Wednesday, October 30, 2013

எஸ்.வி.ஆரை சந்தித்தேன் அ.மார்க்ஸை சந்திப்பேனா?


 

19 ஆம் நூற்றாண்டில் சென்னையிலிருந்து செயல்பட்ட ‘ இந்து சுயாக்கியானிகள் சங்கம் ‘ என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தத்துவ விவேஸினி, Thinker ஆகிய வார இதழ்களின் பிரதிகளை சேகரித்து அவற்றில் வெளியாகியிருந்த செய்திகளையும் கட்டுரைகளையும் ஆறு தொகுதிகளாகப் பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்து வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுமார் 3500 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுப்புகளின் வெளியீடு மற்றும் அது தொடர்பான இருநாள் கருத்தரங்கினை சென்னைப் பல்கலைக்கழகமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன(அக்டோபர் 29, 30 ) 29 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நான் கலந்துகொண்டு பேசினேன்.( எனது உரையை ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்கிறேன்).


பேராசிரியர் வீ.அரசு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு இந்தத் தொகுப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு நிறுவனம் செய்யும் பணியை அவர் செய்து முடித்திருப்பதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 19 ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவதற்காக ஒரு அமைப்பு இருந்ததையும் அது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரண்டு வார இதழ்களை நடத்தியதையும் அறியும்போது அறிவுத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடியான பணிகளைச் செய்த தமிழகத்தின் முக்கியத்துவம் புலப்படுகிறது. இந்தத் தொகுப்பு முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தாலும் அது வெளியாகியிருக்கும் தருணம் பொருத்தமானதாயிருக்கிறது. அந்த இதழ்கள் நடத்தப்பட்ட காலத்தில் இருந்ததைவிடவும் மோசமாக மதவாதக் கருத்துகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில் இந்தத் தொகுப்புகள் வெளியாகியிருப்பது மதவாதத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு உதவியாக அமையும். காலத்தால் செய்த இந்த உதவிக்காக மீண்டும் பேராசிரியர் வீ.அரசு அவர்களைப் பாராட்டுகிறேன்.


பல நேரங்களில் இப்படியான கருத்தரங்குகளில் நிகழ்த்தப்படும் உரைகளைவிடவும் கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது நீண்டநாட்களாக நாம் சந்திக்காமல் இருக்கும் தோழர்களை சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்பு முக்கியமானதாக நினைவுகூரத்தக்கதாகமாறிவிடும். நேற்றைய தினம் எனக்கு அப்படித்தான் அமைந்துவிட்டது. நேற்றைய கருத்தரங்கின்போது நான் தோழர் எஸ்.வி.ஆர் அவர்களைச் சந்தித்தேன். காலை அமர்வில் தோழர் வ.கீதா பேசிக்கொண்டிருந்தபோதுதான் நான் அரங்கத்துக்குப் போனேன். அமெரிக்காவிலிருந்து இங்குவந்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் மைக்கேல் காலின்ஸ் என்ற நண்பரும் என்னோடு வந்திருந்தார். வ.கீதா பேசிக்கொண்டிருந்தபோது மேடையில் பார்த்தேன் தமிழவனைப்போல தோற்றம்கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். கீதா பேசி முடித்தபோது மேடையில் அமர்ந்திருப்பவர் யார் என என்னிடம் மைக்கேல் காலின்ஸ் கேட்டார். நானும் தமிழவன் என்றே சொன்னேன். அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அது தமிழவன்போல இல்லையே என எனக்குள் ஒரு பொறி தட்டியது. அப்புறம் உன்னிப்பாகப் பார்த்தால் அது தோழர் எஸ்.வி.ஆர்! அவரது தலைமுடியின் தோற்றம்தான் என்னைக் குழப்பியிருக்கிறது. வ.கீதாவுக்குப் பிறகு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பேசி காலை அமர்வு முடிந்ததும் மேடைக்குச் சென்று தோழர் எஸ்.வி.ஆருடன் கை குலுக்கியபோது எனது குழப்பத்தைப் பகிர்ந்துகொண்டேன். அவர் தனக்கே உரிய நகைச்சுவையோடு “ நல்லவேளை தமிழவனைபோல இருக்கிறேன் என்று சொன்னீர்கள். அவரைப்போல பேசினேன் என சொல்லாமல் விட்டீர்களே” என்றார்.


தோழர் எஸ்.வி.ஆர் ஒரு அபூர்வமான மனிதர். இப்போது அவரைப் போன்றவர்கள் அருகிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். அவரளவுக்கு விரிந்த படிப்பு கொண்டவர்கள் புரிதல் கொண்டவர்கள் இன்றைய தலைமுறையில் இல்லை. செயல்பாட்டிலும் அவர் பலவற்றுக்கு முன்னோடி. தமிழ்நாட்டின் மார்க்சிய லெனினிய இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும், திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும், மனித உரிமை இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும் அவரைத் தவிர்த்துவிட்டு அவற்றை எழுதமுடியாது. தமிழில் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதிலும் அவரளவுக்கு இன்னொருவரை நாம் குறிப்பிடமுடியாது. உத்தரவாதமான வருமானமோ, ஆரோக்கியமான உடல்நிலையோ இல்லாத இன்றைய நிலையிலும் அவர் தனது சமூகப் பொறுப்பை உணர்ந்து அயராமல் எழுதிக்கொண்டிருக்கிறார்.


ஆழ்ந்த விமர்சனப் பார்வைகொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டார்கள் என்ற பொதுவான இலக்கணத்துக்கு நேரெதிரானவர் தோழர் எஸ்.வி.ஆர். அவர் அன்பு காட்டும்போது நமக்கு அம்மாவின் நினைவு வரும். அவர் கோபப்படும்போது நமக்கு நம் குழந்தையின் ஞாபகம் வரும். குழந்தையைப் போலவே வீம்பும் பிடிவாதமும் கொண்டவர்.


நானும் அவருமாகச் சேர்ந்துதான் மரணதண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள் சந்திப்பை சென்னையில் ஏற்பாடு செய்தோம். இரண்டாயிரமாவது ஆண்டு பிறந்த போது புத்தாண்டு தினத்தில் அவருக்குத் தொலைபேசி செய்து நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட புத்தாயிரம் குறித்த கற்பனாவாதத்தில் நான் என்னை மூழ்கடித்துக்கொண்ட நாள் அது.


பேராசிரியர் அ.ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளியான ஊடகம் என்ற சிற்றிதழில் யர்மோலா என்ற கற்பனையான சிந்தனையாளருடன் ஒரு நேர்காணலைப் பதிவுசெய்து வெளியிட்டிருந்தோம். அதில் பெரும்பாலான பகுதிகளை நான் எழுதியிருந்தேன். மிஷேல் ஃபூக்கோவை மனதில் வைத்து மார்க்ஸியம் மீதான சில கருத்துகளை அதில் பதிவுசெய்திருந்தேன். அவரை உண்மையான பாத்திரமெனக் கருதிக்கொண்டு தோழர் எஸ்.வி.ஆர் என்னிடம் கடுமையாக சண்டைபோட்டார். ”யார் அந்த முட்டாள் கிழவன்? கண்டபடி உளறியிருக்கிறான். வெளிநாட்டுக்காரனென்றால் யாரிடம் வேண்டுமானாலும் பேட்டி எடுப்பதா?” என்று கடிந்துகொண்டார். மார்க்ஸியத்தை ஆதரித்து அவர் வெளிப்படுத்திய சீற்றத்தை நான் மிகவும் மதித்து ரசித்தேன். 


சென்னையில் மிகவும் தோழமையோடு நான் அணுகிப் பேசக்கூடியவராக இருந்தவர் தோழர் எஸ்.வி.ஆர் மட்டும்தான். வீட்டுக்குப் போன நெரங்களில் அவரே தயாரித்து அளிக்கும் தேநீரின் சுவை இன்னும் நாவில் இருக்கிறது. அவரோடு பழகிய எவரும் அவரது விருந்தோம்பலை நினைவுகூராமல் இருக்கமாட்டார்கள். வயது வித்தியாசம் பாராமல் என்னிடம் தோழமை பாராட்டிய எஸ்.வி.ஆர் நான் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பெரியாரியம் குறித்து விமர்சிக்க ஆரம்பித்ததும் என்னோடான உறவை முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார். பெரியார் குறித்து ஆய்வு நூல்களை எழுதினாலும் அடிப்படையில் அவரை ஒரு மார்க்ஸியவாதியென்றே நான் கருதியிருந்தேன். அதனால் அவரது கோபம் எனக்கு வியப்பாக இருந்தது. நானும் வீம்பாக அவரோடு தொடர்புகொள்ளாமல் இருந்துவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்னர் அவரோடு மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். இடையில் இத்தனை ஆண்டுகள் தொடர்பற்று இருந்த எண்ணமே எழாதபடி இருந்தது அவரது பேச்சு.அவரைப் பார்ப்பதற்காகவே கோத்தகிரிக்குப் போகவேண்டுமென நினைத்திருந்தேன்.

 

நேற்று அவரை சென்னைக் கருத்தரங்கில் நேரில் பார்த்தபோது அவரை நீண்டகாலமாகப் பார்க்காமல் இருந்த உணர்வே எழவில்லை. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவை ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு கலாய்த்துக்கொண்டிருந்தார். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.ஆழ்ந்த விமர்சனப் பார்வையைப் போலவே அசாத்தியமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அவர். எந்தவித சம்பிரதாயங்களும் அவரிடம் தென்படாது.


நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எங்களது பழைய தோழரும் பேராசிரியருமான தெய்வசுந்தரம் அவர்களின் துணைவியார் முனைவர் பத்மாவதி அவர்கள் அங்கு வந்தார். என்னிடம் காட்டுவதற்காகத் தனது மகனின் திருமண ஆல்பத்தையும், எஸ்.வி.ஆரிடம் காட்டுவதற்கென்று அவரது கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் அவர் கொண்டுவந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எஸ்.வி.ஆரின் மடியில் குழந்தையாக அமர்ந்திருந்தார் தோழர் பத்மாவதியின் மகன். மிகவும் அபூர்வமான அந்தப் புகைப்படத்தை நான் எனது மொபைலில் படமெடுத்துக்கொண்டேன். இந்த சந்திப்புகளால் நேற்றைய தினம் என்றென்றும் நினைவுகூரத் தக்கதாகிவிட்டது.


கருத்தரங்கு முடிந்து ஊர் திரும்பும்போது வீ.அரசு அவர்களை ஃபோனில் கூப்பிட்டுப் பேசினேன். எங்களுக்கிடையே இருந்த பொதுவான ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். மதவெறியையும் சாதிவெறியையும் எதிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது எனக்கு ஆறுதலாக இருந்தது.


தோழர் எஸ்.வி.ஆரை மீண்டும் எப்போது சந்திப்பேன் எனத் தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவரைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமின்றி அவரது நல்ல பண்புகள் சிலவும் என்னிடம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அது உணமையாக இருக்குமேயானால் அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


இந்தக் குறிப்பை எழுதும்போது அ.மார்க்ஸின் நினைவு குறுக்கிடுகிறது. இதை ஒருவேளை அவர் படிக்க நேர்ந்தால் நிச்சயம் ஒருசில நொடிகளேனும் நெகிழ்ந்துபோவார் என நம்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் எஸ்.வி.ஆருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது நிறப்பிரிகை சார்பில் நாங்கள் இருவருமாகக் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை நண்பர்கள் சிலருக்கு அனுப்பினோம். ஒரு சிறு தொகையைச் சேர்த்து அதை தோழர் வ.கீதா மூலமாக அவரிடம் சேர்ப்பிக்கச் சொன்னோம். எஸ்.வி.ஆரின் நண்பர்கள் பலர் பெரிய உதவிகளைச் செய்ய முன்வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் நிறப்பிரிகை சார்பில் அளிக்கப்பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டதாகவும் கீதா என்னிடம் சொன்னார். அவர் எங்கள்மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக இருந்தது அது. அந்த நேரத்தில் அவர் ஆஞ்சியோ சிகிச்சையோடு குணமாகித் திரும்பிவிட்டார்.


எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ் முதலானவர்களோடு எனக்கு இப்போதும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் வேறுபாடுகளைவிட ஒற்றுமைகளே அதிகம் எனத் தோன்றுகிறது. சமூகத்துக்குக் கேடு விளைவிக்க விழையும் வலதுசாரி சக்திகள் தமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சேர்ந்து செயல்படுகிறார்கள்.ஆனால் சமூக மேம்பாட்டை விரும்புவோரிடம் அத்தகைய ஒற்றுமை இல்லாமல்போய்விட்டது. புறச்சூழலின் அபாயத்தைக் கருதியேனும் அந்த ஒற்றுமை உருவாக்கப்படவேண்டும். இந்திய அரசியல் வானில் மீண்டும் காவி இருள் கவிகிறது. அதற்கு வழிகாட்டுவதுபோல சாதி வெறி கனல்கிறது.அதை எதிர்கொள்ள தமிழகத்தில் கடப்பாடும் பொறுப்பும் மிக்க அறிவுஜீவிகள் நிறையபேர் தேவை. அதற்கு முன்னால் இப்போது இருப்பவர்களுக்குள் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. அ.மார்க்ஸ்,எஸ்.வி.ஆர் முதலான தோழர்களோடு இணைந்து பணியாற்றவேண்டுமென மனம் அவாவுகிறது. அத்தகைய ஒருங்கிணைப்பை உருவாக்கும் திசையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக இந்தக் குறிப்பு அமைகிறதா பார்ப்போம்!                

Monday, October 21, 2013

இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்!

dn

இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்!

  ரவிக்குமார்

மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. பாஜக இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்றபோதிலும், அடுத்த ஆட்சியை உருவாக்கும் பலம் மாநிலக் கட்சிகளின் கையில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதன் உற்சாகத்தைக் குறைக்கவே செய்திருக்கும். காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லை எனும் அளவுக்கு அதன் பலம் ஒவ்வொருநாளும் குறைந்துகொண்டே போகும் நிலையில், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது பா.ஜ.கவா அல்லது மாநிலக் கட்சிகளா என்ற வினா இப்போது முதன்மை பெற்றிருக்கிறது.
  வெளியாகிவரும் கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் 206 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 2014 தேர்தலில் 100 இடங்களைக்கூட தொட முடியாது என்ற நிலையே உள்ளது. அதற்கு முதன்மையான காரணம் 2009 க்குப் பிறகு அதன் ஆட்சிமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான்.
  கடந்த மக்களவைத் தேர்தலில் 206 இடங்கள் கிடைத்ததுமே அது தனிக்கட்சி ஆட்சி என்ற திமிரோடு செயல்பட ஆரம்பித்துவிட்டது. 2004 இல் செய்ததுபோல கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதிலோ, நல்ல ஆட்சியைத் தரவேண்டும் என்பதிலோ அக்கறை காட்டாமல் அதிகாரத்துவத்தோடு ஆட்சி நடத்த ஆரம்பித்துவிட்டது. கூட்டணி ஆட்சிக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தைக்கூட அது வகுக்கவில்லை. தான் எடுக்கும் கொள்கை முடிவுகளை வழிமொழிவதே கூட்டணிக்கட்சிகளின் தலைவிதி என்பதுபோல் அது நடந்துகொண்டது.
  பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட அதன் பொருளாதாரக் கொள்கைகளாலும்  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததாலும்  இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் பாகிஸ்தான்,சீனா ஆகியவற்றை மட்டுமின்றி இலங்கையைக்கூட எதிர்கொள்ள முடியாத பலவீனமான அயலுறவுக்கொள்கையாலும்  காங்கிரஸ் மட்டுமல்ல அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளும் பாதிப்புக்குள்ளாயின.
  கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி வாய்ப்பைக் கொண்டுவரக்கூடிய ஆளுமைகொண்ட தலைவர் எவரும் இப்போது காங்கிரஸில் இல்லை. காங்கிரஸ்காரர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றும் தலைவராக உருப்பெறவில்லை. தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கைவிட ராகுல் காந்தி பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர அவர் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் எனக் கருதவில்லை. ஊழலுக்கு எதிரான நேர்மையாளர் எனவும், கலகக்கார இளைஞர் எனவும் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக மத்திய அரசு கொண்டுவந்திருந்த அவசர சட்டம் குறித்து அவர் சொன்ன கருத்துகளும், அதைச் சொன்ன முறையும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகவே அமைந்துபோனது காங்கிரஸின் துரதிர்ஷ்டம்தான்.
  அனுபவம் வாய்ந்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு ராகுலை தலைவராக முன்னிறுத்தியதும் காங்கிரஸின் இன்னொரு தவறு என்று சொல்லலாம். பிரதமர் வேட்பாளரெனப் பேசப்பட்ட  பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக்கப்பட்டார். அந்த வரிசையில் வைத்து  ஊடகங்களால் பேசப்பட்ட ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே போன்றவர்கள் மூலமாகவே ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் எனப் பேச வைத்து அவர்களைப் போட்டியிலிருந்து காங்கிரஸ் விலக்கிவிட்டது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை இன்னும் பரம்பரை ஆட்சியைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது என்ற விமர்சனத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
  பாஜகவை ஆட்சியில் அமர்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடியாலும்கூட பாஜக ஆதரவு அலையை ஏற்படுத்த முடியவில்லை என்பதையே கருத்துக் கணிப்பு காட்டுகிறது. அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பாஜகவுக்கான ஆதரவு சற்றே உயர்ந்திருக்கிறது என்றபோதிலும் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கையை அது ஏற்படுத்தவில்லை.
  மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும்படியிலான அமைப்பு ரீதியிலான பலம் கிடையாது. சரியான கூட்டணி அமையாமல் ஒரு சில இடங்களில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலைமை. கூட்டணி அமைவதும் கூட சிரமமாகத் தோன்றுகிறது.
 தற்போது பாஜகவுக்குக் கிடைக்குமெனக் கணிக்கப்பட்டிருக்கும் 162 இடங்கள் என்ற எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. 1999 இல் வாஜ்பாய் தலைமையில் அந்தக் கட்சி ஆட்சி அமைத்த போதும்கூட அதற்கு 182 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள் 117 இடங்களைப் பெற்றன. இப்போதோ பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வெறும் 24 இடங்கள் மட்டும்தான் கிடைக்கும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
  கருத்துக் கணிப்பில் ஹரியானா, பிகார், கர்னாடகா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகபட்ச இடங்கள் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் வேண்டுமானால் ஒரு சில இடங்கள் கூடலாம். ஆனால் அங்கு தனது இடங்களை அதிகரிக்கும் நோக்கில் முஸôஃபர்நகரிலும், அயோத்தியிலும் பாஜக மேற்கொண்டுவரும் மதவாத நடவடிக்கைகள் மற்ற இடங்களில் அதன் வெற்றி வாய்ப்புகளைப் பாதிப்பது மட்டுமின்றி அதற்குக் கூட்டாளிகள் கிடைப்பதையும் கெடுப்பதாகவே இருக்கும்.
  காங்கிரஸ் கட்சியின் இழப்பு பாஜகவுக்கு லாபமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் பாஜக இருந்தால் அது ஏமாந்துதான் போகும். 2014 இல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியை அமைப்பது ஒன்றுதான் பாஜகவின் முன்னாலிருக்கும் ஒரே வழி. 1999 இல் ஆட்சி அமைத்தபோது தேர்தலுக்கு முன்பே பாஜகவின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 24 கட்சிகள் இருந்தன. ஆனால் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொண்டு தற்போது அப்படியொரு கூட்டணியை பாஜகவால் அமைக்க முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே தோன்றுகிறது.
  பாஜகவில் இருந்தபோது அவருடைய ஆதரவாளராகக் கருதப்பட்ட எடியூரப்பாகூட இப்போது தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க முன்வரவில்லை. மோடியை தனது நண்பர் எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வரோ அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவரைச் சந்திக்கக்கூடச் சம்மதிக்கவில்லை. பாஜகவுக்கு புதிய கூட்டாளிகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலையே இவை காட்டுகின்றன.
 பொருளாதார நிலையை ஆராயும் வல்லுனர்கள் 1989 ஆம் ஆண்டில் இருந்தது போன்ற ஒரு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அந்த இடத்துக்குத்தான் இந்தியா வந்திருக்கிறது. பாஜக, காங்கிரஸ், மாநிலக் கட்சிகள் என மூன்று பெரும் பிரிவுகளாக இந்திய அரசியல் களம் பிரிந்து நிற்கிறது.
 தற்போது தேசியக் கட்சிகளைவிடவும் மாநிலக் கட்சிகளுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் மாநிலக் கட்சிகள் இணைந்து நிலையானதொரு ஆட்சியை வழங்க முடியுமா என்ற கேள்வி வாக்காளர்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது.அந்த ஐயத்தைப் போக்கவேண்டியது மாநிலக் கட்சிகளின் கடமை.
 மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாற்றை முன்மொழிவதற்கான முன்முயற்சியை தற்போது இடதுசாரிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநில நலனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாநிலக் கட்சிகளுக்கும் தேசிய பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் இடதுசாரிகளுக்கும் கொள்கை அளவில் உடன்படும் அம்சங்களைவிட முரண்படும் அம்சங்களே அதிகம்.  அதுமட்டுமின்றி திரிணாமுல் காங்கிரûஸயும், பகுஜன் சமாஜ் கட்சியையும் தவிர்த்துவிட்டு அவர்கள் ஏற்படுத்த நினைக்கும் கூட்டணி எந்த அளவுக்கு எடுபடும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
  தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பாஜக என எந்தக் கட்சியோடும் கூட்டுசேரக் கூடியவை என திரிணாமுல் காங்கிரஸ்,பகுஜன் சமாஜ் தி.மு.க,அ.தி.மு.க உள்ளிட்ட சுமார் இருபது மாநிலக் கட்சிகளை கருத்துக் கணிப்பில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அது இக்கட்சிகளின் சாணக்கியம் எனப் பார்க்கப்படுவதைக் காட்டிலும் சந்தர்ப்பவாதமாகவே மக்களால் கருதப்படும். அத்தகைய நம்பகமற்ற நிலை வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டால் தற்போது மாநிலக் கட்சிகளுக்கு இருக்கும் அவர்களது ஆதரவில் ஒரு பகுதி பாஜகவை நோக்கி நகரக்கூடும்.
  மாநில நலன்களைப் பாதுகாக்கக்கூடிய, மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஒன்றை மத்தியில் அமைப்பதற்கான அரிய வாய்ப்பு இப்போது மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது.அரசியல் சாணக்கியத்தோடு  அதை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது சந்தர்ப்பவாதச் சகதியில் மூழ்கிப்போகுமா என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறது இந்திய ஜனநாயகம்.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

