. வானம் எனும்போது அது வெளியை (‘Space')க் குறிக்கும். விஷ்ணுவின் அவதாரம் ஒன்று அகிலத்தை அளந்து எல்லையற்ற வெளியைப் போல் விரிகின்றது.( வாமனாவதாரம்> திருவிக்ரமாவதாரம். அணு>அகண்டப் பெருவெளி).
‘சிவம்' என்றால் ‘செம்மை' அதாவது ‘ருத்ரன்'(‘செம்மை'). இமயந்தொட்டுக் குமரிமட்டும்
இவ்வின கலப்பில் உருவான கடவுளரைத் தாம் நான் காண்கின்றோம்.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பே இந்தியாவுக்குச் சில இந்தோ-ஜெர்மானிய இனங்கள் வந்திருக்கக்கூடும். அவர்களுக்கும், அப்பொழுது இந்தியாவிலிருந்த பூர்வக் குடிமக்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்களினாலும் உடன்பாடுகளினாலும் உருவானதுதான் இந்தியக் கலாசாரம். இக்கலாசாரத்தில் பூர்வ இந்தியக் கலாசாரத்தின்
கூறுகள்தாம் அதிகம் தெரிகின்றன. இதை ஹிந்து மதம் என்று அழைப்பதே சொல்லாட்சிப் பிழை. இது ஒரு வகையான வாழ்க்கை நெறி.

‘ஆரியம்' என்று அழைக்கப்படுகின்ற ‘இந்தோ-ஜெர்மானியப் பண்பாடு அதிகம் இல்லை என்பதற்குக் காரணங்கள்:(1) பூர்வகுடி தெய்வங்களின்(திருமால், சிவன், முருகன், கிருஷ்ணன் போன்றோர்) மேலாண்மை. ரிக் வேத காலத்து இந்திரனை ஏன் வழிபடவேண்டும் என்று ஆயர்களைக் கிருஷ்ணன் கேட்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.(2)இயற்கைப் பொருள்கள் (மரம், கல், மிருகங்கள், பறவைகள், நதிகள், மலைகள் ஆகியவை) வழிபடும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாக்டொனால்ட் கூறுகிறார்:' இந்தியாவில் மட்டும் நயாக்ரா நீர்வீழ்ச்சி இருந்திருந்தால், அது ஒரு சுற்றுலா இடமாக அல்லாமல் ஒரு மாபெரும் வழிபாட்டு ஸ்தலமாக ஆகியிருக்கும்!

இந்தக் கலாசாரப் பின்னணியில் பார்க்கும் போது, சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானிய மொழிகளின் பிரிவில் அடங்கிய ஒரு மொழியா என்பது ஒரு நியாயமானக் கேள்வியாகப் படுகிறது.



Sanskrit and Tamil - George L Hart





In modern times, there is a tendency among some Tamilians to see Sanskrit as somehow in competition with Tamil, as if the two were at war.  This attitude has been brought out by opposition to the creation of a unicode block for Grantha (the writing system traditionally used for Sanskrit in Tamil Nadu). Some go so far as to argue that Grantha should have no unicode implementation at all or even that the few Grantha letters commonly used in Tamil should be eliminated. My own view is that Grantha is something that belongs to all Tamilians and that its use for Sanskrit should be encouraged.  Of course, nowadays most Sanskrit books are published in Devanagari, but it seems a pity that Grantha, with its long history, should be utterly lost.  The use of Grantha is an ancient Tamil tradition, and it seems unjust that it should be utterly supplanted by something imported from North India.

In the first millennium CE, Sanskrit was what Pollock has called a “cosmopolitan language.”  By that he means that it was used as a sign and carrier of political and cultural status.  But it was much more than that. In an area with hundreds of different languages, ranging from Kashmir to Indonesia and Cambodia, it was used as a language of communication.  Buddhists used it just as much as Hindus, and one cannot study Buddhism properly without knowing Sanskrit. The breadth of subjects addressed in Sanskrit is enormous, including literature, literary theory, Buddhist philosophy, logic, eroticism, music, dance, medicine, astrology, mathematics, the Vedas — the list goes on and on.  One can find documents advocating Brahmin supremacy, but there are also many sources in Sanskrit that mock Brahmanism. So much has been written in Sanskrit that it is virtually impossible for any one person to become an expert in all its different forms.  It is an ocean that goes on and on and seemingly spreads everywhere. Even among Hindus, Sanskrit writers were not exclusively Brahmin. The people who sang the epics, Sūtas and Magadhas, were not Brahmins, and the Sanskrit plays show many non-Brahmins proficient in Sanskrit.

