Saturday, January 22, 2011

"எனக்குஅவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் , அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு."




" பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றவர் அருமைச் சகோதரர் ரவிக்குமார் எம்.எல்.ஏ அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட தளபதிகளிலே ஒருவர் ஆவார் . அவரைத் தளபதி என்று நான் சொல்வதை நம்முடைய திருமாவளவன் ஏற்றுக்கொண்டிருப்பார் என்றே நான் கருதுகிறேன். திருமாவளவன் கையொலி செய்வதிலிருந்தே அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது - இவ்வளவு நூல்களா , நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நூல்களை - உலகத்திலே உள்ள பல தலைவர்களைப் பற்றி - பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத்தெரியும் . எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் , அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்கவேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம்தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன்."

“ ( 16.01.2011 அன்று தமிழக அரசின் சார்பில் பேரறிஞர் அண்ணா விருதை அளித்துத் தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை.
    நன்றி : முரசொலி 18.01.2011 )



1 comment:

  1. நன்றி தோழர்.
    http://tinyurl.com/4q9qssn
    நாங்கள் கடந்து இன்று வந்து வென்றிருக்கும் பாதையை எண்ணப் பெருமிதமாக இருக்கிறது.

    ReplyDelete