Wednesday, June 29, 2011

Solidarity Statement









The solidarity statement with Thirumavalavan, Meena Kandasamy and Samya has now been signed by over 200 students, activists and academics, including Gail Omvedt, Kancha Ilaiah, Jairus Banaji, Nivedita Menon, Prabhu Mohapatra, M.S.S. Pandian, Ravikumar, Sharmila Rege and Aditya Nigam, among many others. If you haven't done so already, do sign the statement online at http://kafila.org/2011/06/17/locking-up-gods-within-caste/

You can also reply to this email with your name and designation to be added to the list of signatories.

The solidarity statement is due to be released to the press shortly and your support will help make a stronger case against attempts to suppress freedom of expression and dalit assertion. The statement with the updated list of signatories follows:

We call for all those who support democracy and free speech to express solidarity with Thirumavalavan, Meena Kandasamy and Samya (now Stree-Samya).Kathavarayan and Madurai Veeran are among the gods who are acknowledged to be Dalit and are worshipped by many castes. Clearly, in the oral history of the people, the gods have castes and these castes are not determined by who worships them.

The twin brothers Ponnar Shankar inhabit the realm between hero and deity. They have been fictionalised, recreated for the silver screen, and are worshipped across communities. Their origin myth remains contested territory - it is variously read as symbolic of the conflict between agriculturists/warriors and hunters, as part of founding tale of the land-owning agriculturist Kongu Vellala Gounder sub-caste and, in a textbook example of how Hindutva functions, have recently been claimed as reincarnations of the Pandavas. Like other deities of the people, they are firmly located in a historical imagination among a society of human beings, and not in a mythos of gods.

In a footnote in Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers by Thirumavalavan, Meena Kandasamy describes Ponnar Shankar as Dalit. M Loganathan, an advocate from Nanje Goundanpudur and Students Wing Convenor of the Kongu Nadu Munnetra Kazhagam (KMK), has been quoted in news reports as saying that there is evidence proving that Ponnar and Shankar are Kongu Vellala Gounders and claiming that depicting them as Dalits will lead to caste tension.

Dragging cultural contestations into the legal domain threatens the various, creative ways in which people innovate cultural practices and the equally creative ways in which research tries to make sense of them. Criminalising cultural expression and innovation is an attempt to freeze culture.

Locking up gods within castes is a tactic used by dominant castes to maintain status quo. This is an open threat against dalit belief, expression and right to self-determination. Like the repeated physical atrocities against Dalits, attempts to suppress their cultural and intellectual autonomy and self-assertion are part of a wider onslaught on democracy. This case is part of the drive to reconstruct India as a religious and cultural monolith, which it has never been.

The litigant had earlier complained that the film based on the Ponnar Shankar story, scripted by M. Karunanidhi, is misrepresenting deities but had contented himself with writing a letter to the censor board then. It is the leader of the Viduthalai Chiruthaigal, a well-known Dalit poet and translator and a publishing house that have been singled out for filing a case.

We are secretly pleased that a footnote* is believed to have such power. Academics in our ranks are even now rejoicing at the thought of how they may change the world, one footnote at a time. But, mostly, we are offended.

We are offended that a deity being named dalit can even be called an offensive act. We are offended at how legal backing is available for openly-casteist harassment. We are offended at news reports that present this case as a quaint little example of caste quibbling, without pointing to the long history of violence, without pointing to the continued conspiracy to maintain the status quo and culture of violence that this case is an outcome of.

Our histories are deeply marked by caste. We seek to emancipate our present by reclaiming these histories for the marginalised.

Re-writing history from the perspective of the marginalised is necessary and vital for the self-determination of dalit communities. Now, such an effort is being criminalised. This is a threat to democracy and the pluralist ethos. This is an offence against free speech. We stand in solidarity with Thirumavalavan, Meena Kandasamy and Samya, in support of the subaltern perspective and assertion they stand for.

*Here are some inflammatory footnotes about violence against Dalits:Dalits have been denied temple entry, forced to work with hazardous material, treated as bonded labour and attacked for attempting to buy their way out of their bondage (subhead: Dalit Family Attacked over Land, September 2002).In Kalapatti village, sustained violence against dalits, has lead to many of them to fleeing their homes. "On 16 May 2004, a Dalit settlement in the village of Kalapatti in Tamil Nadu was attacked by upper-caste members (Country Reports 2004 28 Feb. 2005; UN 23 Feb. 2005; DHRM n.d.; Frontline 19 June – 2 July 2004). According to the sources, approximately 100 houses were burnt down by a group of 200 people and Dalits trying to escape were assaulted, including reports of sexual assault of women (Country Reports 2004 28 Feb. 2005; UN 23 Feb. 2005; DHRM n.d.; Frontline 19 June – 2 July 2004)," notes the UN Refugee Agency website.

