Monday, March 3, 2014

எஸ் சி/ எஸ் டி வன்கொடுமைத் தடுப்புத் திருத்த மசோதா - அவசர சட்டம்

எஸ் சி/ எஸ் டி வன்கொடுமைத் தடுப்புத் திருத்த மசோதாவை அவசர சட்டமாகப் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் அது நடைமுறைக்கு வரும். புதிய குற்றங்கள் சில வன்கொடுமைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்புக்கும் இதில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா பல மாதங்களாகக் கிடப்பில் இருந்தது. காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் முன்பே இதை சட்டமாக்கியிருக்க முடியும். பத்து இருபது தொகுதிகளுக்காக தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் அதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதத்தைக் காட்டியிருந்தால்கூட இது முன்னரே சட்டமாகியிருக்கும். அவசர சட்டம் எனக் காரணம் காட்டி இதை பாஜக எதிர்க்கும். ஒருபுறம் தலித்துகளை ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் இன்னொருபுறம் தலித்துகளைப் பகைவர்களாகப் பார்க்கும் பாஜக- இதில் யாரோ ஒருவரோடு சேரப்போகும் மாநிலக் கட்சிகள்.  இவர்களுக்கிடையில் தான் தனது கூட்டாளியைத் தேர்வுசெய்யவேண்டும் என்ற மோசமான நிலையில் தலித்துகள்! நல்ல ஜனநாயகம்! பேஷ் பேஷ் !!

No comments:

Post a Comment