Friday, September 16, 2011

பி பி சி தமிழோசை : வானொலிக்காக எழுதுதல்





செய்தியை கேட்பதற்கும், செய்தியைப் படிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.ஒரு நாளேட்டையோ அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் நாம் மீண்டும் படிக்க முடியும். ஆனால் வானொலி அப்படியல்ல. அதில் சொல்லப்படும் செய்தி காற்றோடு போய்விடுகிறது. அதை நாம் மீண்டும் கேட்க முடியாது.  வானொலியில் செய்தி சொல்லும் நடைக்கும், பத்திரிகைகள் மற்றும் இணையதளம் போன்ற எழுத்து சார்ந்த ஊடகங்கள் மூலம் செய்தி சொல்லும் முறைக்கும் இடையே இருக்கும் முக்கியமான வேறுபாடு இதுதான்.

வானொலி மொழி என்பது, எளிமையானதாக, கேட்பவர்களை சிரமப்படுத்தாத ஒன்றாக இருக்கவேண்டும். ஏனென்றால் வானொலி மூலம் செய்தி கேட்கும் நேயர்கள், செய்தியை ஒரே ஒரு முறைதான் கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். எனவே, மொழி எளிமை என்பது மிகவும் முக்கியம். அதுமட்டுமின்றி பலதரப்பட்ட நேயர்கள் வானொலியைக் கேட்கிறார்கள். ஒரு பேராசிரியரும் கேட்கிறார், கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் கேட்கிறார். அந்த இரு தரப்பினராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக வானொலிச் செய்தி இருக்கவேண்டும்.

நீண்ட வாக்கியங்கள், சிக்கல் மிகுந்த சொற்றொடர்கள் ஆகியவை கேட்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும். எனவே முடிந்த வரை, சிக்கலான வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்களைத் தவிர்க்கிறோம்.

1 comment: