Saturday, June 30, 2012

பிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் ?




திருக்கொடுங்குன்றம் என ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற  பிரான்மலையில்  பாதாளம்  ஆகாயம் கைலாயம் என மூன்று அடுக்குகளில் அமைந்த மூன்று கோயில்கள் உள்ளன. ஆகாயம் என அழைக்கப்படும் நடுப் பகுதியில் உள்ள கோயிலில் சிறிய வெள்ளைப் பிள்ளையார் சிலை ஓன்று உள்ளது. அந்த சிலை இருக்கும் இடத்துக்கு எதிரில்  இருக்கும் மண்டபத் தூண் ஒன்றில் தடி ஊன்றிய நிலையில் இருக்கும் மூதாட்டியின் சிற்பம் ஓன்று செதுக்கப்பட்டுள்ளது.




அது காரைக்கால் அம்மையாரின் சிற்பம் எனக் கோயில் சிவாச்சாரியார் கூறினார். ஆனால் அந்த சிற்பத்தில் காரைக்கால் அம்மையாரின் கைகளில் காணப்படும் தாளங்களுக்கு மாறாகத் தடி இருப்பதால் சிவாச்சாரியாரின் கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை. 
இந்த சிற்பம் குறித்து வேறு ஏதேனும் குறிப்பு உள்ளதா ? யாராவது இதுகுறித்து எழுதியிருக்கிறார்களா ? 

No comments:

Post a Comment