Wednesday, July 2, 2014

குஜராத்தில் அதிகம்!

மகளிர் அமைப்புகளின் கவனத்துக்கு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டைவிட குஜராத்தில் அதிகம்! 


2013 இல் இந்தியா முழுவதும் பெண்களுக்கு  எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் ( ncrb) வெளியிட்டுள்ளது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு எனத் தெரியவந்துள்ளது. 


ஆந்திரா 32809 கர்னாடகா 12207 கேரளா 11216 மகராஷ்டிரா 24895 தமிழ்நாடு 7475

தலைநகர் டெல்லியில் தமிழ்நாட்டைப்போல சுமார் ஒன்றரை மடங்கு குற்றங்கள் ( 12888)  நடந்துள்ளன. 


இன்றைய பிரதமர் திரு. மோடி 2013 இல் குஜராத் முதல்வராக ஆட்சிசெய்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது அங்கு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளின் எண்ணிக்கை 12283. இது தமிழ்நாட்டைப்போல ஒன்றரை மடங்கு! இப்போது அங்கு ஒரு பெண் முதல்வராகியிருக்கிறார். இனிமேலாவது நிலைமை மாறுமா?

No comments:

Post a Comment