Monday, September 14, 2015

எஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்



பேராசிரியர் கல்புர்கி படுகொலையைக் கண்டித்து இன்று மாலை சென்னையில் சரிநிகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும் தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் Readers Editor உம் ஆன திரு எஸ்.விஸ்வநாதன் அவர்களை சந்தித்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸில் week end என்ற பக்கங்களை அவர் தயாரித்த காலத்திலிருந்து அவரை நான் அறிவேன். அவர் Frontline ல் பணியாற்றியபோது சாதிக் கலவரங்கள் நடந்த இடங்கள் பலவற்றுக்கும் அவரை அழைத்துச் சென்ற நினைவு மனதில் எழுந்தது. 

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்தும் விதமாக அமைந்த அவரது கட்டுரைகளைத் தொகுத்து Dalits in Dravidian Land என நவயானா பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டதையும் அதற்கு முன்னுரை எழுத எனக்கு அவர் வாய்ப்பளித்ததையும் இன்றும் பெருமையாகக் கருதுகிறேன். 

பணி ஓய்வு பெற்றாலும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தது அவருள் இருக்கும் கடப்பாடும் அறச்சீற்றமும் குறைந்துவிடவில்லை என்பதைக் காட்டியது. ஊடகத் துறையில் பணியாற்றும் இன்றைய தலைமுறையினர் முன்னுதாரணமாக அவரை எடுத்துக்கொள்ளவேண்டும். 

இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக அவர் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். 

No comments:

Post a Comment