Tuesday, April 26, 2011

புதிய வழிபாடு


அர்ச்சகர்கள் இல்லாத 
தேவாலயத்தில் 
வழிபடுவது எப்படியெனத் தெரியாமல்
அமர்ந்து கண்மூடி
இரந்து விழி திறந்தால் 

மண்டியிட்ட உன் பாதங்கள்

மடங்கிய விரல்களைத் தாண்டி
பளிங்குத் தரையின் சில்லிப்பு
உள்ளங்கால்களில் ஓடிக்கொண்டிருந்தது

நான் பார்க்கப் பார்க்க
பிரம்மாண்டமாய் வளர்ந்தன  
உன் பாதங்கள்

தரைக்கும் கூரைக்குமாய் 
வளர்ந்து நின்ற பாதங்களைக் 
கண்களால் தொட்டேன்
மனதுக்குள் 
ஒற்றிக்கொண்டேன்

No comments:

Post a Comment