Thursday, March 23, 2017

ஆர்.கே.நகர் : வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் திட்டமா?


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்றுவரை 127 ஆக உள்ளது. திரும்பப்பெறுதல், தள்ளுபடி செய்தல் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட 100 க்குக் குறையாது எனத் தோன்றுகிறது.  இதைப் பார்க்கும்போது அங்கு வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தச் செய்வதற்கு திட்டமிட்ட முயற்சி நடக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. 

ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்களுக்குமேல் களத்தில் இருந்தால் அங்கே வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமென தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன. 

வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார்கள் இருந்தாலும் அது அறிமுகம் செய்யப்பட்டதற்குப்பிறகு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியதாக புகார்கள் ஏதும் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்குப் பிறகு வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.


No comments:

Post a Comment