Monday, March 16, 2015

காந்தியைப் பின்பற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டம்? -ரவிக்குமார்



இந்து மதத்திலிருக்கும் சாதி வேற்றுமையை நீக்க 'ஒரே கிணறு ஒரே கோயில் ஒரே மயானம்' என்ற செயல் திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பற்றப்போவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடிவுசெய்திருக்கிறது- (தினமலர் செய்தி)

கிணறு கோயில் மயானம் எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டுமென்றால் குடியிருப்பு ஒன்றாக இருக்கவேண்டுமல்லவா? அதைப்பற்றிப் பேசாததன் மர்மம் என்ன? ஊர் என்றும் சேரி என்றும் இந்தியாவின் கிராமங்கள் அத்தனையும் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றனவே அதை எப்படி ஒன்று சேர்ப்பீர்கள்? 

மத்தியில் இதற்காக சட்டம் கொண்டுவருவார்களா? பாஜக ஆளும் மாநிலங்களில் இதை செயல்படுத்துவார்களா? இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்சிலும் பிற பரிவார அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இருக்கமுடியும் என நிபந்தனை விதிப்பார்களா? 

அது என்ன மூன்று ஆண்டு கணக்கு?  ஆயிரம் ஆண்டுகளாக வளர்த்த பிரிவினையை மூன்று ஆண்டுகளில் சரிசெய்துவிடலாம் என அவர்கள் கருத வாய்ப்பில்லை. ஒற்றுமை என்ற போலி வாக்குறுதியைக் கொடுத்து தலித்துகளை இந்து மதத்தின் கோரப்பிடிக்குள் இறுத்தி வைப்பதற்கான தந்திரமே இது. 

காந்தியை எதிர்ப்பவர்கள் தீண்டாத மக்களை ஏய்ப்பதற்கு காந்தி கையாண்ட மோசடி வழிமுறையையே கடைபிடிக்க முயல்வது நகைமுரண் அல்லாமல் வேறென்ன? 

No comments:

Post a Comment