Retrieve Panchama Land


Sunday, October 20, 2013

Retrieve Panchama Land



Hello!
I've started the petition "The Honourable Chief Minister of Tamilnadu: To retrieve 12 lakh acres of Panchama Lands of Dalits from encroachers" and need your help to get it off the ground.
Will you take 30 seconds to sign it right now? Here's the link:
http://www.change.org/petitions/the-honourable-chief-minister-of-tamilnadu-to-retrieve-12-lakh-acres-of-panchama-lands-of-dalits-from-encroachers
 
Here's why it's important:




During the British rule Mr Tremen Here then Collector of Chingleput district have submitted a report to British government explaining the need to give lands to Dalits. The British government have accepeted the report and have issued two GOs ( G O No 1010, 1010A Revenue 30th Sep 1892; G O No 68 Education 1st Feb 1893) in this respect. The British govt have instructed the revenue officials to identify waste lands and distribute them to Dalits. About 12 Lakh acres of lands were given to Dalits. They are called Depressed Class (conditional) Land. The lands were given between 1891 to 1931 in all districts of Tamilnadu. The lands are not transferable.After Independence most of the lands were occupied by non dalits and the Dalits were left landless.

In 1991 Madras High Court delivered a judgement confirming the rights of Dalits over Panchama lands and have ordered the state government to retrieve the lands. The AIADMK ruled State government have issued a GO No: G1/4868/90 dated 15.7.1991 asking all the District Collectors and DROs to identify the Panchama Lands. About 85000 acres of panchama lands were identified. But the work was stopped due to the negligence of the officials.

Dalit organizations of Tamilnadu are waging numerous struggles to get back the Panchama lands. On 10th October 1994 John Thomas and Ezhumalai- two Dalits were killed in the police firing at Chingleput during the struggle Then in 1996 the state government have formed a commission under Mr S.D.Somasundaram - the then honorable Revenue Minister to look into that matter.But nothing happened due to regime change.

In response to the request of Viduthalai Ciruthaikal Katchi ( VCK ) - a Dalit Party, in 2011 the then Chief Minister of Tamilnadu Mr M.Karunanithi have formed a four member commission under Justice M.Maruthamuthu a retired judge of the Madras high Court to give suitable recommendations over the Panchama lands issue.Unfortunately that commission too become defunct after the new regime came to power.

Now VCK have given a call to all Dalits and democrats of Tamilnadu to adopt the last week of October as 'Land Rights Week' to pressurize the state government to take necessary steps to retrieve Panchama Lands to Dalits.


You can sign my petition by clicking here.
Thanks!

Ravi kumar
Gen Secretary, VCK, Tamilnadu

Friday, October 18, 2013

செம்மொழி நாள்

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து இந்த முடிவை கேரள அரசு அறிவித்திருக்கிறது.

கேரள மாநில கலாச்சாரத் துறையும் கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்ககூடாது? இதை மாநில அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்பதுகூட இல்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அந்த நாளை செம்மொழி நாள் எனக் கடைபிடித்து ஒரு கருத்தரங்காவது நடத்தலாமே! அவர்களிடம் நிதி நல்கை பெற்று கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உருப்படியில்லாத கருத்தரங்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெறும் செலவுக் கணக்கு காட்டுவதற்கே பெரும்பாலும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என்று எல்லோருக்கும் தெரியும். அந்தக் கருத்தரங்குகளில் சிலவற்றை ஏன் அக்டோபர் 12 ஆம் தேதி நடத்தச் சொல்லக்கூடாது?

 இப்படி எதுவும் செய்யாமல் , சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்பது எவருக்கும் புரியாத மர்மம்.இந்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையைக்கூட செலவழிக்க வகை தெரியாமல் திருப்பி அனுப்புகிற அவலநிலையே அங்கு நிலவுகிறது என்கிறார்கள்.முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல அந்த நிறுவனம் அமைக்கப்பட்டபோது செய்யப்பட்ட தவறுகள் இப்போதும் அதை அரித்துத் தின்கின்றன.

 விருதுகள் வழங்குவது மட்டும்தான் செம்மொழி நிறுவனத்தின் மூலம் நடைபெறும் ஒரே வேலை எனத் தோன்றுகிறது. அதுவாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் அதிலும் ஏராளமான குளறுபடிகள். அந்த நிறுவனத்தின்மூலம் ஆண்டுதோறும் எட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள்பீடம் விருது இருவருக்கும் இளம் அறிஞர் விருது ஐந்துபேருக்கும் வழங்கப்படும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு குறள் பீடம் விருது அயல்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. முதல் மூன்று விருதுகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாயும் இளம் அறிஞர் விருதுகளுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுகின்றன. முதல் மூன்று விருதுகளும் தமிழ் ஆய்வுகளுக்காக ஒருவரது ஆயுட்காலப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு வழங்கப்படுகின்றன. இளம் அறிஞர் விருது பெறுவதற்கு ஒருவர் முப்பது முதல் நாற்பது வயதுக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் தகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை விருது வாங்கிய மூத்த அறிஞர்களின் பட்டியலையும் இளம் அறிஞர்களின் பட்டியலையும் ஒப்பு நோக்கினால் இளம் அறிஞர்களைத் தேர்வு செய்வதில் பெரிய முறைகேடு நடந்துகொண்டிருப்பதை நாம் உணரலாம். அந்த விருதுகளுக்கானவர்களைத் தேர்வு செய்வதில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரது முடிவுதான் செல்லுபடியாகிறது என்கிறார்கள்.இந்த முறைகேட்டைச் சீர்செய்யவில்லையென்றால்  கலைமாமணி விருதுகளைப் போலத்தான் செம்மொழி  விருதுகளும் மதிப்பிழந்துபோகும். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகளைச் சீராய்வு செய்வதற்கு சமூகத் தணிக்கை( Social Audit) மேற்கொள்ளப்படவேண்டும் என நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.அரசாங்கத்தின் திட்டங்கள் பலவற்றையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களை மேம்படுத்த அவை உதவுகின்றன. அதுபோல செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்குத் தமிழ்மீது பற்றுகொண்ட அறிஞர்கள் முன்வரவேண்டும்.

Thursday, October 17, 2013

வானொலியைக் காப்பாற்ற.....,


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்திக்காக நாம் அதிகம் சார்ந்திருந்த ஊடகம் வானொலிதான். செய்தி மட்டுமல்ல தொலைக்காட்சி அதிகம் பரவாத அந்தக் காலத்தில் கிரிக்கெட் போட்டியின் நேர்முக வர்ணனை, திரைப்படங்களின் வசனங்களை ஒலிபரப்பும் ஒலிச்சித்திரம் என அது நம்மைப் பலவிதமாக வசீகரித்து வைத்திருந்தது. ஆனால் அது தனது பழைய ஈர்ப்பை இப்போது இழந்து நிற்கிறது. 

தந்திக்கு மூடுவிழா நடத்தியதுபோல வானொலிக்கும் நடத்தியிருப்பார்கள். நல்லவேளை ஃஎப் எம் ரேடியோ வந்து அதைக் காப்பாற்றியது. இப்போது ரேடியோ என்றாலே ஃஎப் எம் தான் என ஆகிவிட்டது. ஆனால் அதில் செய்திகளை ஒலிபரப்ப அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. 

அரசாங்கம் நடத்தும் ஆகாஷ வாணியில் மட்டும்தான் செய்தி ஒலிபரப்பு, தனியார் வானொலியில் அதற்கு அனுமதியில்லை. தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்புக்குத் தடையில்லை. ஊருக்கு ஊர் இருக்கும் உள்ளூர் கேபிள் சேனல்களுக்கும் தடையில்லை. ஆனால் தனியார் வானொலிக்கு மட்டும் தடை என்பது வேடிக்கையாக இருக்கிறது. ( ஆனால் இந்தத் தடை பிபிசி தமிழோசை நிகழ்ச்சிக்குப் பொருந்தாதது ஏன்? ) 

குறைந்த முதலீட்டில் ஒரு கம்யூனிட்டி ரேடியோவை நாம் ஆரம்பிக்க முடியும். 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதன் ஒலிபரப்பைக் கேட்க முடியும். அதில் செய்தி ஒலிபரப்ப அனுமதி கிடைத்தால் நிச்சயம் வானொலி மீண்டும் முன்புபோல முக்கியத்துவம் பெறும். 

இதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கும் இந்த வழக்கில் அவர் நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புவோம்! 

Wednesday, October 16, 2013

திலிப் சக்ரவர்த்தியுடன் ஓர் உரையாடல் - ரவிக்குமார்

Return to frontpage
ஞாயிறு, செப்டம்பர் 22, 2013
Published: September 22, 2013 17:23 IST Updated: September 22, 2013 19:19 IST

இந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத வேண்டும்! - திலிப் சக்ரவர்த்தியுடன் ஓர் உரையாடல்

ரவிக்குமார்
 
திலிப் சக்ரவர்த்தி 
திலிப் சக்ரவர்த்தி 
 
வெறும் புராணங்களாலும் கட்டுக்கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் தொல்லியலாளர்கள்தான். ஆனால், தமது ஆயுட்காலம் முழுவதும் அந்தத் துறையில் பணியாற்றிப் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இங்கே மறக்கப்பட்டுவிட்டனர். தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே. அந்தக் குறையைப் போக்கும் விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்ரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார்: 'இந்தியத் தொல்லியலின் ஐம்பது ஆண்டுகள்' (Fifty Years of Indian Archaeology ( 1960-2010) - Journey of a foot soldier).
ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டு கால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. இது மணற்கேணி ஆய்விதழுக்காக அவருடன் ரவிக்குமார் நிகழ்த்திய ஓர் உரையாடல்.

தொல்லியல் குறித்து இன்னும் அவ்வளவாக விழிப்புணர்வு ஏற்படவில்லையே? தொல்லியல் ஆய்வுகளை இங்கிருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தோடுதானே அணுகுகிறார்கள்... அயோத்திப் பிரச்சினையில் அப்படித்தானே நடந்தது?
 
நமக்கு் தொல்லியல் குறித்த தீவிரமான பார்வை இல்லை. அயோத்தியை எடுத்துக்கொண்டால், அந்த இடம் முழுவதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. எவரும் அதன் தொல்லியல் முக்கியத்துவத்தை 'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அந்த இடத்தின் மிகச் சிறிய பகுதியின் மீதுதான் கவனம் செலுத்தினார்கள். அயோத்தி ஒரு முக்கியமான தொல்லியல் இடம். அங்கு மௌரியர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சிங்க உருவம் பொறித்த தூண் இருக்கிறது. அது சாரநாத் தூணைப் போன்றது. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இந்திய வரலாறு குறித்து மாறுபட்ட பார்வை உருப்பெறக் காரணமாக இருந்த இடதுசாரி சார்பு வரலாற்று அறிஞர்களை நீங்கள் உங்கள் நூலில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கருத்து என்ன? வலதுசாரி வரலாற்று ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது அவர்கள் நல்லவர்கள் என்று தோன்றவில்லையா?
 
