Sunday, January 18, 2015

தலித் பெண் எழுத்தாளர் தேன்மொழியின் மூன்று நூல்கள்





எழுத்தாளர் தேன்மொழியின் மூன்று நூல்களை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கவிஞராக அறிமுகமாகி சிறுகதை எழுத்தாளராக அங்கீகாரம்பெற்ற  தேன்மொழியின் மூன்று புதிய நூல்களை மணற்கேணி பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது.

கூனல் பிறை – 18 சிறுகதைகள் விலை 150/-
நீலவானை நெய்தல் – பாகிஸ்தான் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தமிழாக்கம் விலை 90/-
புலப்படா சுயம் – பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் விலை 60/-

                  ஆகிய மூன்று நூல்களையும் எழுத்தாளர் அம்பை ஜனவரி 5 ஆம் தேதி திருச்சியில் வெளியிட்டார். அம்பை பேசும்போது,    ” ஓவியத்தில் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம் என ஒரு வகை உண்டு. அதுபோல எழுத்தில் ‘ இம்ப்ரஷனிஸ்ட் எழுத்தைக் கொண்டுவந்திருப்பவர் தேன்மொழி.இது மிகவும் வித்தியாசமானதொரு முயற்சி. ஆனால் அவருடைய சிறப்பு என்னவென்றால் அதை அவர்  வலிந்துசெய்யவில்லை, இயல்பாகவே அப்படி எழுதியிருக்கிறார் . அவர்  கதைகளில் நாம் இதுவரை படித்திராத பல விஷயங்கள் வரும். நமக்கு மிகவும் தெரிந்த விஷயங்களைக்கூட அவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.” என்று குறிப்பிட்டார்.

தலித் பெண் எழுத்தாளரான தேன்மொழியின் படைப்புகள் ஆக்ஸ்போர்டு பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட தமிழ் தலித் எழுத்துகளின் தொகுப்பிலும், அவரது கவிதைகள் திரு கல்யாணராமன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ப்ரதிலிபி இணைய இதழிலும் வெளிவந்து பாராட்டப்பெற்றவை. ( http://blog.pratilipi.in/poems-thenmozhi/ )

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 2011 ஆம் ஆண்டில் அவரை இந்திய அளவிலான பத்து முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது. (http://archive.indianexpress.com/news/best-young-writers/817825/3 )

இந்த மூன்று நூல்களின் மொத்த விலை. 300/- ரூபாய். மூன்றையும் சேர்த்து வாங்குபவர்களுக்கு 200/- ரூபாய்க்கு கூரியர் மூலம் அனுப்பப்படும்.

நூல் வேண்டுவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு 97915 57360 என்ற தொலைபேசி எண்ணுக்கு முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

வங்கிக் கணக்கு :
Manarkeni Publication,
OD account 9601 140 0000 398 ,
Syndicate Bank, Pondicherry Branch ,
IFSC Code: SYNB 000 9601

No comments:

Post a Comment