If there is anything lamentable about this it is that the enormous respect and weight given to Sanskrit tended to strangle other languages.  We have little or nothing in Telugu or Kannada until about the 10th century, even though we know those languages were widely spoken and vigorous.  And when Telugu and Kannada do develop literatures, they borrow their conventions and literary ideas almost entirely from Sanskrit — with few exceptions (like the Vacanas in Kannada), we do not see local oral literature reflected in the major works of these languages.   They gained status by imitating Sanskrit, and one major Telugu poet actually had to write a Sanskrit version of a work he had already written so that he could claim his own work as an anuvāda of a Sanskrit original.

What about Tamil?  It had the good fortune to gain an extensive written literature before the Sanskrit juggernaut became irresistible.  Its early works owe virtually nothing to Sanskrit, but rather are indebted to the oral traditions of the local countryside.  Perhaps this process was helped along by the vast distances between the Tamil areas and North India.  In any event, we are fortunate that Sangam literature was valued and preserved, as it is not only one of the great world literatures, it gives us a lens through which we can see ancient Tamil culture without the distortion of Sanskrit sources, which tend to adhere to a set of conventions and ideas that are independent of any given area or culture.  Whether written by Buddhists or Hindus, Sanskrit invariably adopts a sort of elitist perspective, out of touch with local developments.  Tamil is quite different.  As anyone reading Sangam literature knows, its works are quite thoroughly grounded in local traditions and describe people of all backgrounds and classes.  Because Tamil developed its own identity so early, it remained relatively immune to the influence of Sanskrit.  It retained (and retains) its own writing system that genuinely fits the pronunciation of the language unlike, say, Malayalam, most of whose speakers write bhū but say pū.

There is another way to envision Sanskrit, and that is as an enormous pool collecting any significant cultural or technical knowledge from every part of South Asia.  It is scarcely the pristine  and untouched artifact of elitism that many imagine.  There is a huge Buddhist literature in corrupt Sanskrit, and in Malayalam we find true maṇipravāḷam, which combines Sanskrit and Malayalam-Tamil grammar in striking and unexpected ways.  Most modern South Asian languages exist as continua between Sanskrit and spoken language.  This is especially true of Hindi, which uses Sanskrit neologisms that are absent in the commonly spoken language.

The early origins of Tamil and of its writing system have helped it keep its separate identity from Sanskrit.  Most Sanskrit words cannot even be written accurately in Tamil — ṛṣabha becomes iṭupam, for example.  From the beginning, elegant Tamil has eschewed Sanskrit words and encouraged the use of pure Tamil vocabulary, though of course Tamil has still managed to borrow an enormous number of Sanskrit words (just as Sanskrit has borrowed many Dravidian words).  Once, reading a hymn from the Rig Veda, we found that virtually every word is found in modern Tamil.  The fact is that everyday Tamil uses much more Sanskrit than Hindi (pustakam vs. kibāb).  But while the use of Sanskrit creates a high diction or tone in Hindi, Telugu, Kannada, Malayalam, Marathi, Bengali, and other languages, it does not do so for Tamil.  Rather, Sanskrit words give a colloquial, everyday flavor to Tamil (sneehitaṉ, cuttam, sattam, varṣam).  For formal Tamil, one must use words like naṇpaṉ, tūymai, oli, āṇṭu, and these pure Dravidian words impart an elegance that is entirely lacking when Sanskrit words are used.  Is the use of Sanskrit vocabulary therefore to be avoided in Tamil?  I would rather argue that Sanskrit, like English, is a source of richness for Tamil, enabling different registers of the language that coexist with the elegant register of pure Tamil.  Ultimately, the identity of Tamil has, from the first, been mainly dependent on its elegant incarnation.  Centamiḻ is the heart and soul of the language, but Sanskrit and English are attributes that can be used to enrich it.