அடிப்படையில் அதுவோர் அதிகார விளையாட்டு. இந்திரா காந்தி காலத்திலிருந்து இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மிகப்பெரும் செல்வாக்குடன் இருந்துவருகிறார்கள். குறிப்பாக, தில்லியில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் அதிகார நாட்டம் கொண்டவர்கள். அவர்களுக்கு வரலாற்று ஆராய்ச்சி மீது அவ்வளவாக ஆர்வம் கிடையாது. அவர்களில் பலர் வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவர்கள். வலதுசாரி சார்புகொண்ட வரலாற்றாசிரியர்களும்கூட அப்படித்தான். இந்த நாட்டில் கல்வித் துறையில் நடந்த மிகப் பெரும் அறிவுத்துறை சீர்கேடு வரலாற்று ஆய்வுகளில் நடந்த சீர்கேடுதான். அவர்களோடு அனுசரித்துப்போகாததால் நான் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமாசெய்யுமாறு அவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
தில்லியில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களுக்கு உண்மையான வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபாடு கிடையாது. பல்கலைக்கழகம் என இருந்தால் அங்கே ஒருங்கிணைந்த அருங்காட்சியகம் ஒன்று இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்கூட அப்படியான அருங்காட்சியகம் கிடையாது. அங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு அதில் ஆர்வம் வரவில்லை?

அயல்நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் நூலில் எழுதியிருக்கிறீர்களே, ஏன்?
 
இந்தியாவின் தொல்பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளில் எனக்கிருக்கும் அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன். முதலாம் உலகம் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைப் பார்க்கும் விதம் அப்படி இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமது சொந்த நாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. அடிப்படையில் அவர்கள் இனவாதப் பார்வை கொண்டவர்கள். நான் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். தெற்காசியத் தொல்லியல் ஆய்வுகளுக்கென ஒரு ஐரோப்பிய அமைப்பு உள்ளது. அதில் தெற்காசியாவைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. கேம்ப்ரிட்ஜில் அதைப் போலவே ஓர் அமைப்பு இருக்கிறது. அது வெளிப்படையாகவே ஐரோப்பியர்களுக்கென செயல்பட்டுவருகிறது. அதிலிருந்து நிதி முதலான உதவிகளைப் பெறுபவர்களாகவே இந்தியத் தொல்லியலாளர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து அவர்களுக்கு முக்கியமில்லை.

இது அவர்களின் இனவாதப் பார்வையின் விளைவா அல்லது வேறு காரணங்களும் இருக்கின்றனவா?
 
பெரும்பாலும் இனவாதப் பார்வைதான் காரணம். அதைவிடவும் இது மூன்றாம் உலக நாடுகள் மீதான அதிகாரம் தொடர்பான விஷயமாகவும் இருக்கிறது. அறிவே அதிகாரம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்களது அறிவே மிகப்பெரும் அறிவு என அவர்கள் மற்றவர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.

இதேமாதிரியான குற்றச்சாட்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்த ஆய்வுகள் தொடர்பாகவும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது... 

அவர்களுக்கு உள்ளூர் அறிஞர்கள் ஒரு பொருட்டே இல்லை. நாம் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களை எச்சரிக்கையோடு பார்க்கத் தொடங்கினால்தான் அவர்கள் இங்கிருப்பவர்களுக்கு மரியாதை தர முன்வருவார்கள். அதை நாம் செய்யவில்லை. அது நம் தவறு.

தொல்லியல் துறை சார்ந்து மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்களா? 

கலை வரலாற்று ஆராய்ச்சியில் நடப்பதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. தொல்லியல் துறையில் நடப்பதைத்தான் சொல்கிறேன். அதில் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பேராசிரியர் ராஜன் அவர்கள் மேற்கொண்டு இருக்கும் பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
 
பேராசிரியர் ராஜன் மேற்கொண்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. அவர் தனது அகழாய்வில் கண்டெடுத்தவை சாதாரண மக்களும் கல்வியறிவு பெற்றிருந்ததைக் காட்டுகின்றன. அப்படியான எழுத்துப் பொறிப்பைச் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு மொழி வளர்ச்சியடைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே அங்கு எழுத்தறிவு இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த மக்கள் பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
வட இந்திய வரலாற்றுக்கும் தென்னிந்திய வரலாற்றுக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இதுவரை இந்திய வரலாறு வடக்குப் பகுதியிலிருந்து ஆரம்பித்தது என்றே என்ணப்பட்டுவந்தது. இனி நாம் இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் தொடங்கி ஆராய வேண்டும்.

தென்னிந்தியாவில் நெல் பயிரிடப்பட்டதன் வரலாற்றை எவ்வளவு முயற்சித்தாலும் கி.மு.3000க்கு முன்னே கொண்டுபோக முடிய வில்லை என உங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?
 
துரதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கும் சான்றுகள் அப்படி இருக்கின்றன. அதைப் பற்றி இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்பட வேண்டும். அப்போது ஒருவேளை இந்த நிலைப்பாட்டை மாற்றக்கூடிய சான்றுகள் நமக்குக் கிடைக்கக்கூடும்!

* ரவிக்குமார், எழுத்தாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம் - ரவிக்குமார்

Return to frontpage
செவ்வாய், செப்டம்பர் 24, 2013
Published: September 24, 2013 09:25 IST Updated: September 24, 2013 09:25 IST

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

ரவிக்குமார்
படம்: டி.சிங்காரவேலு
வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்றார் கார்ல் மார்க்ஸ். அதை நமது நாட்டுக்குப் பொருத்திப்பார்த்தால் ‘இந்திய வரலாறு என்பதே சாதிப் போராட்டங்களின் வரலாறு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு இந்திய சமூகத்தை நிர்ணயிக்கும் அம்சமாக இன்றும் சாதி என்பது செயல்பட்டுவருகிறது. நாம் கௌரவக் கொலைகளின் காலத்தில் வாழ்கிறோம்.
சாதிப் போராட்டங்களின் தொகுப்பாக விளங்கும் இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் தவறாமல் இடம்பெற வேண்டிய நிகழ்வு பூனா ஒப்பந்தம். 1932- செப்டம்பர் 24-ம் தேதி பூனாவில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைதான் ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.
தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகுக்கும் வகுப்புவாரி உரிமையை தலித் மக்கள் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வாதாடிப் பெற்றனர். முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் முதலானோருக்கு அதற்கு முன்பே அத்தகைய உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தலித் மக்களுக்கு அதை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசின் முடிவை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். "இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என இந்தியாவில் மூன்று வகுப்பினரை மட்டும்தான் அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்க வேண்டும். கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய மற்ற மூன்று பிரிவினருக்கும் அரசியல் சட்டத்தில் எந்த இடமும் வழங்கப்படக் கூடாது. அவர்கள் மற்ற பிரிவினரோடு கலந்துவிட வேண்டும்" என்பதுதான் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸார் கலவரச் சூழலை ஏற்படுத்தினார்கள். ஆங்காங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டார்கள். தலித் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய ரத்தக் களறி நடக்கும் என்ற அச்சத்தின் காரணமாக காந்தியைச் சந்தித்துப் பேச்சு நடத்த அம்பேத்கர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே ‘பூனா ஒப்பந்தம்’.
பூனா ஒப்பந்த நாளை தமது உரிமை பறிக்கப்பட்ட துரோக நாளாக தலித் மக்கள் கடைப்பிடிப்பது வழக்கம். தலித் மக்கள்தமது உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அந்த ஒப்பந்தம் பறித்துக்கொண்டது உண்மைதான் என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் தலித்துகளை ஒரு தரப்பாக அங்கீகரித்து அவர்களோடு இந்துக்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள் என்ற விதத்தில் அதுவொரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படவேண்டும்.
பூனா ஒப்பந்தம் பெரும்பாலும் தேர்தல் தொடர்பான அம்சங்களையே கவனத்தில் கொண்டிருந்தது என்றாலும் பிறப்பின் அடிப்படையில் பேதம் பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிற ஒரு பிரிவும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. "ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அரசுப் பதவிகளில் நியமிக்கப்படும்போதோ உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போதோ எந்த விதமான இடையூறும் ஒருவருக்கு செய்யப்படக் கூடாது. அவற்றிலெல்லாம் நியாயமான அளவில் அவர்கள் இடம்பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியின் ஆலோசனையின்படி 1932 செப்டம்பர் 30-ம் தேதி மும்பையில் மாநாடு ஒன்றுகூட்டப்பட்டு ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் மையக் குழுவில் அம்பேத்கரும், தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். அந்த அமைப்பு உண்மையிலேயே பயனுள்ள வேலைகளைச் செய்யும் என அம்பேத்கரும் மற்றவர்களும் எதிர்பார்த்தனர். அந்த நேரத்தில் அம்பேத்கர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததால் ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ செய்ய வேண்டியவை குறித்த தெளிவான செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ஏ.வி. தக்கருக்கு அனுப்பிவைத்தார்.
காந்தியோ தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பிற உறுப்பினர்களோ அம்பேத்கரின் திட்டம் குறித்துக் கருத்தெதுவும்சொல்லவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட எழுதவில்லை. அதனால் அம்பேத்கரும் எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து விலகினார்கள். அந்த அமைப்பின் பெயரை ‘ஹரிஜன சேவா சங்கம்’என காந்தி மாற்றியமைத்தார். அது தீண்டாமையை ஒழிப்பதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்கள் சிலருக்குப் பதவி வழங்குவதற்கான ஏற்பாடாகச் சுருங்கிப்போனது.
காந்தி காலத்தில் மட்டுமல்ல; தலித் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் காலங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தலித் மக்கள் மீதான தமது கரிசனையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், நெருக்கடி முடிந்ததும் அந்தத் திட்டங்களும் குப்பைக்குப் போய்விடும். தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதில் உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு அக்கறையிருந்தால் அதற்கான திட்டத்தைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். அம்பேத்கர் 1932-ல் தயாரித்தளித்த திட்டம் இப்போதும்பொருத்தமாகவே இருக்கிறது.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பிரச்சார இயக்கம், சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்தல், சமூகக் கலந்துறவாடுதல், தொண்டர்களை உருவாக்குதல் - இந்த நான்கு அம்சங்களைக் கொண்டதே அம்பேத்கர் தயாரித்தளித்த அந்தத் திட்டம். அதில் முதல் அம்சத்தை மட்டும் நிறைவேற்றினாலே போதும், வன்கொடுமைகள் பெருமளவில் குறைந்துவிடும்.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுதல் தொடர்பாக அம்பேத்கர் முன்வைத்தது இதுதான்: " தீண்டாமை எதிர்ப்புக் கழகத்துக்குக் கிராமப் பகுதிகளில் தொண்டர்களை உருவாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராட நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்தத் தொண்டர்கள் உதவ வேண்டும்."
இப்படியொரு வேலைக் கிராமங்களில் நடந்தால், "இந்து சமூகத்தில் புரட்சி நடக்கும். அத்தகைய சமூகப் புரட்சி நடக்காமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அந்தஸ்து பெறுவது ஒருபோதும் கைகூடாது" எனக் கருதிய அம்பேத்கர், "சாதி இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களிடம் பரிவோடுஇருப்பவர்கள், தேவைப்பட்டால் தமது உற்றார் உறவினர்களை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
அம்பேத்கர் முன்வைத்த திட்டம் ஓர் அமைப்பு செய்ய வேண்டிய பணிகளை மட்டுமின்றி ஒவ்வொரு தனிமனிதரும் செய்ய வேண்டிய பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் சாதியிலிருந்து விடுபட வேண்டும், தான் பிறந்த சாதியின் நலனைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்த தீர்வு. சுருக்கமாகச் சொன்னால் ‘சொந்த சாதியின் நலனுக்குத் துரோகம் செய்யும் ஒருவர்தான் ஜனநாயகத்துக்குக் காவலராக இருக்க முடியும்.’
பூனா ஒப்பந்தத்தால் பறிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனச் சிலரும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் எனச் சிலரும் இப்போது வலியுறுத்திவருகின்றனர். தலித் மக்களின்உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் விதமாக நமது நாட்டின் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியம்... தலித் மக்களுக்கான குடிமை உரிமைகளை வென்றெடுப்பது!
* ரவிக்குமார், எழுத்தாளர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

தடுத்திடுமா தமிழகம்? - ரவிக்குமார்

dn


10.10.2013

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்யவேண்டும் போன்ற ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் கோரிக்கைகளை தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. மேலும் பல தமிழ் அமைப்புகள் இதே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்யவேண்டும் போன்ற ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் கோரிக்கைகளை தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. மேலும் பல தமிழ் அமைப்புகள் இதே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் என்று தோன்றவில்லை. இந்திய அரசின் இலங்கைக் கொள்கையை ஆதரிப்பவர்கள், இலங்கையை நாம் ஆதரிக்காவிட்டால் அங்கே சீனாவின் பிடி அதிகரித்துவிடும், அது நமது பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என சாக்கு போக்குகள் சொன்னாலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் தங்களுக்கிருக்கும் பங்கை ராஜபக்ச வெளிப்படுத்தி விடுவாரோ என்ற அச்சமே இந்திய ஆட்சியாளர்களின் இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டைத் தீர்மானிக்கிறது என்பதே தமிழ்நாட்டு மக்களின் என்ணமாக இருக்கிறது.
இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் மீறி, கடந்த இரண்டு முறை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்ததற்குக் காரணம், தமிழ்நாடு கொடுத்த அழுத்தம்தான். இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் யாவும் ஒரே குரலில் வலியுறுத்தியதால்தான் இந்திய அரசு தனது நிலையை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது. இப்போதும் அதேவிதமான அழுத்தம் தரப்பட்டால் இந்திய அரசின் நிலை மாறக்கூடும். ஆனால் அந்த அழுத்தத்தைத் தருவதில் மூன்று சிக்கல்கள் உள்ளன.
தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்கள் குறித்து எதிர்வினை புரிவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கியமான காரணியாக இருந்து வந்துள்ளனர். ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானங்கள் வந்தபோதெல்லாம் அவர்கள் முழுமூச்சோடு அதற்கு ஆதரவு திரட்டினர்; மாநாடுகளை நடத்தினார்கள்; இணைய தளங்களின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்; சர்வதேச மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டார்கள். ஆனால், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அத்தகைய போராட்டங்கள் எதையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக்கூட தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை. குழுவாதப் போக்கு அவர்களை மென்மேலும் பிளவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
இந்த குழுவாதமானது அரசியல் அமைப்புகளை நடத்துகிறவர்களை சிதைப்பது மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் ஆர்வத்தோடு கருத்தியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஈழத் தமிழ் அறிவுஜீவிகள் பலரையும் செயலிழக்க வைத்து முடக்கிப் போட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, தமக்கு ஆதரவு தெரிவித்த தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் விதமாகவும் அது வெளிப்பட்டு வருகிறது. இது முதலாவது சிக்கல்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசாங்கம், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எடுக்கவிருக்கும் நிலை என்ன என்பது தெளிவுபடவில்லை. அந்த மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவரும் அவர் சார்ந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அப்படித்தான் பேச முடியும். இல்லாவிட்டால் அவர்களை "பிரிவினைவாதிகள்' என ராஜபக்ச அரசு சித்திரிக்கும். இவ்வாறு தந்திரோபாய ரீதியில் த.தே.கூ அரசு பேசுவதாக வைத்துக்கொண்டாலும், அவர்களது நிலைப்பாடு தமிழ்நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கும் த.தே.கூ அரசு எடுக்கும் நிலைபாட்டுக்கு மாறாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேசுவதில் சிக்கல் உள்ளது.
"த.தே.கூ ஒரு சமரசவாதக் கூட்டணி, அது தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத் தராது' என புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் சொல்வது போல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சொல்லலாம்.
"த.தே.கூ சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, இந்திய அரசு பங்கேற்கக்கூடாது எனச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது' என வாதிடலாம். ஆனால் அது எடுபடாது. த.தே.கூ வுக்கு ஈழத் தமிழர்கள் அளித்திருக்கும் பெருமளவிலான வாக்குகள் அந்தக் கூட்டணியைத்தான் அவர்கள் தங்களின் ஒரே பிரதிநிதியாகக் கருதுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டன. இந்நிலையில் த.தே.கூ அரசின் நிலைக்கு மாறாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பேசினால், அது ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்துக்கும் மாறாக நாம் பேசுவதாகவே பொருள்படும். இந்திய அரசும் இந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும்.
இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவாரெனில், தமிழ்நாட்டிலிருக்கும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு அது நெருக்கடியாகவே அமையும். இது இரண்டாவது சிக்கல்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டிலிருக்கும் அரசியல் கட்சிகள் இனி எதைச் செய்தாலும் கூட்டணிக் கணக்கை மனதில் வைத்தே செய்யும். காங்கிரஸ் அல்லது பாஜக என ஏதோ ஒரு கட்சியோடு கூட்டணி வைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அவர்கள், கூட்டணிக்கு குந்தகம் வராமல்தான் எதையும் பேசுவார்கள். ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் அம்பலப்பட்டு நிற்கிறது. காங்கிரஸ் அளவுக்கு மோசமில்லையென்றாலும் பாஜகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொண்டது.
ஈழப் பிரச்னையிலும் தமிழக மீனவர் பிரச்னையிலும் தங்களுக்கு அக்கறை இருப்பதுபோல இப்போது பா.ஜ.க காட்டிக்கொண்டாலும், அவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ளவில்லை. 2000 ஆவது ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கு "ஓயாத அலைகள்' என்ற தாக்குதலை நடத்தி சுமார் நாற்பதாயிரம் இலங்கை ராணுவவீரர்களை போராளிகள் சிறை பிடித்தனர். அந்த வெற்றியோடு தனி ஈழ அறிவிப்பைச் செய்வதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது தங்களுக்கு உதவுமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கெஞ்சியது. அதை ஏற்று அவர்களைக் காப்பாற்றியது அப்போதிருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான். "இலங்கை ராணுவவீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு போராளிகள் அனுமதிக்கவில்லையென்றால், இந்திய கப்பல் படையை அனுப்பி அவர்களை மீட்போம்' என போராளிகளை மிரட்டியது வாஜ்பாய் அரசு.
அதுமட்டுமின்றி இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று கொண்டிருந்த நேரத்தில் அதைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்கி உற்சாகப்படுத்தியதும் அதே வாஜ்பாய் அரசுதான். கடந்த ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, "இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல' எனக் கூறி அதை நிறைவேற்றவிடாமல் தடுத்ததும் பா.ஜ.க தான்.
ஈழப் பிரச்னையைப் பேசுவது காங்கிரசுக்கும் சிக்கல், பாஜகவுக்கும் சிக்கல் என்பதால், ஈழப் பிரச்னையை ஒரு எல்லைக்குமேல் வலுவாக எழுப்புவது தேசியக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் கனவிலிருக்கும் தமிழகக் கட்சிகளுக்கு சங்கடமானதாகவே இருக்கும். இது மூன்றாவது சிக்கல்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற பிரச்சாரத்தை தமிழ்நாட்டிலிருக்கும் சிறிய இயக்கங்கள் மட்டும்தான் முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
சில மாதங்களுக்கு முன்னால், மாணவர்கள் ஈழப் பிரச்னையை முன்வைத்து தன்னெழுச்சியாகப் போராடியதுபோல இப்போது போராடுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் வெளியான பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள் மாணவர்களை எழுச்சி கொள்ள வைத்தன. தன்னெழுச்சியாக மேலெழும்பும் எந்தப் போராட்டமும், திட்டமிட்ட முறையில் வழி நடத்தப்படவில்லையெனில் தானாகவே தணிந்து போய் விடும். மாணவர் போராட்டமும் அப்படித்தான் ஆனது.
ஈழத் தமிழர்கள்மீது தமிழக அரசியல் கட்சிகள் உண்மையான அக்கறையோடுதான் இருக்கின்றனவா? இந்தத் தடைகளையெல்லாம் மீறி தமிழகம் எந்த அளவுக்கு ஒன்றிணைந்து போராடும்? அது காங்கிரசைப் பணிய வைப்பதாக இருக்குமா? காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இந்திய அரசைத் தடுக்குமா போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க .......

 
 
 
வணக்கம்!
        அக்டோபர் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலமே நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத் தொடரில் விரிவான விவாதங்களுக்கு நேரமிருக்காது என்றபோதிலும் சட்டப் பேரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் வெளிநடப்பிலும், கூச்சல் குழப்பங்களிலும் காலத்தை வீணாக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.அரசும் அதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

       தமிழக சட்டப்பேரவையில் பின்வரும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகிறேன்: 

1. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கும் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை நிராகரித்து மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கும்படி வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

2. தொடக்கக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் உரிய சீர்திருத்தங்களைச் செய்யமுடியும்.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. இடைக்காலத்தில்தான் அது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.இப்போது அது மென்மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது. கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கு அவ்வப்போது தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்தாலும்  தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்கு வலுவாக உணர்த்திட முனைப்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கும் மாற்றிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். 

3. காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்.

4. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நெருக்குதலை சமாளிக்கும் நோக்கில் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசர சட்டம் பல தவறுகளைக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.  அந்தக் குறைகளோடு அதை சட்டமாக்க தமிழக அரசு முயற்சித்தால் அதில் சரியான திருத்தங்களை முன்மொழியவேண்டிய கடமை சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு உள்ளது.

5. தாது மணல் உள்ளிட்ட தமிழகத்தின் கனிம வளங்கள் எடுக்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. எனவே கனிமவளங்கள் எடுப்பதில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தவேண்டும். 