Signed
Jairus Banaji, Chittibabu Padavala, R. Kalaiarasu, Swathi Vadlamudi, Kuffir Nalgundwar, Malarvizhi Jayanth, Ajith Kumar A.S., Anu Ramdas, Anoop Kumar, Divya Trivedi, Karthikeyan Damodaran, Jaya Shobaneshwari, Satish Poduval, Khalid Anis Ansari, Afsar Mohammed, Divya Rajagopal, Bobby Kunhu, Jenny Rowena, Anil Tharayath Varghese, Sanil Zenbuddha, Smitha Patil, Sudeep Ben Aadil Almitra - Kozhikode, Sanjeev Sreedharan, Salim T.K., Rupesh Kumar, Manohar Kumar, Nabina Das, Afthab Ellath, Sruthi Herbert, Anand Navayana - Publisher - Navayana Publishing, Murali Shanmugavelan, Thenmozhi Soundararajan, Vinay Sreenivasa, Anitha Ranjani Sampath, Rhoda Alex, Karthik Navayan, Poovi Gothai, Vikram Benny, Sushanta Sarkar, Kumar Varma Kayanikorothu - Andhra University, Rajashekhar Geddada, Thiben Ram - France, Sanam Roohi Reddy, Kiritkumar Pravasi, Prasheel Anand, Peggy Trawick, Shiva Shankar, Sujatha Surepally, Chellapandi - IHRE District Coordinator - Palani, Ponnuchamy, Arumugam, Ravichandran Bathran, D. Ravikumar, Jebamalai Raja, Benjamin P Kaila - Los Angeles - Friends for Education International, Gills John, Leena Manimekalai, Poovannan Ganapathy, Reny Ayline, Sadique Pk Mampad, Rama Hansraj, Chandraiah Gopani, Prabhu Mohapatra - Department of History - Delhi University, Nivedita Menon - JNU, Pramada Menon, Rajkumar Hans - History - MSU - Baroda, Janaki Srinivasan - Panjab University, Aniket Alam, Aditya Nigam, Sudarshan Papanna, Chinnaiyan Lakshmanan, Smriti Suman - Department of Political Science - Delhi University, Baskar, Yasser, K Sanjay Kumar, Abdul Khadar M., Shruti Sareen, Balaji Kulasekaran, Jay Sullivan - USA, Md. Ali - Correspondent - TwoCircles.net, Ravi Shankar, James Chang, Akshay Sharma - National University of Juridical Sciences - Calcutta, Kenneth Jackson - USA, Abhirami Sriram - Editor - Orient Blackswan, Karthika Naïr - France, Vinay Bhat, Nishanth, Munusamy Ganapathy, Prashant Tandon - Delhi, Sneha Krishnan, Bhargavi - Student, Rahul P.S., Inasu, Muraleedharan Raghavan, Mathi, Karthikeya Sivasenapathy - Tiruppur, Joe, Deepti Nair - Sub-editor - New Indian Express, Venkatesa Pandian, Nathaniel Roberts - Research Fellow - Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity - Germany, Ramakrishna Bhargav N. - Research Scholar - Department of Communication - University of Hyderabad, Vidya Bhushan Rawat, Sharmila Rege, Nikhila Henry, Deepesh C., Aniruddha Dutta, Anant Maringanti, Sukumar Muralidharan, Leonard - Hyderabad University, Ausaf, Sreekanth Bolloju, Hany Babu, Gopikanta Ghosh, Gouri Patwardhan - Filmmaker, Subaguna Rajan, T. Sundara Vardhan, Abhiyan Humane - UW-Madison, Geeta Charusivam - Activist - Chennai, Raju Naran, Ranjith Kumar, J. Devika, Uma Chakravarti, Ashley Tellis, Anushiya Ramaswamy, Dr. Tharakeshwar V.B. - Associate Professor & Head - Department of Translation Studies - School of Interdisciplinary Studies - The English and Foreign Languages University - Hyderabad, C.S.Lakshmi (Ambai), Ivy Hansdak - Asst Professor - Dept of English - Jamia Millia Islamia - New Delhi, Kotesh Devulapally - Research Fellow - EFL University - Hyderabad, Ramesh Aroli - Assistant Professor - Dept of Journalism - Kamala Nehru College - University of Delhi, Harsh Mander, Govind Krishnan, Premjish - MPhil Visual Studies - School of Arts and Aesthetics - JNU, Sruti Bala, Dr. Nikhila H. - Head and Associate Professor - Department of Film Studies and Visual Communication - The English and Foreign Languages University, Chandrashekhar Aijoor, Aparna Eswaran - Research Scholar - CIPOD - JNU, Raghvendra .H.K, Selva, Dilip Gaikwad, Bhimrao Kuchekar, Arumugam, Nirmala M N - Research Scholar - EFLU, Amartya Kanjilal, Ketaki Chowkhani, Sanju Jyo, Akshi Singh, Rahamath Tarikere - Professor - Dept. of Literature Studies - Kannada University - Hampi, `Sufi' MP Prakash Nagara - Hospet, Sravanthi Kollu, Nataraj Honnavalli, Gee Ameena Suleiman - Bangalore, Darshana Sreedhar - Research Scholar - CSSSC, Sowmya Dechamma C.C. - University of Hyderabad, Govindarajan.G - Asst Engineer - IOCL, M.S.S. Pandian - JNU, Anushiya Ramaswamy, Kaveri Rajaraman Indira, Vijay Boratti - Assistant professor in English - University Evening College - University of Mysore, Kancha Ilaiah, Paramjit S. - Judge, Anandhi S. - MIDS - Chennai, Arumbhu, Mohan Rao - JNU, Saptarshi Mandal - Legal Researcher - Delhi, Philip Vinod Peacock - Associate Professor - Bishop’s College, Revd. Dr. Keith Hebden, Arunesh Maiyar, Simona Sawhney - University of Minnesota, Gail Omvedt - Chair Professor - Dr. Ambedkar Chair on Social Change and Development - IGNOU, Aruna Gnanadason, Joshua Isaac, Bantu Krishnarao - Srikakulam - Andhra Pradesh, Nitika Ladda, Ramdas - PUCL - Karnataka

Sunday, June 26, 2011

தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து



                     தமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு சிந்திக்கப் புகுகின்றோம் .அறிவுத்துறைகளுள் இயல் பிரிவில் மொழிக்கும் இலக்கியத்திற்கும்  தொல்காப்பியரின் இலக்கண நூல் ஒர் அரிய சாதனை.இது போன்றே இசை நாடகம் போன்ற துறைகளுக்கும் அறிவியல் நூல்கள் இருந்திருக்கின்றன.அவற்றில் சிலவே தப்பி வந்திருக்கின்றன.கணக்கு தர்க்கம் தத்துவம் மருத்துவம் சிற்பம் சோதிடம் போன்ற துறைகளில் ஒரு சிலவே நமக்குக் கிடைக்கின்றன.
              கணக்கு போன்ற துறைகளில் அடிப்படையான கோட்பாட்டு நூல்கள் வடமொழியிற்போல;த் தமிழில் மிகுதியாக இல்லை,சோதிட நூல்கள் பல வடமொழி நூல்களை ஒட்டி எழுந்திருக்கின்றன.தர்க்கத்தில் மணிமேகலை நீலகேசி இன்-னும் பரபக்கம் பேசும் சைவசித்தாந்த நூல்கள் வேதாந்த நூல்கள் போன்றவற்றில் சில செய்திகள் காணப்படுவது அல்லாமல் தனித் தமிழில் அமைந்த நூல்கள்  காணப்படவில்லை.தத்தவத்தில் சைவசித்தாந்தம்(பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள்) வேதாந்தம் (கைவல்ய நவநீதம்) மருத்துவத்தில் சித்த மருத்துவம்,வர்ம மருத்துவம்,மாட்டு வாகடம் போன்றவற்றில் வடமொழி நூல்களை ஒட்டி அமைந்து அவற்றிலிருந்து வேறுபட்ட வளர்ச்சிகளுடன் சித்த மருத்துவம் வர்ம மருத்துவம் போன்ற துறைகளில் தனி நூல்கள் தோன்றியுள்ளன.சிற்பம் பற்றி வடமொழி மணிப்பிரவாள நூல்கள் உள்ளன.மொத்தத்தில் தமிழ்ப் புலமை மரபில் உயர் அறிவியல் துறையில் (இலக்கணம்,நாட்டியம்,இசைஇமருத்துவம்,சோதிடம் தவிர) வடமொழியில் காணப்படுவது போன்று பல நூல்களோ கோட்பாட்டு நூல்களோ காணப்படவில்லை,தமிழ்ப் புலமை மரபில் உயர் ஆராய்ச்சித்துறையில் வடமொழியையே பயிற்சி  மொழியாகக் கொண்டிருந்திருக்கின்றனர் என எண்ணலாம்.எனினும் இசை நாட்டியம் மருத்துவம் சோதிடம் போன்ற துறைகளில் உள்ள நூல்கள் தமிழையும் அந்நிலைக்கு உயர்த்த நடந்த முயற்சிகளைக் காட்டுகின்றன.
              தமிழுக்கு முதன் முதலில் எழுத்து வடிவம் வந்தவுடன் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது போலவே பிற அறிவுத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.மொழி தனித்து வளர்வதற்குரிய அரசியல் தலைமை அதற்கு மூவேந்தர் ஆட்சியில் அமைந்திருந்தது என்பதற்குத் தாமிழி அல்லது தென்பிராமியில் தமிழ் மொழி எழுதப்பட்டிருப்பது காட்டுகிறது. ஏனைய கன்னட தெலுங்குப் பகுதியில் பிராகிருதம் அல்லது வடமொழி  ஆளப்பட்டது என்பது அம்மொழிகளுக்குத் தலைமை அளிக்கும் அரசாட்சி அமையவில்லை என்பதைக் காட்டுகிறது.அல்லது அம்மொழிகள் அந்த நிலையை அடைவதற்குரிய அறிவுத் துறைப் புலமை மரபுகளை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
       சங்க காலத்தில் அளவை எனப்படும் தர்க்கம் முதலிய பல துறை சார்ந்த நூல்கள் தோன்றியிருந்ததாகவும் அவை கடல்கோள் முதலியவற்றால் அழிந்தன என்றும் ஒரு பழம்பாடல் கூறுகிறது.இது அன்று தமிழ் வழியான புலமை மரபின் வீழ்ச்சியைக் குறிப்பதாகலாம்.ஏனெனில் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய வடநாட்டுப் படையெடுப்புகள் பல்லவர் முதலிய ஆட்சி மாற்றத்தின் போது வடமொழி அனைத்திந்திய அளவில் வணிகம் சமயம் சட்டம் அரசியல் அறிவுத்துறை போன்றவற்றில் பொது இணைப்பு மொழியாக உருவெடுப்பதைப் பார்க்கிறோம்.
              இந்தக் காலகட்டத்தில் வடமொழி தமிழர்க்கு கல்வி அரசியல் சமயம் போன்ற துறைகளில் முதல் மொழியாக மாறுகிறது.தமிழ் இலக்கியம் கலை போன்ற துறைகளில் மட்டும் தன்னிடத்தைத் தக்க வைத்திருக்க வேண்டும்,பிற துறைகளில் இன்று போல் மேல் நிலை அறிவைப் பொதுநிலையில் சாதாரண மக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்கும் அளவில் தமிழ் பயன்பட்டிருக்கவேண்டும்.தமிழர் புலமை மரபின் அறிவுச் சேமிப்பின் இன்னொரு கருவியாக வடமொழி மாறுகிறது.இதனால் தமிழர் தம் அறிவை வடமொழி வழி ஒரு பரந்த அனைத்திந்தியப் பரப்புக்குக் கொண்டு செல்ல முடிந்தது.அத்தோடு வடமொழி வழியாக வந்த அனைத்திந்திய அறிவுச் செல்வத்தைப் பெறத் தமிழர்களால் முடிந்தது.இக்கால கட்டத்தில் யவனத்தச்சர் மகத வினைஞர் அவந்திக் கொல்லர் எல்லோரும் இணைந்து தமிழகத்தில் செயல்பட்டிருக்கும்போது வடமொழி போன்ற ஒரு பொது மொழியும் தேவையாக இருந்திருக்கும்.மேலும் வடமொழி இந்தியாவில் யாருக்கும் தாய்மொழியாக இருந்ததில்லை.எல்லோருக்கும் இரண்டாம் மொழி /இன்று ஆங்கிலம் போல ,அதனால் அதைப் பொதுமொழியா ஏற்பது எல்லோருக்கும் ஒருபடித்தாக ஏற்றதாக இருந்தது.
கிரேக்கம் முதலிய மொழிகளில் இருந்து கடன் பெற்ற சுருங்கை ஓரை போன்ற சொற்கள் வடமொழி வழிக் கடன் பெற்றதை நோக்கத் தமிழ் போன்ற மொழிகள் நேரடியாக இம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள வடமொழியையே நாடியிருப்பர் என்று தோன்றுகிறது.இது இன்று நாம் உலகப் பலகணியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போன்றது.மேலும் தமிழர் உட்பட்டவர்கள்  தெ.கி.ஆசியா போன்ற இடங்களில் தம் ஆட்சி பண்பாடு இவற்றைப் பரப்ப வடமொழியையே பொது இணைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
              இதன் விளைவுகள் தமிழ் போன்று தனியாண்மை பெற்ற மொழிக்குப் பெரும் சரிவுகளை ஏற்படுத்தி விட்டன.ஒன்று தமிழின் புலமை மரபில் வடமொழி சமமாகவும் அல்லது மேலாதிக்கத்துடனும் இடம் பெற்றவுடன் தமிழின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்பட்டது.தமிழர் அறிவெல்லாம் வடமொழியில் பதிவாகும்போது பல தமிழ் சார்ந்து உருவாயிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்திந்திய அளவில் எல்லோருடைய வசதிக்காகவும் வடமொழியில் மொழிமாற்றம் பெற்று அங்கு சென்று விட்டன.பின் வடமொழி மரபிலேயே மேலே அவை வளர்க்கப் பட்டன.இசைத்துறையில் பண்ணின் தமிழ்ப் பெயர்கள் பொது வடமொழிப் பெயராக மொழிபெயர்ப்பதையும் பின்னர் அவை அங்கு அம்மொழி சார்ந்து வளர்ச்சி பெறுவதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்,அத்துடன் இங்கு எழுந்த வடமொழிக் கலைநூல்களிலும் ஆகம சிற்ப சாத்திர நூல்களிலும் வடமொழிக் கலைச் சொற்கள் எழுந்தாலும் அவையெல்லாம் தமிழர்களால் உருவாக்கப்பட்டவையே,இந்த நூல்களில் தமிழ்க் கலைச் சொற்களும் இடம்பெற்றாலும் பெரும்பாலும் அவை வடமொழியில் இருக்கும்.அவற்றில் பலவும் தமிழிலிருந்து பெற்ற கடன் மொழிபெயர்ப்பாக இருக்கவே வாய்ப்புள்ளது.வடமொழியில் காணப்படும் துறை சார்ந்த கலைச் சொற்களை இருமொழி வல்லவர்கள் இக்கோணத்தில் ஆராய்ந்தால் உண்மைகள் பல வெளிவரும்.
