Saturday, June 30, 2012

தோரட் குழுவின் அறிக்கை

என்.சி.இ.ஆர் .டி பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் பொருத்தமற்ற விஷயங்களை அடையாளம் காண்பதற்கென அமைக்கப்பட்ட எஸ்.கே. தோரட் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டதாக நேற்று செய்திகள் வந்தன. அக்குழுவில் இடம்பெற்றிருந்த திரு.எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அந்த அறிக்கைக்கு மாறாகத் தனது கருத்துகளை ஒரு அறிக்கையாக அளித்திருக்கிறார் என இன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
தோரட் குழுவின் அறிக்கை தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதை அறிவிப்பதும், திரு. எஸ்.கே.தோரட் குழுவின் அறிக்கையையும் திரு. பாண்டியனின் அறிக்கையையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கடமை.  அம்பேத்கர் கார்ட்டூன் குறித்தும் , இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கார்ட்டூன் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மட்டுமின்றி அந்த கார்ட்டூன்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இதை வலியுறுத்தவேண்டும்.

No comments:

Post a Comment