6. மது விற்பனையால் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பு அதிகம். மது விற்பனையால் கிடைக்கும் வருவாயை ஈடுசெய்ய எத்தனையோ நல்ல வழிமுறைகள் உள்ளன. மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. பால்ய விவாகத்தை நியாயப்படுத்தியவர்கள் அதைத் தடுத்தால் விபச்சாரம் பெருகிவிடும் என்று வாதிட்டதைத்தான் இது நினைவுபடுத்துகிறது. எனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும். தமிழக அரசும் இதுகுறித்துப் பரிசீலிக்கவேண்டும். 

7. ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தலித்துகள் நிலமற்றவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள்தான் பெருந்தொகையாக விவசாயத்தைச் சார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் புதிதாக நிலம் வழங்குவது ஒருபுறமிருந்தாலும் அவர்களுக்குச் சொந்தமான பத்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பஞ்சமி நிலங்களையாவது மிட்டுத் தர அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும். அதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2011 இல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இரண்டுமே செயல்படவில்லை. எனவே பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கு தமிழக அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்.
 
( 14.10.2013 அன்று சட்டப்பேரவை கூடுவது தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் ஊடகத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நான் அனுப்பிய மின்னஞ்சல்)

”பாண்டிச்சேரி என்பது பழங்கால நகரம் அல்ல”


J.B.P.More  என்ற வரலாற்றாசிரியரின் புதிய நூல் எழுப்பும் சர்ச்சை
- ரவிக்குமார்


”புதுச்சேரி என இப்போது பெயர்மாற்றப்பட்டுள்ள பாண்டிச்சேரி ஒரு பழமையான நகரம் அல்ல. புதுகே என தாலமி குறிப்பிட்டது இந்த ஊரை அல்ல” என J.B.P.More  என்ற வரலாற்றாசிரியர் தனது From Arikamedu to the Foundation of Modern Pondicherry என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பதிப்பு 2014 என அச்சிடப்பட்டு 2013 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கும் அந்த நூலின் அடுத்த பாகத்தையும் விரைவில் வெளியிடப்போவதாக அதன் ஆசிரியர் கூறியிருக்கிறார். அவரது கருத்துகள் ஆகிய ஆங்கில நாளேடுகளில் முக்கியத்துவத்தோடு வெளியாகியுள்ளன. 

அரிக்கமேடு ஒரு தொல்லியல் மையம் என அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். இந்தியத் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல்வேறு மட்பாண்டங்களும், ஜாடிகளும், உலோகப்பொருட்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அந்த ஊர் ரோம் நாட்டுடன் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்ததையும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அங்கு மக்கள் வசித்து வந்ததையும் தொல்லியல் துறை உறுதி செய்திருக்கிறது. ஆனால் மோரே அவை எல்லாவற்றையும் மறுக்கிறார். ’பாண்டிச்சேரி அவ்வாறு தொன்மையான நகரமாக இருந்தால் சங்க இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ அதைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி எந்தவொரு குறிப்பும் இல்லை. பழைய காலத்தில் கட்டடம் என்றாலே கோயில் தான். அரிக்கமேட்டிலோ பாண்டிச்சேரியிலோ அப்படிப் பழமையான கோயில் எதுவும் இல்லை’ என மோரே வாதிடுகிறார்.
1635 ஆம் ஆண்டில் ஃப்ரெஞ்ச்காரர் ஒருவரால் வரையப்பட்ட நிலவரைபடத்தில் அது Polesere எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும்; 1620 ஆம் ஆண்டிலிருந்தே அந்த ஊரை பிரிட்டிஷ் ஆவணங்களில்  Poullaserre, Pullaesera, Pollusearea,Poolysera,Poolasere, Podisera, Polasera, Pullacherey, Pullacherry எனப் பலவாறாக அழைத்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரியால் 1648  ஆண்டில் லண்டனுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில் அந்த ஊர் Pullacherry என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றும் மோரே கூறுகிறார்.
”பாண்டிச்சேரி என்ற பெயர் 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வந்திருக்கவேண்டும். அது பண்டகசாலை என்பதன் திரிபாக இருக்கக்கூடும் அல்லது பொருட்களை வண்டிகளில் ஏர்றி வந்ததால் வண்டிச் சேரி என அது அழைக்கப்பட்டு அதுவே பின்னர் பாண்டிச்சேரி என ஆகியிருக்கவேண்டும் என்பது மோரேவின் வாதம். அதுபோலவே அரிக்கமேடு அமைந்திருக்கும் இப்போது அரியாங்குப்பம் என அழைக்கப்படும் கிராமம் ஃப்ரெஞ்ச் ஆய்வறிஞர் ஃபிலியோஸா குறிப்பிட்டிருப்பதுபோல ஆர்யன் என்ற சொல்லிலிருந்தோ, அல்லது வேறு சில வரலாற்றாசிரியர்கள் சொல்வதுபோல அருகன் என்ற சொல்லிலிருந்தோ வரவில்லை. அதுவொரு மீனவக் கிராமம் என்பதால் அங்கு ஆரியர்கள் என அறியப்படும் பிராமணர்களோ அருகன் என்ற சொல்லோடு தொடர்புகொண்ட பௌத்த பிக்குகளோ இருந்திருக்க முடியாது. மாறாக அது அரையான் குப்பம் என்பதன் திரிபு. அரையார், கரையார் என மீனவர்களே அழைக்கப்படுகிறார்கள்” என்று தனது கண்டுபிடிப்பை அவர் முன்வைத்திருக்கிறார்.
மோரேவின் வாதம் பெருமளவுக்கு ஊர்ப்பெயர்களின் வேர்ச்சொல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அளவுக்கு அவருக்குத் தமிழில் புலமை இருப்பதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் இல்லை, கல்வெட்டுகளில் இல்லை, கோயில்களின் சிதைவு எதுவும் காணப்படவில்லை எனவே இது பழமையான இடம் இல்லை என்பனபோன்ற அவரது வாதங்களை தொல்லியல் அகழ்வாய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு இடத்தின் வரலாற்றைப் புறக்கணிக்கப் போதுமான காரணங்களாகக் கொள்ள முடியாது.அரியாங்குப்பம் ஒரு மீனவக் கிராமம் அங்கு பௌத்தர்கள் இருந்திருக்க முடியாது என்ற வாதத்தை இப்போதும் அங்கு காணப்படும் பழமையான புத்தர் சிலை மறுப்பதாக இருக்கிறது.
பல்லவர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள் எனப் பலரது ஆட்சியின்கீழும் இருந்த பாண்டிச்சேரி பகுதி காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்கும் , ஃப்ரெஞ்ச்காரர்களுக்கும் இடையிலான யுத்தங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. புதுகே என அழைக்கப்பட்டது பாண்டிச்சேரி இல்லை என மறுக்கும் மோரே அது பொதிகை என்பதைக் குறிப்பிடுவதற்கான சொல்லாக இருக்கலாம் என்கிறார். பாண்டிச்சேரியின் தொல்பழங்கால வரலாற்றைத் தெளிவுபடுத்துவதாக மோரேவின் நூலைக் கருதமுடியாது எனினும் அதை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவேண்டும் என்ற தேவையை இந்தப் புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது.
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியர் ராஜன் அவர்கள் கொடுமணல், பொருந்தல் அகழ்வாய்வுகளைப்போல பாண்டிச்சேரியிலும் சில அகழ்வாய்வுகளை மேற்கொண்டால் அதன் தொன்மை புலப்படும். பாண்டிச்சேரியில் இருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் நல்லது. அங்கு பணியாற்றும் பேராசிரியர் கோ.விஜயவேணுகோபால் அவர்கள் புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள் என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட அரிய ஆவணத்தைப் பதிப்பித்திருக்கிறார். அவரைப் போன்ற அறிஞர்களின் பணிகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்தினால் புதுச்சேரி என்று இப்போது பெயர்மாற்றப்பட்டிருக்கும் பாண்டிச்சேரியின் வரலாறு மேலும் துலக்கமாகும்.அதுவரை மோரே போன்றவர்களின் புத்தகங்கள் பரபரப்பாகத்தான் பேசப்படும்.

From Arikamedu to the Foundation of Modern Pondicherry

J.B.P.More
Saindhavi Publications, Thuraipakkam, Chennai, 2014
Price 350/-

Dalit politics in Tamilnadu - RAJ SEKHAR BASU




IN the southern Indian state of Tamilnadu, a majority of Dalit men, women and children work as agricultural labourers in return for a pittance. They live a life steeped in poverty and find it difficult to throw away the shackles of debt bondage that have been passed on to them from previous generations. The practice of segregation continues and Dalits are forbidden to enter places of worship, to draw water from public wells or wear shoes in the presence of the dominant upper caste groups.1 In such a situation, the Dalits are forced to perform the lowly occupations which are often stigmatized as polluting.
In most villages Dalits are made to render free service in times of death, marriage or any village function. They are forced to clean the village, dig graves and dispose off the carcasses of dead animals. Any effort to subvert the practice of untouchability leads to social boycott and acts of retaliatory violence. The attempts on the part of the Dalits to convert to Buddhism, Christianity or Islam, seldom offer them an opportunity to discard the label of untouchability.2
Significantly, the prevalence of the caste system adds an economic dimension to the social scenario of rural Tamilnadu. R. Balakrishnan, the Chairman of the Tamilnadu Commission for Scheduled Castes and Scheduled Tribes had observed, ‘The caste system is an economic order. It prevents someone from acquiring land or receiving an education. It is a vicious cycle and an exploitative economic arrangement. Land owning patterns and being a high caste member are coterminus. Also there is a nexus between (being) lower caste and landlessness… Caste is a tool to perpetuate exploitative economic arrangements.’3 Such a statement obviously implies the degraded state of Dalit agricultural labourers, most of whom happen to be landless.
The lack of access to landed resources compounds the economic problems of the Dalit masses. This state of helplessness is exploited by upper caste landlords and rich peasantry belonging to the intermediary caste groups. Economic liberalization too has had an adverse effect on the livelihood of these underprivileged groups as the downsizing of the public sector has diminished the job opportunities for Dalits in state owned enterprises. Further, globalization and the entry of corporate giants have deprived a section of the Dalits from exercising ownership rights over land which in the past had been assigned to them as Panchama lands. The assignees were forced to sell these lands to the other castes in order to survive the pangs of starvation.
Yet, these lands continue to be recorded year after year as DC (conditional) lands in official revenue records. It is ironic that the assignees of DC lands themselves have no real understanding of the conditions that have been laid down for the exercise of occupancy rights over such lands. The inability on their part to comprehend the intricacies of land transfer have been of great advantage to the upper caste landlords and land speculators. No wonder, attempts on the part of the Dalit Joint Action Committee and the Save Panchama Land Movement to force the government to restore all such lands to their original Dalit owners have resulted in mayhem and rioting.4

