Saturday, July 23, 2011

தாராசுரம் ஓவியங்களைத் தொகுக்க வேண்டும்

பௌத்தம் தமிழ்நாட்டில் தழைத்திருந்த வரலாறு வரலாற்றாசிரியர்களால் மட்டுமின்றி கலை வரலாற்று அறிஞர்களாலும்கூட மறைக்கப்பட்டிருக்கிறது.அது குறித்த ஆய்வுகளைச் செய்யாமல் தமிழகத்தின் மெய்யான வரலாற்றை எழுத முடியாது. அதைப் பற்றித் தமிழ்நாட்டு அறிவுலகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிகழ்வின்போது அக்கோயிலில் இருக்கும் ஓவியங்கள் யாவும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டு அழகிய முறையில் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயிலில் இருக்கும் முசுகொண்டசுவாமி ஓவியங்களை இஸ்ரேலைச் சேர்ந்த அறிஞர் டேவிட் ஷுல்மான் அவர்கள் அற்புதமாகத் தொகுத்து அழகிய நூலாக வெளியிட்டிருக்கிறார். அதைப்போல தாராசுரம் கோயிலில் இருக்கும் இந்த ஓவியங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் சிறப்பாக இருக்கும். அரசாங்கத்திடம் மனு போட்டுக்கொண்டிருக்காமல் நாமே ஏன் அந்த முயற்சியை மேற்கொள்ளக்கூடாது?     

No comments:

Post a Comment