Thursday, February 4, 2016

ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்


டஇன்று (04.02.2016) ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் வளாகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே வானொலி பிரிவில் பயிலும் மாணவர்கள் தமது நிகழ்ச்சிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். பிபிசி தமிழோசைக்குப் பெருமை சேர்த்த சம்பத்குமார் இப்போது அங்கே ஆசிரியராக இருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் அந்தக் கல்லூரியில் தமிழ்நாட்டவர்கள் குறைவு. ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் அச்சு, காட்சி ஊடகங்கள் இருந்தும் ஏன் இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் வருவதில்லை? என்று அந்த மாணவர்களிடம் கேட்டேன். ' தமிழ்நாட்டு மாணவர்கள் பொறியியல் படிப்பதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள்' என்று ஒரு மாணவி சொன்னார். பொறியியல் பட்டதாரிகள் பலர் டோல் பிளாசாக்களில்  வேலை பார்க்கும் கொடுமை அவருக்குத் தெரிந்திருக்காது!

No comments:

Post a Comment