மேலும் வளமான புலமை மரபு வளரத் தேவையான பல்துறைப் பரிமாற்றம் தமிழ் வழியாக நடைபெறப் போதிய துறைகள் தமிழில் வளராததால் தமிழ் வழியான புலமை மரபின் வளர்ச்சிக்கு வடமொழி சார்ந்த அறிவும் புலமைப் பயிற்சியும்  தேவையாக இருந்தன.இதை அன்றையப் புலமை மரபைச் சேர்ந்த தமிழர் தம் வடமொழிப் பயிற்சியாலும் அதிலுள்ள அறிவுத் துறைகளில் ஏற்படுத்திக் கொண்ட பயிற்சியாலும் ஈடுகட்ட முனைந்தனர்.எனினும் புலமை மரபில் தமிழின் களங்கள் சுருங்கியதால் அறிவுத்துறைகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டது.தமிழை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட புலமை மரபு புத்தாக்கத்தில் பீடுநடைபோட இயலவில்லை.தமிழ் இலக்கியம் இலக்கணம் போன்ற துறைகளிலாவது தமிழ்ப் புலமை மரபைச் சார்ந்த இலக்கண மரபு தனித்தியங்க முயன்றது எனினும் வடநூல் வழித் தமிழாசிரியரும் தோன்றுகின்றனர்.தொல்காப்பியத்திற்குப் பின்னர் கி.பி.10 அளவில் வடநூல் வழி வீரசோழியம் தோன்றும் வரை  ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு தமிழ் இலக்கண மரபில் பெரும் படைப்புகள் தோன்றாமல் போனதற்கு அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கு அப்பால் புலமை மரபு தேங்கிப் போனதற்கான காரணங்கள் யாவை?தமிழ்ப் புலமை மரபு ஊக்கம் பெறுவதற்குரிய பிற துறைகள் தமிழில் வளராமற்போய் தமிழாசிரியர்கள் அத்தகையவற்றை வடமொழி வழியும் பெறாமல் போனது காரணமாகுமோ?சிவஞான முனிவர் போன்றோர் இக்கருத்தினரே.
              இந்தச் சூழலில் வடமொழிப் புலமை மரபு தமிழர்க்கும் உரிமை உடையதாக இருந்ததால் தமிழர்கள் வடமொழியிலிருந்து பல துறை சார்ந்த அறிவுகளைத் தமிழுக்கும் ஆக்கித் தமிழை வளப்படுத்த முனைந்தனர்.இது வெறும் கடன் வாங்கலாக வடமொழிப் பற்றாளர்கள் நினைத்துத் தமிழ் சார்ந்த புலமை மரபை குறைவாகக் கருதுவதோ அல்லது அது இழிவு என்று கருதித் தமிழ்ப் பற்றாளர்கள் அதை மறுப்பதோ சரியான நிலைப்பாடு அல்ல.தொல்காப்பியர் போன்றவர்கள் இலக்கணக் கொள்கைகள் ஆராய்ச்சி முறைகள் போன்றவற்றில் வடமொழி வழியாக வந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இந்த முறையில் விளக்கியதால் தான் மொழிக் காழ்ப்புணர்ச்சிகள் கருக்கொண்டன.உண்மையில் அவர் நமக்கும் சொந்தமான ஆனால் வடமொழியில் பதிவான நம்மவர் கருத்துக்களையே தழுவிக் கொள்கிறார் என்று கூறவேண்டும்.குறள் போன்ற நூல்களில் அறவியல் அரசியல் உளவியல் மருத்துவவியல் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவதை இவ்வாறே நோக்கவேண்டும்,வள்ளுவர் நூலோரிடமிருந்து தொகுத்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத் தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.ஆனால் அவற்றிற்குரிய மூல நூல்கள் (கௌடலீயம்,காமந்தகம்) வடமொழியில் உள்ளன.இவற்றை நம் அறிவுப் பரப்பின் இரு கண்களாகப் போற்றிய தமிழ் வடமொழி என்ற இரண்டில் ஒன்றான வடமொழியிலிருந்து பெற்றுக் கொள்ளும்போது வேறுபாட்டுணர்வுக்கு இடமில்லை,இந்த இடத்தில் அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை ஆயினும் ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ என்று சாமிநாத தேசிகர் கூறும்போது வடமொழியும் நம் புலமை மரபைச் சார்ந்தது என்று வற்புறுத்துவதே நோக்கமாக இருக்கவேண்டும்.மேலும் அவர் ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் என்று சொல்லும்போது தமிழுக்குச் சிறப்பெழுத்து ஐந்து என்று வீண்பெருமை பேசுபவர்களை நோக்கிய நையாண்டியாகவே கருதவேண்டும்,தமிழின் பெருமை இந்த ஐந்தெழுத்து மட்டுந்தானா?அப்படிச் சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.இதுவே என் கருத்து என்பது பட அவர் கருத்தை நாம் விளக்கலாம்.அமிழ்தினும் இனிய தமிழ்மொழி என்றும் தேவாரம் திருவாசகம் முதலிய நூல்கள் தெய்வப் பெற்றியன என்றும் பேசுபவர் தமிழை இழிவுபடுத்தும் நோக்கில் பாடியிருப்பாரா?உண்மை அறியாது உணர்வு வழிப் பிறழ உணர்ந்து கூறும் கூற்றுக்களை நையாண்டி செய்யவே இப்படிக் கூறியிருக்கவேண்டும். 
வடமொழி அறிவுமொழியாகத் தமிழர்க்கு மாறித் தமிழின் புலமை மரபுக் களங்கள் சுருங்கிய வேளையிலும் இலக்கியம் கலைத்துறைகளில் தமிழ் தள்ளாடியாவது தன் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது.தமிழ் நாட்டில் புலமை மரபில் இருமொழியச் சூழல் தோன்றிவிட்டது.வரலாற்றுக் காரணங்களால் மொழி வழக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.இவற்றை எல்லாம் கவனித்து இலக்கண ஆசிரியர்கள் இலக்கணம் எழுத வேண்டிய நிலை,இந்த முறையில் வீரசோழியம் முயன்றிருக்கிறது.தேங்கிப் போன தமிழ் இலக்கண மரபில் தன் வடமொழிப் பயிற்சி அம்மொழி சார்ந்து கிடைத்த பிற துறை அறிவுகள் ஆகியவற்றை அவர் தன் வயப்படுத்திப் புதுமை படைக்க நினைக்கிறார்.காஞ்சிபுரத் தமிழரான தண்டியின் அணி இலக்கணத்தை அவர் தமிழுக்கு மாற்றும்போது வடமொழி வழி வெளிப்பட்ட ஒரு தமிழரின் அறிவை மீண்டும் தமிழாக்குவதாகவே நோக்க வேண்டும்,வடமொழிக் கருத்தைப் புகுத்தியதாகக் கொள்ளலாகாது.தொல்காப்பியருக்குப் பிறகு தனித்தமிழாசிரியர் யாரும் ஆராய்ந்து அணி இலக்கண வளர்ச்சிக்கு ஆக்கம் செய்யாமற்போனது தமிழ்ப் புலமை மரபின் தேக்க நிலையையே காட்டுகிறது.
மேலும் மொழி வளர்ச்சி இருமொழியம் இரட்டை வழக்கு நிலை போன்றவற்றை ஆராய அவர் மேற்கொண்ட முரண் புடைமாற்று இலக்கண வருணனை முறை வடமொழி ,பிராகிருத இலக்கண நூல்களில் காணப்படும்முறைதான் என்பதை நோக்கும்போது மொழிக்கு அப்பாற்பட்ட இலக்கண ஆராய்ச்சி முறைகள் பரவலாக வழக்கிலிருந்ததை உணர்கிறோம்.
தமிழ் இலக்கண மரபில் தமிழில் தோன்றிய இரட்டை வழக்கு நிலையை ஏற்று அதை முறைப்படுத்தும் இலக்கண முயற்சிகள் இல்லாமையாலேயே பிற்காலத்தில் தமிழ் மொழிக் கல்வி வெறும் இலக்கிய மொழிக் கல்வியாக அமைந்து நடைமுறை மொழிக்கு ஆக்கம் சேர்க்காமல் போய் இன்றைய மொழிக் கல்வியின் தரவீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டதோ என்று எண்ணவேண்டியுள்ளது.
இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பொதுமைப்படுத்தல் கோட்பாட்டாக்கம் நேர்முகச் சோதனை முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விதிவருமுறையில் அமையும் ஆராய்ச்சிப் பாங்கும் ஒப்புமை ஆராய்ச்சி முறைகளும் ஆகும்.இம்முறை இன்றைய அறிவியல் நெறிமுறையாக விளங்குகிறது.இம்முறைகள் நம் நாட்டிலும் பழங்காலத்தில் இருந்தாலும் இம்முறையில் அறிவியல் துறைகளை விளக்கும் கோட்பாட்டு நூல்கள் குறைவே.இம்முறைகளில் உருவான ஆராய்ச்சிப் படைப்புகளே நமக்குக் கிடைக்கின்றன.தொல்காப்பியம் என்ற இலக்கணப் படைப்புத்தான் நமக்குக் கிடைக்கின்றதே ஒழிய அவர் தம் படைப்புருவாக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள்(சித்தாந்தம்,மதம்(கொள்கை) ஆய்வு முறைகள போன்றவற்றைப் பற்றி மறைமுக வடிவில் அல்லாமல் நேரடியாக ஒன்றும் நமக்குத் தெரியாது.ஆனால் இன்றைய மொழியியல் என்பது இந்திய ஒலியியல் பாணினி போன்றோரின் இலக்கண நூல்கள் போன்றவற்றை ஆராய்ந்ததால் கண்ட கோட்பாடுகள் ஆய்வு முறைகள் போன்றவற்றைப் பிழிந்தெடுத்துத் தோன்றுகிறது.இது போல நம் மொழிகளில் அறிவியல் துறைகளில் ஏன் வளர்ச்சிகள் ஏற்படவில்லை என்பது ஆராய்தற்குரியது.நம் மரபு சார் மருத்துவம் போன்றவற்றில் பழையனவன்றிப் புது முறைகள் மருந்துகள் தோன்றாதது ஏன்?இது தேக்க நிலையல்லவா?
இப்போக்கில் இன்றும் நம் அறிவுத்துறைகளில் குறிப்பாக இலக்கிய இலக்கணத்துறைகளில் அதிகம் நடைபெறவில்லை(செ.வை.சண்முகம் போன்றோர் கோட்பாட்டு நூல்கள் விதி விலக்கு).தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி முயற்சிகள்   விதிவிளக்க முறையாகவே தேங்கிப் போய்விட்டதால் புத்தாக்கம் இல்லாத கிளிப்பிள்ளை மரபாக  மாறிவிட்டது,இன்றைய மொழியியல் ஆராய்ச்சியின் தொடர்புகளால் விதிவருமுறையைப் பின்பற்றும் போக்கு மொழியியல் ஆராய்ச்சிகளில் காணப்படுகிறது.ஆனால் மரபிலக்கணத்தை மட்டும் பின்பற்றுவோர் பெரிய புத்தாக்கம் எதையும் செய்யவில்லை.வெறும் விளக்கவுரைகள்தான் மிச்சம்.இன்றை மொழி இலக்கணம் இலக்கியத்திறனாய்வு போன்றவற்றில் புதுமைகள் படைக்கவேண்டும் எனில் மொழியியல் தருக்கம் தத்துவம் போன்ற துறைகளின் தொடர்பு தேவை.அதற்கேற்பத் தமிழ்க் கல்வி முறை முற்றாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.
       மேலே குறிப்பிட்ட இன்றைய அறிவியல் முறையின் இன்னொரு பண்பு நிகழ்வுகளின் பிழிவாக அமையும் சாரத்தைக் கோட்பாடாகப் பொதுமைப்படுத்தி அமைத்துக் கொள்வதோடு நிகழ்வுகளின் கூறுகளை நுட்பமாக ஆராய்தல் என்பது.இன்றைய வேதியியல் துறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.வேதிப் பொருட்களின் வேதி அமைப்பு சிறப்புப் பண்புகள் என்று நுட்பமான பகுப்பாய்வு முறைகளின் மூலம் பொருட்கள் நிகழ்வுகள் போன்றவற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது அத்துறை சார்ந்த தூய அறிவு நமக்குக் கிடைக்கிறது. அத்துடன் அவ்வத்துறை அறிவுகளை பயன் முறைக்குக் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை உருவாக்கல் என்ற முறையிலும் இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தோடு கைகோர்த்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது. இது போன்றே இயற்பியல் போன்ற எல்லா அறிவியல் துறைகளிலும் பிற மானிடவியல் துறைகளிலும் அறிவியல் ஆராய்ச்சி நடைபெறுகிறது.இந்த அறிவியல் தொழில் நுட்ப முறையே இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றது.இலக்கணம் மொழி போன்ற துறைகளில் இம்முறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றதால் மொழியியல் என்ற துறை தோன்றுகிறது.இன்றைய மொழியியல் துறையில் ஒலியியல் உருபனியல் தொடரியல் சொற்பொருண்மையியல் போன்ற உள் துறைகள் வளர்ச்சிக்கு வடமொழியில் சிட்சை(ஒலியியல்) நூல்கள் பாணினி பர்த்ருஹரி போன்றவர்கள் நூல்கள் தந்த கருத்துக்களை மேலே சொன்ன அறிவியல் முறையில் ஆராய்ந்ததால் இத்துறை உருவாயிற்று என்று மொழியியல் வரலாறு கூறுகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது நமது நாட்டில் முற்காலத்தில் இன்றைய அறிவியல் முறையின் கூறுகள் இருந்தன என்பதும் அவற்றை நாம் மேலைக் கல்வி முறை கற்று புதுப்புது அறிவியல் துறைகளாக மாற்றுவது அதற்குத் தக்க தொழில் நுட்பத்தை உருவாக்கல் போன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லை என்பதும் ஆகும். வடமொழி இலக்கணம் தத்துவம் தர்க்க நூல்களில் காணப்படுவது போன்ற கோட்பாட்டு ஆராய்ச்சிகள் தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை.மேலும் அவை சார்ந்த வளர்ச்சிகளும் வடமொழி நூல்களின் தொடர்பின்றித் தமிழில் தனியாகத் தோன்றவில்லை.தமிழில் தொல்காப்பியம் போன்றவை  தமிழில் இருந்த அறிவியல் முறைகளின் விளைவாகத் தோன்றிய படைப்புகளாகும்.அவற்றை சோப்புக் கட்டி போன்ற உற்பத்திப் பொருளாகச் சொல்லலாம்,ஆனால் அது உருவாகக் காரணமாக இருந்த கோட்பாடுகள் பகுப்பாய்வு முறைகள் யாவை? இவற்றைக் கண்டுபிடிப்பதில் நம் கவனம் செல்ல வேண்டும். பி.சா.சாத்திரி, தெ.பொ.மீ, வ.ஐ.சுப்பிரமணியம், செ.வை.சண்முகம் ச.இராசாராம் குளோறியா சுந்தரமதி,இந்திரா போன்றோர் முயற்சிகள் இத்துறையில் பாராட்டத்தக்கவை.இலக்கணம் மொழியியல் துறையில் போலவே யாப்பு அணி பொருள் போன்ற துறைகளில் தொல்காப்பியர் உருவாக்கிய படைப்புக்குக் காரணமாக அவ்வத்துறைக் கோட்பாடுகள் யாவை? ஆய்வு முறைகள் யாவை என்பது பற்றிய ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.இதற்கு வடமொழி நூலறிவு இன்றைய மேற்கத்திய அணுகு முறைகள் இவற்றில் பயிற்சி இருந்தாலே இதை மேற்கொள்ள முடியும்.
       தமிழ்ப் புலமை மரபில் வடமொழி வழி வந்த அறிவுத்தாக்கம் பற்றி நாம் கொஞ்சம் அறிவோம்.அது போன்றே தமிழரல்லாதார் பங்கு இதில் எத்தகையது?அகத்தியர்,திருமூலர் பற்றிய கதைகள் அவர்கள் பிற பகுதிகளிலிருந்து வந்து தமிழ்ப் புலமை மரபை வளப்படுத்தியதன் அடையாளங்களா?சமண முனிவர்களில் பலரும் தமிழரல்லாதாரும் இருந்திருக்கலாம்.ஆனால் ஐரோப்பியர் வரவிற்குப் பின் தமிழியல் புலமை மரபில் தமிழரல்லாதார் பங்கு வெளிப்படையாகத் தெரிகிறது.வீரமாமுனிவர் உவின்சுலோ கால்டுவெல் என்று நீளும் ஐரோப்பியப் புலமை மரபின் அறிவுப் பணிகள் தமிழியல் ஆய்வுப்போக்குகளை நம்மவர் பணிகள் வளப்படுத்தியதை விட மேம்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.இன்றும் இப்போக்கு வளர்ந்து ஐரோப்பா ஜப்பான் என்று உலகெங்கும் உள்ள அறிஞர் கூட்டம் தமிழாய்வைப் பெரிதும் தமதாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.இன்றைய உலக மயமாதலில் அறிவியல் துறை சார்ந்த அறிவுகளும் தொழில் நுட்பமும் பிறவும் மொழி நாடு கடந்து நிற்பதைப் போல இன்றைய தமிழியல் போன்ற தமிழர் தனியாண்மை செலுத்த வேண்டிய துறைகள் நம்மை விட்டு நழுவி உலக மயமாகிவிட்டன.இங்கே நம் இருப்பையும் வலிமையையும் நிலைநாட்டவேண்டிய கடமை நமக்கு உண்டு.அதற்கு ஏற்ற கல்வி முறை பயிற்சி முறை அவை எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான அணுகுமுறை போன்றவற்றை நாம் கைக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இல்லாவிட்டால் நம் புலமை மரபு பாமரமாய் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுப் பெயரளவில் சிறுத்துப்போய்விடாதா? 

