Sunday, June 15, 2014

திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவுங்கள்!



பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூடக் கற்பிக்கமாட்டோம் என மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தினர் வழக்கு தொடுத்திருப்பதையொட்டி ஆவேசமான பதிவுகள் முகநூலில் வெளிவந்தன. தமிழை வளர்ப்பதற்கு அரசு என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தால் நன்றாக இருக்கும். 


ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் இங்கே நம்மை நம்பிவந்த ஈழத் தமிழ் அகதிகளின்முகாம்களை எட்டிக்கூடப் பார்க்கமாட்டோம்; தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோர் எப்படி கஷ்டப்பட்டாலும் கண்டுகொள்ளமாட்டோம் என்பது தமிழர்களாகிய நமது பொது நடைமுறையாக இருக்கிறது. அதை முதலில் மாற்றவேண்டும். 


திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி தாய்த் தமிழ்ப்பள்ளியொன்றை நடத்தி வருகிறார். அங்கு பயிலும் 170 மாணவர்கள் 17 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், 5 ஆதரவற்ற முதியோர் என 192 பேருக்கு மதிய உணவு  வழங்கப்படுகிறது. சாதாரண உணவுக்கு 1000/- ரூபாயும் வடை பாயாசத்துடன் சிறப்பு உணவு வழங்க 2500/- ரூபாயும் செலவாகிறது.ஒவ்வொருநாளும் அதற்கான செலவை நல்லுள்ளம் கொண்ட யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். மிகுந்த சிரமத்துக்கிடையே அந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


கடந்த ஆண்டு இதுகுறித்து முகநூலில் எழுதினேன். அதைப் பார்த்த நண்பர்கள் சிலர் உதவினார்கள். எனது மதிப்புக்குரிய பேராசிரியை சி.டி.இந்திரா அவர்களும் ( சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)காட்சிப்பிழை பத்திரிகையின் ஆசிரியர் சுபகுணராஜன் அவர்களும் கணிசமாக உதவினார்கள். 


சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற முனைவர் திரு இளவரசு அவர்கள் இப்போது ஐம்பதாயிரம் ரூபாயை அந்தப் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. 


திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவ விரும்பும் நண்பர்கள்  9442622970 என்ற எண்ணில் பேராசிரியர் கல்யாணியைத் தொடர்புகொள்ளுங்கள். அல்லது 

Correspondent, Thai Tamil Thodakka Palli,Tindivanam. SB A/C no.444725319,Indian Bank, Tindivanam. Br. Code:393, IFSC code: IDIB000T023, CIF:0144658909


என்ற வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு அவரிடம் தகவல் சொல்லுங்கள். 

No comments:

Post a Comment