Friday, June 7, 2013

52 - சிவசேகரம்



சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே 
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள் 
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.

*25-7-83, 28-7-83 ஆகிய தேதிகளில் வெலிக்கடை (கொழும்பு) சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டோர் தொகை 52.

No comments:

Post a Comment