Monday, March 19, 2012

மணற்கேணி ஆய்வரங்கம்





வணக்கம் 
மணற்கேணி இலக்கிய இருமாத இதழ் துவக்கப்பட்டு இதுவரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. செவ்வியல் இலக்கியம், தொல்லியல், மொழியியல், வரலாறு , சமகால இலக்கியம் எனப் பல்வேறு தளங்களிலும் ஆய்வுக் கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. 
சிறுகதை, கவிதைகள், விமர்சனம் என சமகாலப் அபடைப்பிலக்கிய முயற்சிகளுக்கும் உரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கும், படைப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து பல ஆக்கங்களை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. 
அண்டை நாடுகளான, இலங்கை, பாகிஸ்தான் முதலானவற்றைச் சேர்ந்த படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 
பெண்களின் படைப்புகளுக்கென 'ஆயம் ' என்ற சிறப்புப் பகுதி உருவாக்கப்பட்டு பிரத்யேகமாகத் தொடர்புகொண்டு பெறப்பட்ட படைப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. 
தமிழ்த் துறையைச் சேர்ந்தவர்களால் ஆய்விதழ் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மணற்கேணி தனது உள்ளடக்கத்தை சீராய்வு செய்து மேலும் சிறப்பாகப் பணியாற்றும் நோக்கத்தில் இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. 
உங்களது பங்கேற்பையும் மனம் திறந்த விமர்சனங்களையும் மணற்கேணி வரவேற்கிறது. 
அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி  

No comments:

Post a Comment