Thursday, June 23, 2011

Check out what I drew on Doodle Buddy

I just drew this on Doodle Buddy. With Doodle Buddy you can create awesome drawings on tons of backgrounds and even use cool stamps. Doodle Buddy is available for iPhone, iPod touch and iPad. Check it out at www.pinger.com.




Sent from my iPhone

தனிப்பாடல்

வெள்ளத்தாற் போகாது, வெந்தழலால் வேகாது, வேந்தரால்
கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது, காவலோ மிகவெளிது, கல்வியென்னும்
உள்ளத்தே பொருளிருக்க, உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதேனோ!

Pondicherry beach

Wednesday, June 22, 2011

Google Translation 3


வணக்கம்
ஒரு ஆங்கிலக் கவிதையை கூகுள் எப்படித் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது பாருங்கள் .
ரவிக்குமார் 



I would like my love to die

by Jennifer Franklin, guest-edited by Emily Fragos November 2010
               after Beckett
I would like my love to die
Or at least that I didn’t love you
So much. If I could turn my heart
To winter, I wouldn’t need to do this
To the earth. If you didn’t smile
In your sleep or touch my face
With tenderness, I could walk away
From you when you left through
The trap door of my hosta-lined heart
Without looking back. I wish I didn’t love
You so much. I would like my love to die
So I wouldn’t have to murder everything
Around me. So I wouldn’t have to be
The hunter I have become. But you’re
Not going to release me from your unnatural
Embrace. You pin me beside you with your
Thin arm around my neck. It doesn’t look
Strong enough to hold a small animal; but it is.
 
 
 
நான் என் அன்பு இறக்க பார்க்க விரும்புகிறேன்
அல்லது குறைந்த பட்சம் நான் உனக்கு காதல் இல்லை என்று
நிறைய. நான் என் இதயத்தை இயக்க முடியும் என்றால்
குளிர்காலத்தில், நான் இதை செய்ய வேண்டும் என்று
பூமிக்கு. நீ புன்னகை இல்லையெனில்
உங்கள் தூக்கத்தில் அல்லது என் முகத்தை தொடர்பிலிருக்க
மென்மை, நான் விலகி நடக்க முடியும்
நீங்கள் உங்களை மூலம் வெளியேறினீர்கள் போது
என் hosta-வரிசையாக இதயம் விழுதுவிடுவர் கதவை
திரும்பி பார்த்து இல்லாமல். நான் காதல் இல்லை விரும்புகிறேன்
நீங்கள் நிறைய. நான் என் அன்பு இறக்க பார்க்க விரும்புகிறேன்
அதனால் நான் எல்லாவற்றையும் கொலை செய்ய வேண்டும் என்று
என்னை சுற்றி. அதனால் நான் இருக்க வேண்டும் என்று
வேட்டைக்காரர்கள் நான் மாறிவிட்டன. ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள்
உங்கள் இயற்கைக்கு மாறான என்னை விடுதலை போவதில்லை
தழுவுங்க. நீங்கள் உங்கள் உங்களுக்கு அருகில் என்னை முள்
என் கழுத்தில் மெல்லிய கை. அது இல்லை

ஆனால் இது ஒரு சிறிய விலங்கு நடத்த போதுமான வலுவான.

Google Translation

Dear JLC
In continuation of our conversation about translation i read again Umberto Eco's book ' Mouse or Rat ? Translation as Negotiation' (Phoenix, 2004 today morning . He discussed the problem of machine translation in the first chapter ( the plants of shakespeare) itself. He explained his experience with a website called http://babelfish.altavista.com . I want to quote a few lines of Eco here:

 " In order to understand a text , or at least in order to decide how it should be translated , translators have to figure out the possible world pictured by that text. Often they can only make a hypothesis about that possible world. this means that a translation also the result of a conjecture or of a series of conjectures. once the most reasonable conjecture has been made, the translators should make their linguistic decisions accordingly ."  (page 20) 

surprisingly i have seen the news and subsequently the mail of Mr Ganesan about the google translate in the evening. Immediately i have tried with my poem. I have repeated in Tamil what Eco did with Italian. I too agree with some of the members, google can improve. But it is not a problem of google. " translation is not only concerned with such matters as 'equivalence' in meaning, it is also concerned with the more or less indispensable 'equivalences' in the substance of expression." I think a machine can not translate a poem correctly.

Ravikumar   

கூகுள் மொழிபெயர்ப்பு


வணக்கம்
கூகுள் இன்றுமுதல் மொழிபெயர்ப்பு வசதியைத் தமிழுக்கும் வழங்கியிருக்கிறது என்ற செய்தி  அறிந்து ஆவலுடன் என்  கவிதை ஒன்றை அதில் இட்டு மொழிபெயர்க்கச் செய்தேன். எந்திரம் செய்த மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது பாருங்கள் .




கண்களுக்குள் உருளும்
நட்சத்திரங்களை
சேகரிக்க
உன்னுள் பயணித்தேன்
வனங்களில் நுழைந்து
மேகங்களில் மிதந்து
மலைகளில் ஓய்வெடுத்துத்
தொடர்ந்தேன் தேடலை


கண்ணீர்த் துளிகள்
பனித் துகள்களாய்ச் சிதறி
போர்வைகள் ஜொலித்தன


தோட்டத்துச் செடிகளும்
கொடிகளும்
ஜன்னல் வழியே
அறைக்குள் இறங்கின


நாம் ஒளிந்து விளையாடிய
ஆறு
கூரையைத் திறந்து
மழையாய்ப் பொழிந்தது


உன்
தலைக்குக் கீழே
நசுங்கிக் குலைந்து
மீந்துகிடக்கிறது இரவு
பால்குடிக்கும் குழந்தையைப்போல்
பசித்து அழுகிறது நிலவு



Rolling eyes
Stars
Collect
Traveling in.
Into forests
Floating in the clouds
Oyvetuttut Mountains
Search followed


Tear
Scattered ice tukalkalay
Jolittana warmers


Courtyard Plants
Kotikalum
Through the window
Spend down


We played hide-and-
Six
Open roof
Rainfall microwave and CD


Your
Below head
Collapse crushed
Mintukitakkiratu night
If the kulantaiyaippe palkuti
The moon is crying, hungry

