Monday, February 16, 2015

ஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்


==========
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்ட சிபிஐ எம் வேட்பாளர் 2326 வாக்குகளைப் பெற்றார். இப்போது அக்கட்சியின் வேட்பாளரால் 1552  வாக்குகளை மட்டும்தான் பெற முடிந்திருக்கிறது. இதனாலெல்லாம்
அவர்கள் மனம் தளர்ந்துவிட மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்பதை அவர்கள் மறுக்கமாட்டார்கள். 

இடதுசாரிகள் இப்படி பலமிழந்து வருவது அவர்களுக்கு மட்டும் நட்டமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே நட்டம் என்பதை நாம் உணரவேண்டும். சட்டமன்றத்தில் லாப நட்டம்
பார்க்காமல் மக்கள் பிரச்சனைகளைப் பேசுகிறவர்களாக அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாத சட்டமன்றத்தைக் கற்பனைசெய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. 

தேர்தல் அரசியல் என்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தெரியாமல் ஜனநாயக சக்திகள் கைபிசைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இடதுசாரி சார்புகொண்ட அனைவருமே கவலையோடு ஆராயவேண்டிய விஷயம் இது. 

No comments:

Post a Comment