Consequently, the state of Tamilnadu has been ravaged by caste clashes. The clashes between Thevars (a backward caste) and Pallars (Dalits) have been in the headlines of the national dailies for now well over a decade.5 It is often argued that the sense of self-esteem and freedom among the Dalits resulting from the governmentÂ’s policies of protective discrimination have encouraged the land owning background and upper caste groups to strengthen the foundations of the old social order.6
This strife torn atmosphere has generated predictable responses from radical minded academics and grassroot level Dalit activists in Tamilnadu. The functioning and relevance of the governmental structure, as practiced and sustained by the post-colonial state, have come under close scrutiny and criticism. The attempt on the part of the Indian nation state to be representative of all lingustic and religious groups has come under heavy attack. All talk of plurality in terms of religious and cultural experiences have been looked upon as calculated moves aimed at erasing the differential experiences of groups within the contours of the Indian nation state structure.
M.S.S. Pandian has argued that moral regulation by the modern state is integral to the existence of nations, as it remains an effective ploy in the creation of an ‘ever-elusive homogenized citizen subject.’7 Since citizenship does not have any ‘connotation’, what essentially is represented in the personality of a citizen is a result of changing power dynamics in a nation’s biography. Pandian observes, ‘The contest around citizenship staged by those social groups that find themselves inadequately or not represented at all in the citizen’s figure, reproduces most often the very language of the nation.’8 While, at one level, the claim to citizenship is presented as a claim to equality, at another level it is essentially a narration of irreconcilable differences. Presumably, it is the other aspirations that strengthen the demands for an alternative nationhood with rights to an alternative state.9

Incidentally, there have been some moments in contemporary Indian politics when attempts were made to obliterate the language of the nation state. The writings of the Tamil Dalit intellectuals known as the Pondicherry Group represents what may be seen as an example of such a trend. Raj Gowthaman, A. Marx, Ravikumar and others have attempted a rethinking on questions related to power and culture, in particular on the complexity of issues relating to Tamil/Dravidian nationalism.10

The interest in Dravidian nationalism is no recent phenomenon in Tamilnadu. In the early decades of the twentieth century, the Dravidian movement led by E.V. Ramaswami Naickar had tried to counter the challenge of the hegemonic Indian nation through the construction of Tamil/Dravidian nationalism. This phase of the Dravidian movement advocated a form of nationalism which was territorially undefined and ‘allowed sufficient space for different identities to articulate themselves.’11 The movement upheld a more inclusive notion of citizenship by integrating the aspirations of lower castes, religious minorities and non-Hindi speakers. The Dravidian movement leaders in Tamilnadu invented a glorious Tamil past to silence ‘the unwelcome product of north Indian imperialism or depredating Brahminism.’12 Thus, what was essentially arrived at was an undifferentiated/homogenized non-Brahmin, who was still awaiting his/her nation.
The current Dalit intellectuals have started questioning the logic behind the construction of the Tamil/Dravidian. Their questions essentially focus on (a) Whether the citizen figure of the Tamil/Dravidian adequately represents the Dalits and (b) How did this category of undifferentiated non-Brahmin (which was an essential attribute of Tamil/Dravidian) pose obstacles for the Dalits in their quest for a sovereign identity and separate politics?13 The proponents of the Pondicherry Group tried to find answers to these questions in an era that witnessed the Ambedkar centenary celebrations, the disintegration of the Soviet Union and the rising brand of Hindutva politics.

In his two books, Dalits Paarvayil Tamil Panpadu and Dalit Panpadu, Gowthaman questioned the claim of homogeneity in Tamil culture.14 Instead, he characterized the whole of Tamil culture as a relationship between the hunter and the hunted. He rediscovered in the classical Tamil literature a world of unequal social relations and a hierarchical system. This stood in sharp contrast to Dravidian nationalismÂ’s advocacy of classical Tamil literature as the epitome of Tamil greatness. Gowthaman expressed the opinion that classical Tamil literature had always been the voice of the upper castes and seldom the voice of the Dalits. The Dalits and other labouring classes had toiled hard as the producers of wealth. But, the priestly classes, royal families and landlords, who lived by exploiting these classes, had succeeded in establishing their domination through ideology and violence.15
It has been pointed out that GowthamanÂ’s narrative of Tamil history differs from that of mainstream Dalit discourse in the way the Dalit past has been reconstructed. While the mainstream Dalit discourse had tried to represent the Dalits as the authors of the Indus Valley civilization,16 GowthamanÂ’s narrative of the Tamil past depicted the world of lowly hill cultivator, hunters, fishermen and pastoralist communities. The social life of these groups was believed to have been communal and more or less egalitarian, since there was hardly any internal differentiation. In other words, it was through such a narrative that a Dalit counterculture was sought to be projected.
M.S.S. Pandian has argued that the other past of the Tamils, which was silenced by Dravidian nationalism but underwent a revival in the hands of the Pondicherry Group, essentially represented ‘a faceless past, without heroes or heroic episodes.’17 This past stood for the erasure of the civilizational high points of Tamil culture and celebrated the traditions of those who were believed to be beyond the pale of this civilization. This projection had all the possibilities of ‘eluding the trap of nationalism.’18

Incidentally, the Pondicherry GroupÂ’s search for Dalit liberation was not limited to a specific territory and advocated mobilizing under-privileged groups or communities, all of whom could be a source for a new brand of politics. Gowthaman argued that Dalits should build a Dalit sub-national culture based on the culture of the tribals, who are treated as without a nationality like the Dalits. However, this Dalit sub-national culture was viewed as an oppositional culture, which was bereft of formalization into any form of power. Gowthaman believed that state, caste, religion, God, morality, justice, norms governing man-woman relationships, as well as ideologies of family and literature, were all institutions that highlighted civilizational achievements. Thus they had to be resisted. This resistance meant resignifying as positive, as well as celebrating, those cultural practices that the upper caste institutions deemed as lowly.19

Members of the Pondicherry Group, particularly A. Marx and Ravikumar, have argued that nationalist invocation of the past cared little for the ordinary and denied them of any valid location in the society. They believed that defecating and urinating on heroes could be the beginning of displacing one set of heroes with another. However, there is also a clear message of defiance implicit in these acts. The aim on the part of the Dravidian nationalists to construct Dravidian literature as of exemplary literary quality was defined as an act of getting involved with the very structure of power, which they sought to demolish.
Such ideas have at times also been replicated in the writings of the mainstream Dalit leaders of Tamilnadu. Thirumaavalavan, a vocal Dalit leader of Tamilnadu with a very radical bent of mind, categorically asserted that the upper caste bias of the Dravidian parties – the DMK and AIADMK – can only be resisted if the Dalits organize themselves. Nevertheless, he seems reluctant to snap ties with these parties because of electoral compulsions. Thirumaavalavan’s position thus seems to be both radical and compromising.20

In contrast, the Pondicherry Group’s political agenda is ‘one of moving from a faceless past to a faceless future – a future denuded of all difference.’ As Gowthaman has observed, ‘Our problem is not one of becoming owners of wealth or richer or crypto-Brahmin. To become owners, we need several workers. Likewise, to become rich, we need several poor. To become a crypto-Brahmin one needs a series of lower castes including the Dalits. That is why we do not need the order of domination and subordination. Only when the Dalit protest culture destroys this order, we shall arrive at the consciousness that one need not either be a crypto-Brahmin or a drudging Dalit. [Instead] let us be human beings… We call those who are not bound by domination and subordination as human beings.’21 The desire for power as a solution to the powerlessness of the Dalits has also been strongly criticized. Finally that since Dalit liberation basically stands for destruction of power, the yearning for power could lead to the destruction of Dalit politics.22

The Pondicherry Group’s vision of politics, therefore, stands at a distance from both Dravidian nationalism as also mainstream Dalit politics in Tamilnadu. While the Dravidian movement and the mainstream Dalit politics seek solutions within the construct of a nation, the Pondicherry Group stands for a disentanglement from the trap of the nation. But, there may have been several other objectives that guided the perceptions of this group. In fact, through the entire exercise of critiquing as well as rejecting the civilizational claims of modernity, the Dalit activists try to claim a space for autonomous Dalit politics. This new political project, which is specifically addressed to the lower castes, gives rise to a sphere of politics outside the modern civil society/public sphere. The defiance that has been displayed in conceding to the demands of Indian upper caste modernity, has heralded the appearance of the subaltern counter public. As M.S.S. Pandian observes, ‘…this is a public where a language of caste instead of the language of speaking caste by other means is validated, encouraged and practiced.’23 Nonetheless, modern civil society with its emphasis on modernity continues to resist the articulation of lower caste politics.24

Footnotes:
1. For more details, see Broken People: Caste Violence Against IndiaÂ’s Untouchables, Human Rights Watch, New York, 1999, pp. 23-24.
2. Ibid., p. 27.
3. Ibid.
4. Brindavan C. Moses, ‘Panchama Land in Tamil Nadu’ in M. Thangaraj (ed.) Land Reforms in India, Tamil Nadu: An Unfinished Task, Volume 9, Sage Publications, New Delhi, 2003, p. 130.
5. For more details, see ‘The New Resistance: Dalits and the Politics of Caste’, Frontline, 18 November-1 December 1995, Vol. 12, No. 24; The Sunday Statesman (Calcutta edition), 15 September 2002.
6. Broken People, op.cit., p. 82.
7. M.S.S. Pandian, ‘Stepping Outside Histroy? New Dalit Writings From Tamilnadu’ in Partha Chatterjee (ed.) Wages of Freedom: Fifty Years of the Indian Nation State, Oxford University Press, New Delhi, 1998, p. 292.
8. Ibid., p. 293.
9. The claim to equality which is often couched in the language of rights inevitably endorses the nation state as the sole arbiter of citizenship claims. This involvement of the nation state brings forth a homogenizing desire, resulting in innumerable number of differences. For more details, see Ibid.
10. M.S.S. Pandian, ‘New Dalit Writings From Tamilnadu’, op.cit., p. 294.
11. Ibid., pp. 294-295; see also, M.S.S. Pandian, ‘"Denationalising" the Past: "Nation" in E.V. Ramaswami Naickar’s Political Discourse’, Economic and Political Weekly, 16 October 1993.
12. M.S.S. Pandian, ‘New Dalit Writings From Tamilnadu’, op.cit., p. 295.
13. Ibid., p. 296.
14. For him the culture of the Tamil nationality needs to be explored as it was often discussed in the context of the Indian nation. In fact, several contradictory elements were seen to exist within Tamil culture. In a sense, the culture of the Brahminised upper castes widely differed from that of the Dalits, a result of the subjugation of the latter by the former. For more details, see Ibid., p. 302.
15. M.S.S. Pandian, ‘New Dalit Writings From Tamilnadu’, op.cit., p. 303.
16. The depiction of the Dalits as authors of the Indus Valley civilization was restricted not simply within the boundaries of Tamilnadu or other parts of the erstwhile Madras Presidency. In the case of Punjab, the lower caste leaders owing allegiance to the Adi Dharm movement traced their identity to an ancient civilization that had been destroyed by the Aryans. In UP, the Chamar leader Swami Acchutananda articulated the view that ‘untouchables’ were the first inhabitants of India, the rightful owners of the land. The Aryans were alleged to have destroyed their culture and civilization and transformed them into ‘untouchables’ in the society. Swami Acchutananda popularized the view that Adi Hindus had their roots in the Indus Valley civilization of Harappa and Mohenjo Daro. For more details, see Mark Juergensmeyer, Religion as Social Vision: The Movement Against Untouchability in Twentieth Century Punjab, University of California Press, Berkeley, 1982, pp. 2-3; Christophe Jaffrelot, India’s Silent Revolution: The Rise of the Lower Castes in North Indian Politics, Permanent Black, Delhi, 2003, pp. 201-202.
17. M.S.S. Pandian, ‘New Dalit Writings From Tamilnadu’, op.cit., p. 304.
18. Ibid.
19. Gowthaman stated that it was through beef eating and drinking that the resistance to upper caste disciplinary institutions could be built. For more details, see Ibid., p. 305.
20. Thirumaavalavan, Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers (Translated from the Tamil by Meena Kandasamy), Samya, Kolkata, 2004, pp. 51-53.
21. For more details, see M.S.S. Pandian, ‘New Dalit Writings From Tamilnadu’, op.cit., p. 308.
22. Ibid.
23. M.S.S. Pandian, One Step Outside Modernity: Caste, Identity, Politics and Public Sphere, Council for the Development of Social Science Research in Africa (Codesria), Sephis-Codesria Lecture No. 4, Amsterdam/Dakar, 2002, p. 20.
24. Ibid.

 http://www.india-seminar.com/2006/558/558%20raj%20sekhar%20basu.htm

Tuesday, October 15, 2013

மொழித் திறனை மேம்படுத்த ........