Tuesday, June 14, 2011

கச்சத்தீவை மீட்க முடியுமா? ரவிக்குமார்





       மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. 2008 ஆகஸ்டு மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்சனையை இந்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்சனையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்சனை எப்படி உருவானது?அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க அப்போது அதை எதிர்க்கவில்லை என சொல்லப்படுவது உண்மைதானா? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
       ’எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறைகளால் ஆனது’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.அந்த கச்சத்தீவுப் பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.1921ஆம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது.அப்போது இந்தியா இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும்  பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரத்து ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை  ஏற்றுக்கொண்டபோதிலும், ராமநாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று இந்தியப் பிரதமராக இருந்த  இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகேவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘‘இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை’’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் ’இந்திய&இலங்கை கப்பல்கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை.
இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதத்தில் ‘‘இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது’’ எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.
கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. அப்போது அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்சனை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். ‘‘இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் ஒரு பகுதியை எந்த வரைமுறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.’’ என்று இரா.செழியன் பேசினார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரீகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துக்கொண்டது இல்லை.’’ என்று பேசினார் நாஞ்சில் மனோகரன். ‘‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைப் பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது நமது ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்’’ என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர் ‘‘கச்சத்தீவு எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது ராணுவத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டு வந்து இப்போது குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினைதான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்’’ என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தார்.
பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப் ‘‘1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அந்த ஆவணங்களைப் படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்’’ என்று பேசினார்.
ஒரிசா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ்: ‘‘நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சியினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னால் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நமது நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்கு பிறகு என்ன மிச்சம் இருக்கும்.’’ என்று கேள்வி எழுப்பினார்.
ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாயி கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனரென்றும் பேசினார்.அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜய்ன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படியான சம்பவங்களு’குப் பிறகுதான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் அவையில் அறிக்கையை வாசித்தார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.’’ என்றார் அவர்.
அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் தமது கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ‘‘மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921ஆம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை மைல் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம். அதற்கு கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவை சுற்றிச் சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களது வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே இந்திய&இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப்படும்’’ என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடையூறின்றி தொடர்ந்தது.ஆனால் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
        ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987ஆம் ஆண்டு இந்திய& இலஙகை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ‘ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்’ இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதை பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளை பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்துக் காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது?
’கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது’ எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.


ஜூனியர் விகடன், ஜூலை - 2008

Wednesday, June 8, 2011

ரவிக்குமாரின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா




09.06.2011 மாலை 6 மணி 

ஓட்டல் ராம் இண்டர்நேஷனல், பாண்டிச்சேரி

நூல்களை வெளியிட்டு சிறப்புரை

எம்.எஸ்.எஸ். பாண்டியன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் , புது தில்லி

நூல் அறிமுகம்

பேராசிரியர் க.பஞ்சாங்கம்
பேராசிரியர் பா.கல்விமணி
பேராசிரியர் பக்தவத்சல பாரதி
பேராசிரியர் ஆர்.அழகரசன்
கவிஞர் தலையாரி
கு.மு.ஜவஹர்
டாக்டர் சங்கரன்

வெளியிடப்படும் நூல்கள்:

1. காற்றின் பதியம் - ரவிக்குமார் கட்டுரைகள்

2. கடல்கொள்ளும் தமிழ்நாடு - சூழல் மற்றும் சுகாதரம் குறித்த ரவிக்குமாரின் கட்டுரைகள்

3.காணமுடியாக் கனவு - ரவிக்குமாரின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்

4. எல்.இளையபெருமாள் - வாழ்வும் பணியும் - ரவிக்குமார் 

5. சொல்லும் செயல் - ரவிக்குமாரின் சட்டமன்ற உரைகள்

6. சுவாமி சஹஜானந்தா - பேரவையிலும் மேலவையிலும் ஆற்றிய உரைகள்- தொகுப்பும் பதிப்பும் ரவிக்குமார் 

7. வரலாறு என்னும் கதை - எடுவர்டோ கலியானோ - தமிழில் ரவிக்குமார் 

8. வலசைப் பறவை - மொழிபெயர்ப்புக் கவிதைகள்- தமிழில் ரவிக்குமார்

9.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் - எட்வர்ட் செய்த் - தமிழில் ரவிக்குமார் 

10. உரையாடல் தொடர்கிறது- மிஷேல் ஃபூக்கோ, எட்வர்ட் செய்த், க்ளோத் லெவிஸ்த்ராஸ், அகஸ்தோ போவால், அம்பர்த்தோ எக்கோ, காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் ஆகியோரின் பேட்டிகளும் படைப்புகளும் - தமிழில் ரவிக்குமார் 

Thursday, June 2, 2011

‘செல்’ லும் கொல்லும்?