I don’t think Tamil is threatened by Sanskrit (or even English), and I don’t think it ever has been.  Its separate identity and character have been cultivated and preserved from its beginnings to the present, and they will be preserved.  The Tamils value and love their language, and they will certainly always continue to cultivate it.  I find myself less sanguine about Sanskrit itself.  Nowadays, very few serious scholars in India study Sanskrit.  The language, however many Hindi or Malayalam words it may furnish, is dying of neglect, and as a result much of the cultural history of South and Southeast Asia is becoming inaccessible.  I find it ironic that some Tamilians still feel their language threatened by Sanskrit, while in fact Tamil is flourishing and it is Sanskrit that is threatened by neglect.  Tamil and Sanskrit are, after all, the two classical languages of India (and South Asia) and, if we are to properly understand the heritage of India, both must be cultivated and studied.

– George Hart
November 25, 2010 / Posted by editor in his Blog

தமிழும் வடமொழியும் தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச் சார்பற்றதாக்கிக் கற்றலின் தேவை - கி.நாச்சிமுத்து


தமிழும் வடமொழியும்
தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச் சார்பற்றதாக்கிக் கற்றலின் தேவை

கி.நாச்சிமுத்து

                        அரசியல் பண்பாடு முதலிய சமயச் சார்பற்ற துறைகளில் பல்லவர் முதலிய தமிழரல்லாத அரச வம்சங்கள் தமிழ் நாட்டை ஆண்ட போது இந்தியா முழுமையும் ஏற்பட்ட இந்திய மயமாதலின் கருவியாக வடமொழி பொதுமொழியாக உருப்பெற்றது,அப்போது  சங்க காலத்தில் பிராகிருதத்திற்கு இணையாகத் தனியாகத் தமிழகத்தில் அரசியல் முதலியவற்றில் கோலோச்சிய தமிழ் மொழி தன்னுடைய தனி அதிகாரக் களன்களை இழக்கத்தொடங்கியது.அன்று தொடங்கியது வடமொழிபால் அரசியல் பகைமை .

                  அரசியல் சமயம் கல்வித்துறை போன்றவற்றின் உயர் நிலையில் வடமொழி தன்னுடைய இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டபோது தமிழ் தீண்டத்தகாததாக இறைவன் சந்நிதிக்கும்  கோபுரத்திற்கும் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.இதனால் புண்பட்ட தமிழ் நெஞ்சம் கொஞ்சம் புராணக் கதைகளிலும் புராணக் கதைகளிலும்  தமிழைத் தக்க வைத்துக் கொண்டு ஆறுதல் கொண்டது.

       தமிழர் இலக்கியமும் கலையும் ஓரளவு தமிழில் வெளிப்படப் பெரும்பாலான அறிவுப் படைப்புகள் வடமொழியில் வெளிப்போந்தன.எனவே வடமொழி வல்லாண்மையை எதிர்க்கும் போது நாமே வடமொழியில் தேடிவைத்த அறிவுச் செல்வங்களை நாம் வடமொழியிலிருந்து பெற்றதுதானே என்று எள்ளி நகையாடுவதும் அவை எமதல்ல என்று அவற்றைப் புறக்கணிப்பதும் அறிவார்ந்த செயல்கள் அல்ல.இது ஒநாயும் ஆட்டுக் குட்டியும் என்ற ஈசாப்புக் கதையை நினைவூட்டுகிறது.அங்கே ஆற்றின் மேல் பக்கம் நிற்கிற ஓநாய் கீழே நிற்கிற ஆட்டுக் குட்டிதான் நீரைக் கலக்கியது என்று குற்றம் சாட்டிக் கபளீகரம் செய்த ஒநாய்த்தந்திரம்தான் வடமொழிப் பற்றாளர் செயல்கள்.

