Sunday, July 22, 2012

மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்

 


வணக்கம்
மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது.
சிறப்புப் பகுதியில் கி.நாச்சிமுத்து,கோ.விசயவேணுகோபால், செ.வை.சண்முகம், வா.செ.குழந்தைசாமி,இரா.கோதண்டராமன், வீ.அரசு,பெ.மாதையன்,இந்திரா பார்த்தசாரதி , செ.ரவீந்திரன் உள்ளிட்ட பதினேழு பேர் அது குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஷார்ல் போதலேரின் கவிதைகள்
பாகிஸ்தான் எழுத்தாளர் சபின் சாவேரி ஜிலானி , தேன்மொழி, ரவிக்குமார், ஆகியோரின் சிறுகதைகள்
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் குறித்து விசயவேணுகோபால், எடக்கல் , சமணர் மலை கல்வெட்டுகள் குறித்து ராசவேலு கட்டுரைகள்
சங்க காலத்தில் கல்வி குறித்த க.ப.அறவாணனின் கட்டுரை
இ.அண்ணாமலை அவர்களின் நேர்காணல்

புகழ்பெற்ற பெண்ணியக் கோட்பாட்டாளர் லூஸி இரிகாரே வின் ' நமது உதடுகள் ஒன்றாகப் பேசும்போது ' என்ற கட்டுரை
ஈழம் தொடர்பான இரண்டு நூல்கள் குறித்து எம்.எஸ்.எஸ் .பாண்டியன் , துவாரகன் ஆகியோரின் கட்டுரைகள்
120 பக்கங்கள் விலை 60 ரூபாய் .

பிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

No comments:

Post a Comment