செல் போன்களில் எடுக்கப்படும் ஆபாச காட்சிகள் மாணவர்களிடையே எம்.எம்.எஸ் மூலம் பரப்பப்படுவது குறித்து அடிக்கடி நாளேடுகளில் வெளியாகும் செய்திகளால் பதற்றமடைந்திருந்த பெற்றோர்கள் இப்போது கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.பள்ளிகளுக்கு செல்போனை எடுத்துவரக் கூடாது எனத் தமிழக அரசு விதித்துள்ள தடை பலரிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.சமீபமாகத் தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளில் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகாதது இதுமட்டும்தான் என்று சொல்லலாம். எஸ்.எம்.எஸ், கேம்ஸ், பாட்டு,காமிரா போன்ற செல்போனின் கூடுதல் வசதிகளால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு அவர்கள் சீரழிவதாகக் கவலைப்பட்டவர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.இந்த சிறப்பான ஆணையை வெளியிட்டதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை மனமாரப் பாராட்டுவோம்.
 சமீபத்தில் கர்நாடகாவிலும்கூட இதேபோன்ற தடை நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும்கூடப் பள்ளிகளுக்கு செல்போன்களைக் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.மீறினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில்கூடப் பள்ளிகளில் இவ்விதமான தடை உள்ளது. அங்கே பள்ளி நுழைவாயிலில் ‘மெட்டல் டிடெக்டரை’ வைத்து செல்போன்களைக் கைப்பற்றுகிறார்கள். செல்போன்கள் மட்டுமின்றி ஐ போடுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் பள்ளிகளில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்தக் கட்டுப்பாட்டை இரண்டுமுறை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்கிறது நியூயார்க் மாகாணச் சட்டம்.முதலில் இதற்கு அங்கே கடும் எதிர்ப்பு வந்தது,பின்னர் அடங்கிவிட்டது.
இந்தியாவில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். 2006 மே மாதத்தில் 10 கோடியாக இருந்த செல்போன் இணைப்பு செப்டம்பர் 2007இல் 20 கோடியைத் தாண்டிவிட்டது. 2010ஆம் ஆண்டில் இது ஐம்பது கோடியை எட்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக செல்போன் இணைப்புப் பெறுபவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், மாணவர்கள் ஆவார்கள். ஆகஸ்ட் 2007 புள்ளிவிவரப்படித் தமிழ்நாட்டில் உள்ள செல்போன் இணைப்பு ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சமாகும். இது தவிர சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 54 லட்சம் இணைப்புகள் உள்ளன.
செல்போன்களில் காமிரா வசதி ஏற்படுத்தப்படட பிறகு அதனால் புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. மெமரி கார்டில் ‘ஆபாசப் படங்களை’ப் பதிவுசெய்து மாணவர்களுக்கு விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துவருவதைச் செய்திகள் புலப்படுத்துகின்றன. சமீபத்தில் பண்ருட்டி என்ற சிறு நகரத்தில் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் பிடிபட்டது.மாநகரங்களில் மட்டுமின்றி இந்த சமூகத் தீங்கு சிற்றூர்களுக்கும் பரவிவருவதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
செல்போனைப் பயன்படுத்துவதால் ஒழுக்கரீதியான பிரச்சினை மட்டும்தான் உருவாகிறது என்று எண்ணுவது தவறு. அது உடல் நலத்தைப் பாதிக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. செல்போன்களின் அடிப்படையாக இருக்கும் ரேடியோ அலைகள் எக்ஸ்ரே கதிர்களைப் போலவோ அல்லது காமா கதிர்களைப் போலவோ தீங்கு விளைவிப்பவை அல்ல என்று கூறியுள்ள அந்த நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ரேடியோ அலைகளால் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்ததாகவும் அதன்மீது கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.தொடர்ந்து செல்போன்களை உபயோகிப்பதால் மூளை செயல்பாட்டிலும் தூங்கும் முறைகளிலும் மாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.செல்போனின் அபாயம் முழுதாகத் தெரியாத போதிலும்கூட “எலக்ட்ரோ மேக்னடிக்” கதிர்வீச்சால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து முன்னெச்சரிக்கையாகச் சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் அப்படி எந்தவொரு நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இப்போதுதான் டெலிகாம் துறைக்கு உட்பட்ட “டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங் சென்டர்” (ஜிணிசி) வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஒரு வரைவைத் தயாரித்திருக்கிறது.
செல்போன்களை விடவும் செல்போன் டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவை.செல்போன்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளைவிட இந்த டவர்களிலிருந்து வெளிப்படும் அலைகள் அதிக சக்திவாய்ந்தவை.அதனால்தான் ‘மேக்ரோ ஆன்டெனா’ என அழைக்கப்படும் அந்த டவர்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கக் கூடாது; குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கக் கூடாது; அந்த டவர்களுக்கு அருகில் அதற்கான பணியாளர்கள்கூட அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செல்போன்களை உபயோகிப்பது குறித்தும் அதில் சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன. பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் அது எளிதில் பாதிக்கப்படும். எனவே பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ’இண்டிபென்டன்ட் எக்ஸ்பர்ட் குரூப் ஆன் மொபைல் போன்ஸ்’(இஎக்ம்ப்) என்ற குழு தயாரித்தளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களிலிருந்து மேற்கண்ட தகவல்களை நமது டெலிகாம் துறையினர் எடுத்தாண்டுள்ளனர்.
.செல்போனைப் பயன்படுத்தும்போது எவ்வளவு எலெக்ட்ரோ மேக்னட்டிக் கதிர்வீச்சு நமது உடலில் உள்வாங்கப்படுகிறது என்பதை எஸ்.ஏ.ஆர் (sஜீமீநீவீயீவீநீ ணீதீsஷீக்ஷீஜீtவீஷீஸீ க்ஷீணீtமீ)என்ற அளவீட்டால் குறிக்கிறார்கள்.ஒரு குறிப்பிட்ட செல்போனின் எஸ்.ஏ.ஆர் அளவு எவ்வளவு என்பதை ஒவ்வொரு மொபைல் போனின் திரையிலும் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட அளவு 2 ஷ்/ளீரீ என்பதாகும்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செல்போன்கள் இந்த அளவுக்கு உட்பட்டே இருக்கின்றன.அதனாலேயெ இந்த செல்போன்கள் பாதுகாப்பானவை எனக் கூறிவிடமுடியாது.ஏனென்றால் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதனால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை.குறைவான எஸ்.ஏ.ஆர் உள்ள போன்கூட அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
செல்போனை உபயோகிப்பவர்கள் அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது,நேரடியாக போனைக் காதில் வைத்துப் பேசுவதைவிட ஹெட் போனைப் பயன்படுத்துவது நல்லது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.செல்போனில் தொடர்ந்து பேசும்போது உருவாகும் வெப்பம் செவியின் கேட்கும் சக்தியை பாதிக்கும்.சிக்னல் பலவீனமாக இருக்கும்போதும், அறைக்குள்ளிருந்து பேசும்போதும் செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகிறது.எனவே அப்படியான நிலைகளில் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.செல்போனைப் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்துவைப்பது நல்லது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பேஸ்மேக்கர்,ஹியரிங் எய்டு முதலிய கருவிகளைப் பயன்படுதுபவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது.மருத்துவமனிகலில் செல்போனைப் பயன்படுத்தினால் அங்குள்ள உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்த வரைவு அறிக்கையில் கூறியுள்ளனர்.இந்த நெறிமுறைகள் இன்னும் நமது நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. அதற்குள்ளாகவே இதற்கு மொபைல் கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.இவற்றை ஏற்க முடியாது என அந்த கம்பெனிகள் கூறிவருகின்றன.
செல்போன்களால் வரும் ஆபத்துகளைப் பார்க்கும்போது பள்ளிகளில் மட்டுமல்லாது பொதுவாகவே சிறுவர்கள் செல்போன், ஐ போட் முதலான எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமான கட்டுப்பாடுகளை நமது நாட்டிலும் கொண்டுவருவது நல்லது எனத் தோன்றுகிறது. இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். டெலிகாம் என்ஜினியரிங் சென்டரின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்போன் கம்பெனிகளின் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.குடியிருப்புகளின் மாடிகளிலெல்லாம் இப்போது செல்போன் டவர்கள் நிறைந்துள்ளன.இது மிகவும் ஆபத்தானதாகும்.அவற்றின் கிழே அதிக அளவில்கதிர்வீச்சு காணப்படுகிறது.எனவே அப்படி அமைக்கப்பட்டுள்ள டவர்களை அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் அவற்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்போன் டவர்களை மருத்துவமனைகளுக்கு அருகிலும்,பள்ளிகளின் அருகாமையிலும் கண்டிப்பாக அமைக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.நூறு வாட் வரை சக்திகொண்ட இத்தகைய டவர்கள்வெளிப்படுத்தும் ரேடியோ அலைகள் பக்கவாட்டுத் திசையில் அகன்று பரவக்கூடியவை.எனவே அத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக முள்கம்பி வேலி அமைத்து எச்சரிக்கை செய்யும் விதமாக அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
செல்போன்களைத் தடை செய்யும்போது மாணவர்களின் படிப்பு பாழாகிறது,அவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதுபோன்ற காரணங்களை விடுத்து உடல் நலத்தை மையப்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.அப்படிஇந்தப் பிரச்சனையை அணுகினால் செல்போன்களைத் தடை செய்வதைவிடவும் செல்போன் டவர்களை முறைப்படுத்துவதே முதன்மையானது என்பது புரியவரும்.தற்போது நமது நாட்டில் செல்போன் தொழிலில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தத்தமது நாடுகளில் இத்தகைய நெறிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.ஆனால் இங்கே மட்டும் எந்தவொரு விதிமுறைக்கும் கட்டுப்பட மறுக்கின்றன.இங்குள்ள மக்களின் உடல் நலம் குறித்து அவர்களுக்கு எப்படி அக்கறை ஏற்படும்?அதை நமது அரசாங்கம்தான் வலியுறுத்தவேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களை மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பது நல்லதுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்கள் குறித்த எச்சரிக்கை அரசுக்குத் தேவை. இப்போதும்கூட கணிசமான அளவுக்கு படிப்பறிவு இல்லாத மக்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் தொழில்நுட்ப வசதிகளின் அனுகூலத்தை மட்டுமின்றி அபாயத்தையும் எடுத்துச் சொல்லவேண்டியது அரசின் கடமை.இன்றுள்ள மொபைல் கம்பெனிகளுக்கு லாபம் மட்டுந்தான் குறிக்கோள். இதில் கவனமாக இருக்க வேண்டியது அரசாங்கம்தான்.
 பள்ளிகளில் செல்போன் தடை என்பது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில்  முதல்படியாக இருக்கட்டும். மக்களின் உடல்நலத்தில் அக்கறை வைத்து செல்போன் நிறுவனங்களை முறைப்படுத்தும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதுகாபில்லாத இடங்களில் டவர்களை அமைத்துள்ள செல்போன் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.அதற்கான நிர்ப்பந்தத்தை விழிப்புணர்வு கொண்ட மக்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.

(20.10.2007 அன்று ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை.)