Friday, March 28, 2014

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



நான் சொற்களால் உலகை வெல்வேன்
தாய்மொழியை
பெயர்ச்சொல்லை வினைச்சொல்லை
வாக்கியத்தை
துடைத்தெறிவேன் உற்பவங்களை
நீரின் சங்கீதத்தை நெருப்பின் செய்தியைக் கொண்ட
புதியதொரு மொழியால் 
எதிர்வரும் யுகத்துக்கு ஒளியைக் கொடுப்பேன்
காலத்தை உன் கண்ணில் நிறுத்துவேன் 
கணத்தை காலத்திலிருந்து பிரிக்கும் கோட்டை அழிப்பேன்

No comments:

Post a Comment