                  வடமொழி தமிழ் உறவில் கவனம் பெறவேண்டிய ஒரு செய்தியை இங்கே குறிப்பிடலாம்.வடமொழி பொது இணைப்புமொழியாக  அறிவுத்துறை அரசியல் துறை முதலியவற்றில் வளர்ச்சி பெற்றபோது ஏற்பட்ட இருமொழியச் சூழலில் வட மொழியின் பாதிப்பிற்கு உள்ளாகாத மொழிகளே இல்லை ,தமிழ்தான் அதை எல்லாம் எதிர்த்து நின்று தாக்குப்பிடித்துத் தன் தனித்தன்மையை இயன்ற மட்டிலும் காத்துக் கொண்டது.தமிழின் இந்த அரிய பண்பாட்டுத் வீறை ஆராய்கிற வெளிநாட்டு அறிஞர்களும் நம் நாட்டுப் பிறமொழி அறிஞர்களும்  தமிழின் இந்த வீறார்ந்த தனித் தன்மையை இனங்கண்டு பாராட்டாமல் இருப்பதில்லை.இதுவே தமிழின் பெருமை பேசும் நமக்குச் சிலவேளை நல்ல டானிக்கு போல அமைந்துவிடுவது உண்டு.
                  வடமொழி எல்லா நாட்டினருக்கும் எல்லாச் சமயதினர்க்கும் எல்லா மக்களுக்கும் உரிய மொழியாக இருப்பினும்அந்தண இனம் அதில் ஆதிக்கம் செலுத்தியதால் வடமொழிக்கு அவர்கள் தான் தொண்டு செய்தார்கள் என்பது சரியன்று.பிற்காலப் பௌத்தரும் சமணரும் வடமொழியை வளர்த்த வரலாறு எல்லாருக்கும் தெரியும்.சிற்ப நூல்கள் மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதியவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லர்.தமிழில் வடமொழி இலக்கணத்தையும் சேர்த்துச் சொன்ன புத்தமித்திரர் அந்தணர் அல்லர்.அந்நூல் ஒருவகையில் வடமொழியைப் பேணிய வைதிகர் அல்லாத வழியினரின் முயற்சி என்பதைப் பார்க்கும் போது வடமொழி வழியினராக  தமிழில்  அந்தணர் அல்லாதாரும் முன்னின்றனர் என்பதை உணரமுடியும்.பிற்கால வைதிகரான சுப்பிரமணிய தீக்கிதர் வீரசோழியத்தைப் புறக்கணத்திருப்பது கூட இக்காரணத்தால் இருக்கலாம்.கம்பன் வடமொழி வழியான  இராம காவியத்தை எழுதும்போது அது கூட அந்தணர் அல்லாதவர் முயற்சி அல்லவா? பௌராணிகக் குப்பையும் அறிவுக்குப் பொருந்தாத சமுதாயச் சிந்தனைகளும் மட்டுமின்றி அவற்றை எல்லாம் எதிர்க்கிற வச்சிர சூசி போன்ற நூல்களும் அரிய அறிவியல் கணக்கு நூல்களும் உலகாயதம் முதலிய பகுத்தறிவுச் சிந்தனைகளும் வடமொழியில் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது.
                  எனவே தமிழர்கள் வடமொழியைப் புறக்கணித்து நாமே அம்மொழியில் எழுதிவைத்த அறிவுச் செல்வங்களை இழக்க வேண்டாம்.கேரளத்தில் நாராயணகுரு தாழ்த்தப்பட்ட மக்கள் வடமொழி கற்றுத் தம் நிலையை உயர்த்த வேண்டும் என்று கூறி அவரே அதற்கு முன்மாதிரியாக இருந்தார்.தமிழ் நாட்டில் அக்காலச் சூழலில் அத்தகைய நிலைப்பாடு செல்லுபடியாகாமற் போய்விட்டது.ஆனால் இப்போது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வடமொழியை நாம் அதன் சமய சமுகச் சுரண்டல் நிலையிருந்துவிடுவித்து அதை ஒரு  சமயச் சமுதாயச்  சார்பற்ற மொழியாக்கிக் கற்க வேண்டும்.ஆங்கிலேயர் முதலிய பன்னாட்டவர் அதை இந்திய அறிவுச் செல்வத்தின் பெட்டகமாகக் கருதிக் கற்பதைப் போல பிராமணர் அல்லாத  தமிழர்களும் கற்றுத் தேர்ந்து அம்மொழியிலுள்ள அளவற்ற அறிவுச் செல்வங்களை மீண்டும் திட்டமிட்டுத் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும். அக்காலத்தில்  நம் சிற்பிகளும் மருத்துவர்களும் பிறரும் வடமொழியைக் கற்றதைப் போலக் கற்க வேண்டும்.அக்காலத் தமிழர் தமிழ் மொழிப் பற்றின்றிச் செய்த பிழைகளை ஈடுகட்ட இதுவே சரியான தருணம்.வடமொழியை ஒரு சாதியார் சொத்து என்பதிலிருந்து மீட்டு அதைப் பொதுவாக்குவதே வடமொழி வல்லாண்மை எதிர்கொள்ள நல்ல வழி என்று தோன்றுகிறது. அப்போது நடுநிலையாக நடக்கப் போகும் ஆய்வுகள் வழி ரிக்வேதத்தில் சொற்களைக் கண்டுபிடித்ததைப்போலப் பல வடமொழிச் சொற்கள் சொற்பொருள் போன்றவை வடமொழி தமிழிலிருந்து பெற்ற கடனாட்சியால் விளைந்தவை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். தமிழ்ப் பெரிய புராணம் திருவிளையாடல் போன்றவற்றைத் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் வடமொழி மூலம் என்று தலை கீழாக வடமொழி வாணர்கள் பேசுவது வேடிக்கையானது என்று முனைவர் நாகசாமி போன்றவர்களே சுட்டிக் காட்டுவது போல இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.குறிப்பாகத் தமிழறிஞர்களும் வடமொழி அறிவு பெற்று இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் தமிழாய்வும் வளம் பெறும்.இது தொடர்பாக வேறொரு சூழலில் உரைத்த கருத்தை இங்கு நினைவூட்டி இவ்வுரையை நிறைவு செய்யலாம்.

