Sunday, January 23, 2011

தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை


அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஜனவரி 20 ஆம் தேதி அங்கு பணிபுரியும் நூலகர்களிடையே நான் உரையாற்றினேன். இந்திய அரசு உருவாக்கியிருக்கும் ‘ தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை ‘யின்( national book promotion policy ) வரைவு அறிக்கை குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் , நூலகத்தை மையமாக வைத்து மாநில அளவில் அப்படியொரு கொள்கையை உருவாக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேசிய அறிவுசார் ஆணையம் நூலகங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியும்  சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்களிடம் பேசினேன். அங்கு 96 நூலகர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலோர் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதே பிரச்சனையை முன்வைத்து நான் ஏற்கனவே சட்டப்பேரவையிலும் பேசியிருக்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்திருக்கிறேன். முதல்வரின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருக்கிறேன். இதுபற்றித் தமிழ்ப் பதிப்பாளர்களிடையே எவ்வித விழிப்புணர்வும் இல்லாதது வருத்தமளிக்கிறது.தற்போதிருக்கும் பொது நூலகங்களில் பத்து விழுக்காட்டு நூலகங்களைத் தேர்வு செய்து அவற்றின்மூலம் நூல் விற்பனையை மேற்கொள்ளலாம் என்ற எனது கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நூலகத்துறையில் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. அமைச்சரும், அதிகாரிகளும்   மனம் வைக்கவேண்டும். 










No comments:

Post a Comment