Thursday, September 10, 2015

ரவிக்குமார் கவிதைகள்

1.

' கொளுத்து ' என்று தமிழில்தான் கத்தினார்கள்
'கொல்லு' என்றும் தமிழில்தான் கூவினார்கள்
சாதியைச் சொல்லி தமிழில்தான் கேலிசெய்தார்கள்

'காப்பாத்துங்க' என்று அலறியது தமிழில்தான்
' கொழந்தப் புள்ளங்க' என்று கெஞ்சியதும் தமிழில்தான் 
' கடவுளே ஒனக்குக் கண்ணு இல்லியா' என்று அரற்றியதும்
' அநியாயம் செஞ்சவுங்களுக்கு நீதான் கூலி கொடுக்கணும்' என்று வேண்டியதும் தமிழில்தான் 

தமிழ்னு சொல்றோமே 
அது சாதி மொழியா?  
நீதிமொழியா?

2.

எரிக்கப்பட்ட வீடுகளின் 
கரி படிந்த சுவர்களில் 
எழுதிவையுங்கள்
எரித்தவர்களின் பெயர்களோடு
மௌனசாட்சிகளாய் இருந்தவர்களின்
பெயர்களையும்

1 comment: