Tuesday, September 8, 2015

ஒரு கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலை!


உயர்கல்வி பயிலக்கூடிய 18 முதல் 23 வயது வரையிலான மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு மகராஷ்டிராவில் 35 கல்லூரிகளும் ஆந்திராவில் 48 கல்லூரிகளும் கர்னாடகாவில் 44 கல்லூரிகளும் கேரளாவில் 34 கல்லூரிகளும் புதுச்சேரியில் 61 கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒருலட்சம் பேருக்கு 33 கல்லூரிகள்தான் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தென் இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவில் உயர்கல்வி தனியார் மயமான மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கிறது. ஆந்திராவில் 419 அரசுக் கல்லூரிகளும் கர்னாடகாவில் 600 அரசுக் கல்லூரிகளும் மகராஷ்டிராவில் 721 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் 314 அரசுக் கல்லூரிகள் மட்டும்தான் இருக்கின்றன. 

இந்தப் புள்ளி விவரங்கள் மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் AISHE 2012-13 அறிக்கையில் இடம்பெற்றுள்ளவையாகும். 

அறுபது ஆண்டுகால ஒரு கட்சி ஆட்சியில் தென்னிந்தியாவிலேயே உயர்கல்வி ஏழை எளிய குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட மாநிலமாக, உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுத்த மாநிலமாக, கல்வித் தரம் சீரழிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. 

இந்த நிலை மாற வேண்டாமா? இளைஞர்களே சிந்திப்பீர்!

ஒரு கட்சி ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்!

உயர்கல்வி செழிக்க திட்டம் தீட்டுவோம்!

No comments:

Post a Comment