Tuesday, January 31, 2012

கவிதை : நிக்கனோர் பர்ரா




நானும் என் சடலமும்
ஒருவரையொருவர் அற்புதமாகப் புரிந்துவைத்திருக்கிறோம்
என் சடலம் கேட்டது: உனக்குக் கடவுள்மீது நம்பிக்கை உண்டா?
நான் மனப்பூர்வமாகச் சொன்னேன் : இல்லை
என் சடலம் கேட்டது: நீ அரசாங்கத்தை நம்புகிறாயா?
நான் அரிவாளையும் சுத்தியலையும் காட்டினேன்
என் சடலம் கேட்டது: நீ போலீஸை நம்புகிறாயா?
நான் அதன் முகத்தில் ஒரு குத்து விட்டேன்
அது சவப்பெட்டியிலிருந்து எழுந்தது
நாங்கள் கைகளைக் கோர்த்தபடி
பலிபீடத்தை நோக்கிப் போனோம்

No comments:

Post a Comment