இன்றைய தமிழ் இலக்கியக் கல்வியில் பழந்தமிழ் இலக்கியக் கோட்பாடு திறனாய்வு போன்றவற்றை உணரத் தொல்காப்பியம் முதலிய நூல்களின் பொருளிலக்கணம் காரிகை தண்டி முதலியன பாடமாக உள்ளன.தற்கால மேலை இலக்கியத் திறனாய்வு முறைகளைக் கற்கத் தனி இலக்கியத் திறனாய்வுப் பாடம் உள்ளது.ஆனால் தமிழ் இலக்கியத்திறனாய்வு முறைகளுக்கு இணையாகவும் விஞ்சியும் வளர்ந்திருந்த வடமொழித்திறனாய்வு முறைகள் பற்றிய பாடம் தமிழ் மாணவர்களுக்கு இல்லை.ஏனைய இந்திய மொழி மாணவர்கள் தமிழ் மாணவர்கள் கற்கும் தமிழ் இலக்கியத் திறனாய்வுக்கு இணையாக வடமொழி இலக்கியத்திறனாய்பு முறைகளையும் பின் மேலை இலக்கியத்திறனாய்வு முறைகளையும் கற்கிறார்கள்.தமிழ் மாணவர்கள் தமிழ் மேலை இலக்கியத்திறனாய்வு முறைகளுடன் வடமொழி இலக்கியத்திறனாய்வு முறைகள் பற்றிய பாடத்தையும் தனித் தாளாகவோ இலக்கியத்திறனாய்வின் பகுதியாகவோ கற்க வேண்டும்.இதை இளங்கலை முதுகலை முதுமுனைவர் என்ற நிலையில் தக்கபடி பிரித்து வைக்கலாம்.இப்படிக் கற்றாலேயே தமிழ் மாணவர்கள் பிற இந்திய இலக்கியத்திறனாய்வாளர்களுடன் தொனி ரசம் அலங்காரம்,ரீதி ஔசித்தியம்(பொருத்தம்)போன்றவற்றைத் தமிழ் உள்ளுறை இறைச்சி போன்றவற்றுடன் ஒப்பிட்டு  ஆராயவும் உரையாடல்கள் நிகழ்த்தவும் இயலும்.இதுபோன்றே பிற இந்திய இலக்கிய மாணவர்களும் இந்திய  இலக்கியத்திறனாய்வு முறை பற்றிய பாடத்திலோ  மேலை இலக்கியத்திறனாய்வு  பற்றிய பாடத்திலோ  வடமொழிக்கு இணையாக வேறுபட விளங்கிய தமிழ்த் திறனாய்வு முறைகளையும் கற்கும்படி பாடத்திட்டம் அமைக்கவேண்டும்.‘

( மணற்கேணி ஆய்வரங்கில் விவாதிப்பதற்காக பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் அனுப்பியுள்ள குறிப்பு