..

தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்று தனது மாணவர்கள் slang எனப்படும் கொச்சை மொழியைப் பள்ளியில் பயன்பட்த்த்தக்கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மாணவர்கள் "ain't", "like" "coz" "innit", "bare", "extra" "you woz" "we woz" போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாதென்று கூறியுள்ள பள்ளி நிர்வாகம் basically என ஒரு வாக்கியத்தைத் துவக்குவதோ  என முடிப்பதோ தவறு எனவும் அறிவித்துள்ளது. மாணவர்களின் மொழித் திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே இது செய்யப்படுகிறது என அவர்கள் விளக்கமளித்துள்ளனர். 

இன்று புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களைச் சந்தித்தேன். எங்களது உரையாடல் தமிழ் உரைநடை குறித்துத் திரும்பியது. முனைவர் பட்ட ஆய்வேடுகளின் அவல நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். வள்ளலாரின் உரைநடையிலிருக்கும் நவீனத்துவக் கூறுகள் பற்றி நான் அவரோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ஏற்கனவே தமிழ் உரைநடை சீரழிந்துகிடக்கிறது. அதுவும் ஆய்வேடுகளில் பயன்படுத்தப்படும் மொழியே மோசமாக இருக்கிறது. ஊடகங்களும், திரைப்படங்களும் இன்னும் மோசமாக அதை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. ' சூப்பர்' ' சான்ஸே இல்ல' போன்ற சொற்கள் இல்லாமல் இப்போதைய இளைய தலைமுறையால் பேசமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களும் அதை வலுப்படித்திவருகின்றன. 

லண்டன் பள்ளியின் நடவடிக்கையைப் பின்பற்றித் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அதுபோலத் தடைவிதித்தால் என்னமாதிரியான slang குகளை நாம் தடுப்பது? திரைப்படத் தமிழில் தல, ஊத்திகிச்சி, மட்ட, புட்டுக்கிச்சி, சரக்கு என நூற்றுக்கணக்கில் slang குகள் உருவாகிவிட்டன. வட்டார வழக்கு, சாதி வழக்கு, பிறமொழிக் கலப்பு ஆகியவற்றை slang என்று எண்ணிய காலம் மாறிவிட்டது. கல்லூரித் தேர்வுகளில்கூட மாணவர்கள் இத்தகைய கொச்சை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது மொழித்திறன் நசிந்துவிட்டது என பேராசிரியர் அ. ராமசாமி என்னிடம் வருத்தப்பட்டார். 

லண்டன் பள்ளியைப்போல தடை விதிக்காவிட்டாலும் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த நாம் சிலவற்றைத் திட்டமிடவேண்டும். குறிப்பாக காட்சி ஊடகங்களில் பணிபுரிவோரது பங்கு இதில் முக்கியம். நண்பர்கள் தமது ஆலோசனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளும்படி அழைக்கிறேன். 

Tuesday, October 1, 2013

காந்தியிடம் கற்போம்

:

” உயிரை இழக்க எவன் துணிகிறானோ அவனே அதைக் காக்க முடியும்”

ரவிக்குமார்

இன்று ( அக்டோபர் 02)  காந்தியடிகளின் பிறந்த நாள்.எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் பொருந்தக்கூடிய மேற்கோள்களை நாம் காந்தியடிகளின் எழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கமுடியும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் எளிமையாக வாழவேண்டியதன் தேவை குறித்து காந்தியடிகள் கூறியவற்றைப் பலரும் மேற்கோள் காட்டுவார்கள். ’காந்தி ஸ்பெஷலிஸ்ட்’ என வர்ணிக்கத்தக்க அளவுக்கு காந்தியைத் தனது’இன்ட்டலக்சுவல் ப்ராபர்ட்டி”யாக மாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, 2016 ஆகஸ்டு 13 இல் ஹிந்து நாளேட்டில் தான் எழுதிய கட்டுரை ஒன்றை இன்று ட்விட்டரில்பகிர்ந்திருந்தார். “‘Bapu in Beliaghata “ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் தந்திருக்கும் மேற்கோள் லாலு பிரசாத் யாதவ் , ரஷீத் மஸூத் ஆகியோரின் தண்டனை குறித்த பேச்சுகள் ஊடகப் பரப்பை நிறைத்துவரும் இன்றைய சூழலுக்குப் பொருத்தமானது என அவர் நினைத்திருக்கலாம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று அவரைச் சந்தித்து வாழ்த்துபெறுவதற்காக வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் அவர் கூறிய அந்த வார்த்தைகள் முக்கியமானவைதான்: “ இன்று நீங்கள் உங்கள் தலைகளில் முள்முடிகளைத் தரித்திருக்கிறீர்கள்.அதிகார பீடம் அருவருப்பானது. அங்கு நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். நீங்கள் மிகவும் உண்மையாகவும்,அகிம்சையோடும்,எளிமையாகவும், சகிப்புத்தன்மையோடும் இருக்கவேண்டும். நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சோதனைக்கு ஆளானீர்கள்.சொல்லப்போனால் அதுவொரு சோதனையே அல்ல. ஆனால் இப்போது உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் சோதனை முடிவற்றது. நீங்கள் பணத்தின் கவர்ச்சிக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. கடவுள் உங்களுக்கு உதவட்டும்! நீங்கள் கிராமப்புற மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவதற்காகத்தான் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று காந்தியடிகள் அவர்களிடம் சொன்னார்.

அதிகார வெறி, பணத்தாசை போன்றவற்றைக்காட்டிலும் காந்தியின் வார்த்தைகள் பயன்படக்கூடிய முக்கியமான இரண்டு பிரச்சனைகள்:  தீண்டாமை ஒழிப்பும், மகளிர் பாதுகாப்பும் ஆகும். தீண்டாமையை ஒழிப்பதற்காக நேரடியாக அவர் பல தீர்வுகளை முன்மொழிந்திருக்கிறார். அதுபோலவே பெண்கள் பிரச்சனையிலும் பலவற்றைத் தீர்வுகளாக முன்வைத்திருக்கிறார்.  இந்தப் பிரச்சனைகள் பல அம்சங்களில் ஒத்த தன்மை கொண்டவை என்பதால் ஒன்றுக்குச் சொன்னதை மற்றதற்குப் பயன்படுத்த முடியும். பெண்னியவாதிகள் கூறிய கருத்துகள் பலவும் தலித் பிரச்சனைக்குப் பயன்படக்கூடியதாக இருப்பது அதனால்தான்.

பெண்களின் பாதுகாப்புக்கென காந்தியடிகள் சொல்லியிருக்கும் ஒரு கருத்து ஒவ்வொரு நிமிடமும் சாதிய வன்கொடுமைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அதை இங்கே தருகிறேன்:

“ ஆணோ அல்லது பென்ணோ சாவைப் பற்றிய பயத்தையெல்லாம் விட்டொழித்திருந்தால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுவது அவர்களாலே முடியும். உண்மையில் சாவுக்கு அதிகமாக நாம் பயந்துவிடுகிறோம். இதனால் முடிவில் அதிகமானதாயிருக்கும் உடல் வலுவுக்குப் பணிந்துபோய்விடுகிறோம்.படையெடுத்து வந்தவனுக்குச் சிலர் முழந்தாளிட்டு வணங்கிவிடுவார்கள். சிலர் லஞ்சம் கொடுக்க முற்படுவர்.சிலர் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்வதற்கும் மற்ற அவமானகரமான முறைகளுக்கும் உடன்படுவர்.சில பெண்கள் சாவதற்குப் பதிலாகத் தங்கள் உடலையே ஒப்படைத்தும் விடுவார்கள்.குற்றம்கூறும் உணர்ச்சியுடன் இதை நான் எழுதவில்லை.மனித சுபாவத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறேன்.நமது வயிற்றினாலேயே நாம் ஊர்ந்து சென்றாலும் சரி, அல்லது ஒருவனுடைய காம இச்சைக்கு ஒரு பெண் இடங்கொடுத்துவிட்டாலும் சரி, இழிவானதொன்றைச் செய்வது உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைத்தான் காட்டுகிறது. ஆகையால் உயிரை எவன் இழக்கிறானோ அவனே அதைக் காக்க முடியும். “தேனத்யக்தேன புக்ஜீதா” . ஒவ்வொருவரும் இந்த ஒப்பற்ற சுலோகத்தை மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் வெறும் வாயளவு நம்பிக்கை போதாது.அது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி நிற்கவேண்டும். வாழ்வின் இன்பத்தை அனுபவிக்க வாழ்வின்மீதிருக்கும் ஆசையை ஒருவர் விடவேண்டும். அதுவே நமக்குச் சுபாவமாகிவிட வேண்டும்” ( மகாத்மா காந்தி நூல்கள் ,இரண்டாம் தொகுப்பு, தமிழாக்கம்: ரெ.வெங்கடராஜுலு, காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்,சென்னை, இரண்டாம் பதிப்பு , 1961, பக்கம் 690-691)

காந்தியடிகள் வன்முறை கூடாது என்றவர்தான் அகிம்சையை வலியுறுத்தியவர்தான்.ஆனால் தனது மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எத்தகைய அதிகாரத்தைத் தரும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். மரணத்தின்மீதான அதிகாரத்தை மிகவும் ஆற்றலோடு பயன்படுத்திய ஒரே தலைவர் அவர்தான்.அவரது உண்ணாநிலைப் போராட்டங்கள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் தலித்துகள் தமது உரிமையைப் பறித்துக்கொண்டவர் என்றுதான் காந்தியடிகளைக் கருதுகிறார்கள்.அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.என்றபோதிலும், தலித்துகள் காந்தியடிகளிடமும் கற்கவேண்டியவை இருக்கின்றன. ”தீண்டாத மக்களே ! உங்கள் இழிவுகளை யார் ஏற்படுத்தினார்களோ அவர்களே அதைத் துடைக்க உதவுவார்கள் என நீங்கள் எண்ணி ஏமாறாதீர்கள்! உங்களது உயிர் அச்சத்தை விட்டொழிக்காமல் உங்களது இழிவைத் துடைத்துக்கொள்ள முடியாது”. வாழ்வையும் மரணத்தையும் பற்றி காந்தியடிகள் சொல்லியிருக்கும் கருத்து இந்த செய்தியைத்தான் தலித்துகளுக்குக் கூறுகிறது.