Friday, March 28, 2014

நிஸார் கப்பானியின் கவிதை 4 தமிழில் : ரவிக்குமார்


ஒரு மனிதன் காதல் வயப்படும்போது
எப்படி பழைய சொற்களைப் பயன்படுத்தமுடியும்?
ஒருவன்மீது
வேட்கைகொண்ட பெண்  
மொழியியலாளர்களோடும் 
இலக்கண ஆசிரியர்களோடும் 
கிடக்கமுடியுமா?

என் காதலியிடம் நான் 
எதுவும் சொல்லவில்லை
காதலின் அடைமொழிகள் அனைத்தையும்
ஒரு பெட்டியில் நிரப்பினேன் 
மொழிகள் எல்லாவற்றிலுமிருந்தும்
வெளியேறினேன்

No comments:

Post a Comment