Wednesday, October 29, 2014

கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் இந்துத்துவ அமைப்புகள்



ராஜேந்திர சோழன் முடிசூட்டிய ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடப்போவதாக சங்கப் பரிவார அமைப்புகள் அறிவித்திருப்பதை நகைமுரண் என்றுதான் சொல்லவேண்டும். ராஜேந்திர சோழன் கி பி 1017 ஆம் ஆண்டில் இலங்கைமீது படையெடுத்து சிங்கள அரசனாக இருந்த ஐந்தாம் மஹிந்தவை சிறைபிடித்து தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்தவன். இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தவன். இலங்கையை வெற்றிகொள்வதில் தனது தந்தை ராஜராஜன் பாதியில் விட்ட பணியை முடித்தவன். மத்தியில் ஆளும் பாஜக அரசோ இலங்கையை நட்பு நாடாகப் பார்க்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது. 

ராஜேந்திர சோழனைக் கொண்டாடுவது தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலுக்குப் பயன்படுவதைக்காட்டிலும் சிங்கள எதிர்ப்புணர்வை அதிகரிக்கவே உதவும்.

No comments:

Post a Comment