Monday, September 8, 2014

அல்பேனியக் கவிஞர் விஷார் ஷைதி கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்





1. அதலபாதாளம்


எங்கள் தேசம் மரித்தோரிடையே வாழ்கிறது

வாழ்வோரிடையே மரித்துப்போகிறது


சில நேரங்களில் 


2. ஹோமரின் சமுத்திரம்


அந்த கடற்கரைக்கு நான்

அடிக்கடி செல்கிறேன் 

கடல் நீரில் என் காலணிகளை அவிழ்த்து விடுகிறேன்

என்ன நடக்கிறதென அறியேன் 

எனது காலணிகள் பெரிதாகி பெரிதாகி 

கப்பல்களாகின்றன 

அதில் ஏராளமான யுலிசஸ்கள்

கரைக்குத் திரும்புகிறார்கள் 


வெறுங்காலோடு அவர்களை வரவேற்கச் செல்கிறேன் 

தழுவிக்கொள்கிறேன்


3.சின்ன விஷயங்கள்


ஒரேயொரு இலையை வைத்துக்கொண்டு கானகத்தைப்பற்றிப் பேசமுடியுமா

ஒரேயொரு நட்சத்திரம்

நீங்கள் தனித்து இல்லை என்பதை உறுதிப்படுத்தும், 

கைவிடப்பட்ட ஒரு காலணி 

உயிர்ப்பிக்கிறது அந்தமில்லா சாலைகளை 

பரோமதீயஸின் நெருப்பில்

ஒரு சிகரெட்டைப் பற்றவை 



4. காலம்


எனது விரல்களில் தனது மோதிரங்களை அணிவிக்காமல் எப்படி அது நழுவிச் செல்கிறது


நான் வெறுமனே அதன் காதலனாய் இருக்கின்றேன்

No comments:

Post a Comment