Monday, March 21, 2011

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் - து.ரவிக்குமார் 2006 சட்ட மன்றத் தேர்தலில் கிடைத்த வாய்ப்பில் நிகழ்த்திய சாதனைகள்





குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள்
சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே குடிசை வீடுகள் குறித்த பிரச்சனையை எழுப்பி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குடிசைகள் அதிகம் உள்ள மாநிலம் என்பதையும் அதில் விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் குடிசைகள் அதிகமாக இருக்கின்றன என்பதையும் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டி  தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தியதாலும்; 2007ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூரை வீடுகளை காரை வீடுகளாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்த்தாலும், தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 21 இலட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முயற்சியினால் விளைந்த பயனாகும்.
நலவாரியங்கள்:
v நரிக்குறவர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரவாணிகளுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துத் தந்தது.

v வீட்டுப்பணியாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தது.

தலித் மக்களுக்கான நடவடிக்கைகள்:

v தலித் மக்கள் பெற்ற 85 கோடி ரூபாய்  தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தது.

v பஞ்சமி நிலங்கள் மீட்புக்கு தனி ஆணையம் அமைக்க வழி வகை செய்தது.

v 10ஆண்டுகளான தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ 15,000 வழங்க வழி வகை செய்தது.

v இந்தியாவிலேயே முதல்முறையாக ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்யும் சிறப்புக்கூறுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்து ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தலித் மக்களின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வைத்தது.

v உள்ளாட்சித் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஒரு நகராட்சி உட்பட 1300 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு வழி செய்தது.

v தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இப்போது முதல் தலைமுறையாக படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிற திட்டம் வருவதற்கு வழி வகுத்தது.

v சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு முறையாக நிதி ஒதுக்க வலியுறுத்தி அதை நிறைவேற்றச் செய்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்

பொது நடவடிக்கைகள்:

v இசுலாமிய மக்கள் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் எலும்புத்தூளால் உரம் தயாரிக்கும் தொழிலுக்கு வாட் எனப்படும் சேவை வரியிலிருந்து முழுமுற்றாக வரிவிலக்குப் பெற்றுத் தந்தது.

v ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றச்செய்தது.

v ஈழத்தமிழ் அகதிகளுக்கான பணக்கொடையை இரண்டு மடங்காக உயர்த்தியது.

v நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர்  மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வழி வகை செய்தது.

v உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Tank Operators) பணியாளர்களுக்கு ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்த வைத்தது.

v அரசு தொழிற் கொள்கையை  உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருவாக வழி செய்தது.

v மின்னணுக் கழிவு கொள்கையை  உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கான கொள்கையை உருவாக்க வழி வகை செய்தது.

v புவி வெப்பமயமாதல் ஆபத்தைக் குறைக்கவும், மின்சார பற்றாக்குறையைப் போக்கவும், அரசு அலுவலகங்களில்; குண்டு பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தற்போது அரசு அலுவலகங்களில் CFL குழல் விளக்குகள் பயன்படுத்த வழி செய்தது.

v பயிர் பாதுகாப்பில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒப்பிட்டுப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கச் செய்தது. அதுமட்டுமின்றி அந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் வட்டம் பிளாக் என்பது அடிப்படை அலகாக வைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கிராமம் என்பதை ஒரே அலகாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அதையும் இன்று நடைமுறைப்படுத்த வழி செய்தது.

v இளைஞர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

v நூலகங்களுக்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரி தற்போது 1,000 படிகள் வாங்குவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளோம்.

v சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபட உரிமை கோரிய ஆறுமுக சாமி அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுத் தந்தது.

தொகுதி நடவடிக்கைகள்:

v 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி மக்களின் கோரிக்கையான முட்டம், மணல்மேடு பாலத்தை அமைக்க வேண்டும் என்று வலியறுத்தி, அந்த பாலம் 65 கோடி ரூபாயில் அமைக்க ஏற்பாடு செய்தது. அதுமட்டுமல்லாமல் நாஞ்சலூர், கடவாச்சேரி ஆகிய இடங்களில் தலா 1 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

v தொகுதியில் இருக்கும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சாலை சிதம்பரம், புத்தூர் சாலை ஆகியவற்றை மாநில நெடுஞ்சாலையாக மேம்படுத்தியுள்ளது.

v தொகுதியில் இருக்கும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியது.

v அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எமது சொந்த செலவிலே 40 மாணவர்களுக்கு கணினி வாங்கித் தரப்பட்டுள்ளது.

v ஏழ்மையான நிலையில் உள்ள 10  மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஐ.டி.ஐ. தொழிற்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

v தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் ஏற்படுத்த கொள்ளிடம் பகுதியில் 115 கோடி ரூபாய் செலவில் கரையை உயர்த்துவதற்கும், வீராணம் ஏரியை ஆழப்படுத்தித் தூர்வாரச் செய்வதற்கும் பெரிய திட்டங்களை வகுக்கச் செய்து, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

v வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட ஓடைகளையும் அகலப்படுத்தவும், கரைகளை உயர்த்தி, ஆழப்படுத்துவதற்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்க நடவடிக்கை எடுத்தது.

v திருக்கோயில்களை இணைத்து ஆன்மீகச் சுற்றுலா என்று மேம்படுத்துவதற்கு கோரிக்கை விடுத்து திருநாரையூர், திருமுட்டம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை மேம்படுத்தியது.

v தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தலா 26 லட்சம் ரூபாயில் வெள்ளப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.

v ரெட்டியூர், நாஞ்சலூர், கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் சமுதாய நலக் கூடங்களை அமைத்தது. குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை உருவாக்கியது.

v நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 லட்ச ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்தது. 5 லட்ச ரூபாயில் மாணவர்கள் உட்காருவதற்கு பலகைகள், பெஞ்ச், நாற்காலிகள் அமைத்தது.

v குமராட்சி அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வழிவகை செய்தது.

v மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அரசு ஆதரவோடு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழகத்தில் அத்தகைய முதல் பள்ளி காட்டுமன்னார்கோயிலில் உருவாகச் செய்தது.

மேற்கண்ட சாதனைகள்  காட்டுமன்னார் கோயில் தொகுதி  மக்கள் எமது கட்சிக்கு அளித்த அங்கீகாரத்தினாலும் ஊக்கத்தினாலும் நிகழ்த்தப்பட்டவை. மீண்டும் தொகுதி மக்கள் வாய்ப்பளித்தால் இன்னும் பல வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்காகவும் கடலூர் மாவட்டத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

1 comment:

  1. இன்னும் பல வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்காகவும் கடலூர் மாவட்டத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ஆற்றுவேன் :
    ------------------------------------------------
    அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்கள் திட்டங்களை பட்டியலிட வேண்டுகிறேன்

    ReplyDelete