Wednesday, February 18, 2015

விக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்



1. 
எவ்விதப் பிரயாசையுமின்றி
நோயைய் போலப் பெருகுகிறது 
காதல்
அது கவனிப்பதில்லை அறிவை
மரணத்தைப்போலவே

2. 
காற்றில் மிதக்கும் இறகு
காதல்
அது சூரியனைப் போன்றதும்கூட
எழுகிறது விழுகிறது
வருகிறது போகிறது

3. 

இரவைப்போல 
வருகிறது போகிறது 
காதல்
அது திரும்பவில்லையென்றால் 
ஒருவரின் ஆன்மாவில் ஒரு பகுதியைக் 
களவாடிப் போயிருக்கும்
அது திரும்பி வருமென்றால் 
ரத்தம் வடியும் இதயங்களைச் 
சூறையாடுவதற்காயிருக்கும் 

No comments:

Post a Comment